search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
    • புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

    உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

    ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போட ப்பட்ட குண்டர் சட்டத்தை கண்டித்தும், சிறையில் உள்ள விவசா யிகளை விடுதலை செய்ய கோரியும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சீர்காழி நகர தலைவர் கோவி.நடராஜன் தலைமை வகித்தார்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கணேசன், இயற்கை விவசாயி நலம்.சுதாகர், அபாஸ்அலி,அரவிந்தன்,செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஆ.ராமலிங்கம் ,ஜெக.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசா யிகள் பேரணியாக சென்று உ.அர்ச்சனாவிடம் விவசாயிகளின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.

    • பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார்.
    • பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காவேரி நகர் அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையின் கீழ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த அலுவலகத்தில் உள்ள ஏ.சி.அறை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என போலீஸ் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக அங்கு விரைந்து சென்ற அவர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனையடுத்து அவர் பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஜோடி மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்தனர்.

    அவர்கள் இருவரையும் அக்கோலத்தில் பார்த்த அந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அதில் அந்த ஆண் போலீஸ்காரர் அதே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் போலீஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை அளித்தார்.

    இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார். இச்சம்பவம் சகபோலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்கா ட்டில் பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யே ஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவிலாகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷகம் நடந்தது.

    முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தி னர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், சீர்காழி திருநிலைநாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    முன்னதாக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    தொடர்ந்து, புனிதநீரால் மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், பொன்னா கவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோவில் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசாமி கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    பின், மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கிளை நூலகம் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    சீர்காழி:

    நூலகத் தந்தை என போற்றப்படும் டாக்டர். எஸ்.ஆர். அரங்கநாதன் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சிறப்பாக சேவையாற்றும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி சீர்காழியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார்.

    பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் வரவேற்றார்.

    பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), தாசில்தார் அர்ச்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் விஜ யேஸ்வரன், விஜயபாரதி, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று இவ்வாண்டு சிறப்பாக சேவையாற்றிய 34 மாவட்டங்களை சேர்ந்த 34 நூலகர்களுக்கு அரங்கநாதன் விருது மற்றும் சான்றிதழ், வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.5ஆயிரம் காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும் மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்களை சேர்த்த மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற மாவட்ட மைய நூலகம் முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊர் புற நூலகங்களுக்கு தலா நான்கு கேடயங்கள் விதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டது.

    மாநில அளவில் சிறப்பாக பங்காற்றிய 13 வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர்கள் விருது வழங்கி பேசுகையில்,

    நூலகர்களுக்கு விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த விழாவினை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த முடிவு செய்த பின் முதல்வரை சந்தித்து கூறிய பொழுது நூலகத் தந்தை பிறந்த ஊரான சீர்காழியிலே விழாவினை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

    எஸ். ஆர். அரங்கநாதன் 1974 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றிய 20 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய பெருமை அவரையே சாரும்.

    பள்ளிக்கல்வித்துறை 234/77 என சட்டமன்ற தொகு திகளில் ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    கல்வித்துறை கடல் போன்றது இதுவரை 92 சட்டமன்ற தொகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆசிரியர்களும், நூலகர்களும் இரு கண்கள் போல் என்று பேசினார்.

    முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    • கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் அரசு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு வழங்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் அறிவுறுத்தலையின்படி நகராட்சி பணியாளர்கள் உதவியோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

    பல்வேறு கடைகளில் 50 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1600 அபராதம் விதிக்க ப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகள நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    இளநிலை உதவியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கலிய பெருமாள், பரப்புரையாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

    பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

    தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

    இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 51 வகையான சீர்வரிசை பொருட்கள் மேளத்தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக திரளான பக்தர்கள் 51 வகையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளத்தாளங்கள் முழங்கிட கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து பெருமாள் தாயார் எதிர்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அதன் பின்னர் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

    பாலாஜி பட்டாச்சாரியார், ரமேஷ் குருக்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மங்களநாணை அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை சேலத்தைச் சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஸ்ரீ சன்னியாசி ரிஷி மடம் மற்றும் சத்ய நாராயணன் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழைக்காலங்களில் வாடகை கட்டிடத்தில் மழைநீர் கசிந்தும், நூலக கட்டடங்கள் இடம் பெயரும் போதும் பல அரிய வகை நூல்கள் கிழிந்தும் சேதம் அடைந்து வந்தன.

    நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த சீர்காழியில் அவரது பெயரில் மாதிரி நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு களாக வாசகர்கள், பொது மக்கள் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கேள்வி நேத்தின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சீர்காழியில் அரங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.

    அதன்படி சீர்காழியின் மையப் பகுதியான மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் எஸ் .ஆர் .அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கானவசதி, போட்டித் தேர்வுக்கான வசதி, சிறுவர்கள் நூல்கள், மின் நூலகம், பெண்களுக்கான தனிப்பிரிவு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது .

    இதனிடையே இந்த நூலக கட்டடம் கட்டுமான பணியை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    கட்டடத்தின் அருகில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடமாற்றிவிட்டு அங்கு நூலக தந்தை அரங்கநாதன் சிலை வைத்திட விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து ஒரு மாத காலத்தில் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறக்கவும் அப்போது தெரிவித்தார்.

    ஆய்வின் போது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத்,மாவட்ட கலெக்டர் மகாபாரதி இணை இயக்குனர் அமுதவல்லி, கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செ ல்வம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ,நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணைத் தலைவர் சுப்பராயன் மாவட்ட பொருளாளர் அலெக்ஸா ண்டர், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒப்பந்ததாரர் அன்பழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    • மேற்கு கோபுர வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமாரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெ ருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சா ரியார்களால் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பொறு ப்பாளர் சரத்சந்திரன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால எழிலரசன்,பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அற ங்காவல ர்குழுத்தலைவர் சாமிநாதன்,நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கன்னியாகுடி ரெயில்வே கேட் பகுதிக்கு சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கன்னியாகுடி பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கேரள மாநிலம் அயன்சேரி பகுதியை சேர்ந்த விஜின் (வயது 40).இவர் கடந்த 12-ம் தேதி தான் தங்கியுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து கன்னியாகுடி ரயில்வே கேட் பகுதிக்கு பணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருப்புங்கூர் ரைஸ்மில் அருகே விஜின் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விஜினை வழிமறித்து அவரை மிரட்டி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். அதில் ஒருவர் விஜினின் சைக்கிளையும் எடுத்துச் சென்றார். ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் விஜினை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ 2 ஆயிரத்து 400 மற்றும் அவரது செல்போனை பிடுங்கி தங்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி ரூபாய் 6 ஆயிரம் போன் பே செய்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து விஜின் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் வைத்தீஸ்வரன் கோயில் அருகே புலவனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்,அபிஷேக் மற்றும் கடலூர் தர்மநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் விஜினை கடத்தி சென்று வழிப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×