என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடலூர்
கடலூர்:
சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோட்டில் வசிப்பவர் பூவாராகசாமி மகன் சந்துரு (வயது 45). இவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மீதமுள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு சேதமடைந்துள்ளதால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, காலியாக உள்ள மற்றொரு கடையில் தனது மனைவி, மகனுடன் தங்கினார்.இன்று காலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதேபோல வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளதையும் கண்டார். இது தொடர்பாக சந்துரு சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு நகரின் மையப்பகுதியில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
சிதம்பரம் கொத்த ட்டையில் வசிப்பவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராவ் (வயது 65). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் போர்மேனாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் மூலம் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரவழைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றது. கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தினந்தோறும் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி, வில்வ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பில் சாலைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த குடிநீரானது சாலையில் தற்போது குளம் போல் தேங்கி வீணாகி வருகின்றன.
மேலும் இன்று காலை முதல் இந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது மட்டும் இன்றி ஒரு சில இடங்களில் சென்ற குடிநீர் முழுவதும் கலங்கலாகவும் வந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சீர் செய்யும் நடவடிக்கையாக முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதால் அவர்களிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனுமதி அளித்த பின்பு பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் செல்லும் குழாய் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான தேவையான குடிநீரை எந்தவித பாதிப்புகளும் இன்றி உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி கீழ்கவரப்பட்டை சேர்ந்த நாகையன் என்பவரது மகன் அரிச்சந்திரன் (வயது 56) என்பவர் பாண்டிச்சேரி சாராய பாக்கெட் வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அரிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), இவர் தற்போது பண்ருட்டி அடுத்த திருவதிகை வள்ளி கந்தன் நகரில் தங்கி இருந்து தனது மூன்று சக்கர ஆட்டோவில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடும் வாகனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள ஏ.மணி நகரில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக வீதியில் சுற்றித்திரிந்தார். இதனால்அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்த ஆடைகளை அவருக்கு அணிவிக்க முயன்றனர். அதை அணியாமல் நிர்வாணமாகவே மூதாட்டி சுற்றி திரிந்தார்.
தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர். பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இக்னைட் டிரஸ்ட் மூலம் கடலூர் ஓயாசிஸ் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பராட்டுகள் குவிந்து வருகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.
போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
- வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.
டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
மழைக்காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
தற்போது கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியது. ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 16 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 75 சதவீதமும், 40 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்