search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    • 19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
    • அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    21-ந்தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு 46-49, 53, 70, 72, 74-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
    • இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடக கலைஞர், திரைப்பட நடிகர், பாடகர் என்று பன்முகங் களை கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத் தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    இன்று காலை பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணி யன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த வக்கீல் டி.கே.கோபாலன் தலைமை தாங்கினார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம் பரம், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, நடிகை சச்சு, நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.மகாலிங்கம் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மகாலிங்கம், டி.ஆர்.வித்யா ஆகியோர் வரவேற்றனர். மாலை தென்கரையில் அமைந்துள்ள டி.ஆர்.மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    இதைத்தொடர்ந்து வெண்ணிறை ஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாட லுக்கு நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் பங்களா மூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தென்கரை தி.மு.க. கிளை செயலாளர் சோழன் ராஜா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    • 1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

    பதில்:- ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்பது எங்கள் கட்சி எடுத்த முடிவு. அவரது கட்சி முடிவு அல்ல.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல வாக்காளர்களை தினமும் அழைத்து சென்று பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்திய காட்சியை பார்த்திருப்பீர்கள்.

    தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவே இல்லை. அது மாநில அரசுக்கு துணை நிற்கிறது. போலீசார் துணை நிற்கிறார்கள். அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பண பலம், படை பலத்தை பயன்படுத்தி, அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில்தான் வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் குறைவாக வாங்கினோம்.

    எங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்து விட்டது. இனி ஏன் அங்கு போட்டியிட வேண்டும். போட்டியிட்டால் விடவா போகிறார்கள். ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள்.

    பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பார்கள். பண மழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. எனவேதான் அ.தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 36 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் பாடுபட்டார்கள்.

    கொட்டகையில் அடைத்து வைத்திருந்தால் அங்கு நானே நேரில் வந்து வாக்கு சேகரிப்பேன் என்று சவால் விட்டேன். உடனே அந்த வாக்காளர்களை பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக சுற்றுலா அழைத்து சென்றார்கள். அப்படி இருக்கும்போது அங்கு எப்படி சுதந்திரமாக தேர்தல் நடக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட மாட்டார்களா?

    பதில்:- தொண்டர்கள் எப்படி உற்சாகம் இழப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதால் அவர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.

    கேள்வி:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதே போல் சட்டமன்ற தேர்தலிலும் எல்லா இடத்திலும் தி.மு.க. வரும் என்று சொன்னார்கள். ஆனால் அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிகளை பொருத்தவரை 2 தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.

    இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம். அதில் அமைச்சர் தொகுதியில் 2 இடங்களில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

    அப்படியென்றால் இனி வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. அங்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஜெயிக்கவில்லையா?

    1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். எனவே மாறி மாறிதான் வெற்றி வரும். எல்லா தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி தோல்வி மாறி மாறிதான் வரும்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரத்தின் எக்ஸ் வலைதள பதிவு.
    • பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிட உத்தரவு.

    மதுரை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புக ழேந்தி காலமானதைடுத்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

    அதே வேகத்துடன் தி.மு.க. சார்பில் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைய டுத்து பா.ஜ.க. தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி அங்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி வேட்பாள ராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் யார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவானது, அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் (பா.ஜ.க.வில்) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ஆகும்.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று ப.சிதம்பரம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் நேற்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவர்களுக்காக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மதுரை:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற் காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வருகை தந்தார். அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நினறு கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத் துமாறு கூறினர். ஆனால் கார் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில் காரை அகற்றாவிட்டால் லாக் செய்து விடுவதாக கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கைகளை நீட்டியவாறு அவர்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    கவலைப்படாதீர்கள் 2026-ல் நம்மதான்

    மேலும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், தொண்டர் ஒருவர் உரத்த குரலில் 'கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்' என்று கூறினார். அதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

    • மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மண்டபம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம், பிரசாத், மண்டபம் முகமது அனீபா ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மண்டபத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றால் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விசைப்படகு கட்டுப்பாடின்றி தள்ளாடியது.

    தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக விசைப்படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.

    செய்வதறியாது தவித்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதில் பிரசாத், முகமது அனீபா ஆகியோர் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர்தப்பினர். ஆனால் மற்ற மீனவர்களான பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடல் சீற்றத்தால் மாயமானார்கள். அவர்களை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரைக்கு அவசரமாக திரும்பிய மீனவர்கள் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் படகு மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 2 மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தடை காலம் முடிந்து முதல் நாளிலேயே விசைப் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    • மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
    • கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது

    மதுரை:

    சந்தை நிலவரத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வரத்து குறைவு மற்றும் அதிகரிப்பு, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மார்க்கெட்டில் இன்றைய தானியங்கள் விலை நிலவரம் (கிலோவில்)

    துவரம் பருப்பு 1 கிலோ ரூ.186, பாசிப்பருப்பு-ரூ.112, பாசிப்பயறு-ரூ.110, உளுத்தம் பருப்பு-ரூ.140, பச்சை பட்டாணி-ரூ.98, வெள்ளை பட்டாணி-ரூ.49, கருப்பு சுண்டல்-ரூ.94, வறுகடலை-ரூ.98, மொச்சை-ரூ.132, சிவப்பு தட்டை பயறு-ரூ.98, மசூர் துவரை-ரூ.70, சீரகம்-ரூ.370, சோம்பு-ரூ.130, கடுகு-ரூ.70, வெந்தயம்-ரூ.78, மல்லி பெருவெட்டு-ரூ.95, மல்லி சிறியது-ரூ.90, மீல் மேக்கர்-ரூ.89, கேழ்வரகு-ரூ.42, காணப்பயறு-ரூ.76, கோதுமை-36, கம்பு-ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற மிளகு இந்த வாரம் 100 ரூபாய் உயர்ந்து 750 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த வாரம் ரூ.2,400-க்கு விற்ற ஏலக்காய் 300 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.2,700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து அதிக அளவில் வரக்கூடிய முந்திரி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலையறேற்றத்திற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் டி.என்.58-என்.1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்துள்ளது. அந்த கதவுகள் பின்புற வாசலில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையிலேயே இயக்கப்படுகிறது.

    இதனால் பின்புற படிக்கட்டை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்த போது வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    எதிர்பாராதவிதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

    ஆனாலும் இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேளைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மதுரையில் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நுரையீரல் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.
    • அவசர கால முறையில் சாலை போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    மதுரையில் சாலை விபத்தில் மரணமடைந்த 54 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

    இந்நிலையில் அவரது நுரையீரல் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் திருச்சி கொண்டு வரப்பட்டு, பின்னர் திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


    பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதற்காக அவசர கால முறையில் சாலை போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், 50 வயதுடைய நபருக்கு இந்த நுரையீரல் பொருத்தப்பட உள்ளது.

    • பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    • தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.

    மதுரை:

    மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அப்போதுதான் மீன்வளம் அதிகரிக்கும்.

    இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி, தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.

    எனவே எல்லா காலக்கட்டத்திலும் அதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் கச்சத்தீவு என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.

    அதன்படி பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளேன்.

    பா.ஜனதா கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். காமராஜர் தோல்வியுற்றபோது, நாம் தோற்று விட்டோமே என கட்சிக்காரர்கள் கூறினார்கள். அதற்கு காமராஜர், இதுதான் ஜனநாயகம் என பதில் அளித்தார்.

    பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. ஆனால் மோடி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.

    பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

    பா.ஜனதாவுக்காக நான் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. அ.தி.மு.க. தனது கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. ஆனால், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.

    இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த சமயம் அந்த பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் அங்கிருந்து தீயுடன் கூடிய புகையும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தபோது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

    அந்த ஆசாமிகள் மாரி முத்துவை பார்த்து என்றாவது ஒருநாள் பெட்ரோல் குண்டு வீசி உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். அப்போதுதான் மாரிமுத்துவை அவர்கள் கொலை செய்ய வந்தவர்கள் என்று தெரிந்தது. இந்த பெட்ரோல் குண்டு மாரிமுத்துவை குறி வைத்து வீசியபோது அந்த குண்டு அவர் மேல் படாமல் கடையில் மொட்டை மாடியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்ய பெட்ரோல் குண்டு வீசிய மோட்டர் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    அவர்களை மாரிமுத்து இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என்றும், எனவே அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி என்றால் அவர்களை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள்? அவர்களுக்கு இடையேயான முன்விரோதம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாட்டுத்தாவணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×