search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.
    • உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளுடன் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்தார்.

    பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது குழந்தைகள் சாப்பிடுவதற்கு கேக் கேட்டனர்.

    இதையடுத்து முனியம்மாள், கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரிக்கு சென்று கேக் வாங்கினார்.

    பின்னர் கேக்கை வாங்கி கொண்டு தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டிற்கு சென்றதும், வாங்கி வந்த பார்சலை பிரித்து குழந்தைகளுக்கு கேக்கை ஊட்டினார். குழந்தைகளும் கேக்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

    வாயில் வைத்த சில நொடிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு மாதிரி இருந்ததால் உடனடியாக கேக்கை வெளியில் துப்பி விட்டனர்.

    இதையடுத்து முனியம்மாள் தான் வாங்கி வந்த கேக்கை எடுத்து பார்த்தார். அப்போது, கேக்கின் அடிபாகத்தில் பாசி பிடித்து படர்ந்து போய் இருந்தது.

    மேலும் அதில், இருந்து துர்நாற்றம் வந்ததுடன், புழுக்களும் அதிகளவில் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் அந்த கேக்கை எடுத்து கொண்டு தனது உறவினர்களுடன், கேக் வாங்கிய பேக்கரிக்கு சென்றார்.

    அங்கு சென்று கடை உரிமையாளரிடம் கேக்கை காண்பித்து இதில் புழுக்களாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இதை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு அவர், இதை கொடுத்து விட்டு புதிதாக கேக்கை வாங்கி செல்லுங்கள் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வரவில்லை.

    பல இடங்களில் இதுபோன்ற பழைய பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத்துறையினர் கோத்தகிரி பகுதியில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவிகள் உள்பட 13200 பேர் பங்கேற்றனர்
    • ஒரு நூல், நல்ல நண்பனுக்கு சமம் என கலெக்டர் பேசினார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது.

    இந்தநிலையில் நீலகிரி புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். நகைச்சுவை இமயம் சண்முகவடிவேல் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து நீலகிரியை சேர்ந்த இலக்கிய சொற்பொ ழிவாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் 16 பேருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலெக்டர் அருணா பேசியதாவது:-

    ஊட்டி என்பது இயற்கை எழிலுக்கு மட்டும் உரியது அல்ல. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பண்பாள ர்களுக்கும் உரித்தான பூமி. நாம் எத்தனை புத்தகங்கள் வாசிக்கிறோம் என்பதை பொருத்துதான் நம்முடைய அறிவு விசாலப்படும்.மேலும் வாசிப்பு பழக்கம் பொறுமையை போதிக்கும். கற்பனை ஆற்றலை பெருக்கும். படைப்பாற்றலை உருவாக்கும். மனி தனை மேன்மக்களாக்கும். எனவே அனுதினமும் வாசிப்போம்.

    ஒரு நல்ல நூல், ஒரு நல்ல நண்பனுக்கு சமம். ஒருசில நேரங்களில் நண்பர்கள் கூட பகைவராக மாறலாம். ஆனால் புத்தகம் ஒருபோதும் பகைமை கொள்ளாது.

    மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    இந்த புத்தக திருவிழா மாணவர்களுக்கு பள்ளி-கல்லூரி ஆண்டு விழாபோல மகிழ்ச்சி, குதூகலத்தை அள்ளி தந்து உள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் நீலகிரி புத்தகத்திருவிழா பொதுமக்களின் ஆதரவுடன் சீரும் சிறப்பு மாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஊட்டி சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னூர் புனித அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ-மாணவிகள் பங்கேற்ற வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கரகாட்டம், சமூக நாடகம் உள்ளிட்ட கலைநி கழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர்.நீலகிரி 10 நாள் புத்தக திருவிழாவில் ஒட்டு மொத்தமாக 13200 பேர் பார்வையாளராக கலந்து கொண்டனர். இவர்களில் 6275 பேர் மாணவ-மாண விகள்.அவர்கள் ரூ.9.06 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி புத்தக திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு சுந்தரவடிவேல், மாவ ட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்,ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ்,உதவி இயக்குநர்கள் இப்ராகிம்ஷா (பேரூரா ட்சிகள்), சாம்சாந்த குமார் (ஊராட்சிகள்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவண குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னையின் திருஉருவச்சிலையை ஊா்வலமாக எடுத்து வந்தனர்
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் ஜெபமாலை அன்னை திருவிழாவை கொண்டாடி வருகின்றனா்.அதன்படி ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருஇருதய ஆண்டவா் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.பங்குத்தந்தை ரவிலாரன்ஸ், உதவி பங்குத் தந்தை ஜுட்ஒன்க்ங் ஆகியோா் தலைமையில் தினமும் ஜெபமாலை ஜெபித்து வழிபாடு நடந்து வருகிறது.விழாவின் இறுதி நாளான நேற்று வாழும் ஜெபமாலை குழுவினா் சாா்பில் திருப்பலி நடைபெற்றது.

    முன்னதாக வாழும் ஜெபமாலை குழுத்தலைவா் சாா்லஸ் தலைமையில் நிர்வாகிகள் அன்னையின் திருஉருவச் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்து பலிபீடத்தில் வைத்தனர். அங்கு திருப்பலி நடத்தப்பட்டது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் ஊா்வலம் நடந்தது. இது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தோ் பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். 

    • மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா பங்கேற்றார்.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தக்குமார்,சார்பு அணியின் மாவட்ட கழக செயலாளர்கள் ரஜினி(எ) சிவக்குமார், குருமூர்த்தி, சாந்தா, குன்னூர் நகர செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட துணை செயலாளர் உஷா, அம்மா பேரவை மாவட்ட துணைசெயலாளர் கோபால்,ஒன்றிய செயலாளர் சக்கத்தா சுரேஷ், பேரூராட்சி செயலாளர் போளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்
    • குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

    இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். 

    • ஒப்பந்ததாரர் சுப்பிரமணி- தொழிலாளிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம்
    • போலீசார் சுரேஷ், ஆனந்தை மீண்டும் கைது செய்தனர்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த ஆண்டு சின்ன கரும்பாலம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இதில் கட்டுமான பணியில் சுரேஷ், ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்தப் பணியின் மேற்பார்வையாளராக சரவணன் என்பவர் இருந்தார் இதில் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததால் ஒப்பந்ததாரர் சுப்பிரமணிக்கும், தொழிலாளிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிரமணி குன்னூர் போலீசில் புகார் செய்ததன் பேரில் சுரேஸ் (வயது36), ஆனந்த் (வயது 40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மீண்டும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல வந்த மேற்பார்வையாளர் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மேலும் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் மீண்டும் சுரேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

    • கலசங்களுக்கு கணபதி பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    அருவங்காடு,

    குன்னூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் கலசங்களுக்கு கணபதி பூஜை, துவார பூஜை, ஆலய கருவறை நிலவு பூஜை நடத்தப்பட்டது.

    மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து கோவில் வந்தடைய ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு தீர்த்த நீரை ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆலயத்தில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  

    • ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன் குழுவினர் மும்முரம்
    • அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.ஸ்ரீதரன், தே.நந்தகுமார் அறிவுரைப்படி, ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன், ஊராட்சி செயலர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா ஊராட்சியில் தற்போது மக்கள் நலத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதிலும் குறிப்பாக 2022 மற்றும் 2023-ம் நிதியாண்டில் 15-வது நிதிகுழுமானிய திட்டம் மூலம் ரூ.98.87 லட்சம் மதிப்பிலும், ஜெ.ஜெ.எம்.திட்டம் மூலம் ரூ.404.29 லட்சம் மதிப்பிலும், ஊராட்சி நிதி திட்டம் மூலம் ரூ.49.94 லட்சம் மதிப்பிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.78.50 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மக்கள்நலத்திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 6.30 கோடி லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் செய்து சாதனை படைத்து உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின்ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

    அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட நவநகர், மூணார்க், ஸ்னோஸ்டவுன் முதல் ஜெம் பார்க் பகுதி வரை, தமிழகஅரசு நகர்ப்புற மேம்பாட்டு சாலை திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை 3-வது வார்டு அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி 3-வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துர்கா ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா ஆய்வு
    • மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்மன்ற தொகுதிக்குட்பட்ட குந்தா மேற்கு ஒன்றியம் சார்பில் தேர்தல் வாக்குச்சாவடி பூத் கமிட்டி, மகளிரணி இளைஞர்கள்-இளம்பெண் பாசறை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பொன்ராஜா கலந்துக்கொண்டு ஆய்வு நடத்தினார்.

    நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் தேனாடுலட்சுமணன், சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், சிவக்குமார் மற்றும் குந்தா மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்ஸஸ் சந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். 

    • ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்ததற்காக விருதுகள் வழங்கி பாராட்டு
    • எம்.கண்ணனுக்கு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக குன்னூரை சேர்ந்த எம்.கண்ணன் ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை மேற்கண்ட அமைப்பின் தேசிய தலைவர் மணிமொழியான் செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குன்னூர் எம்.கண்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இந்திய மக்கள் மன்றம் மற்றும் தேசிய பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்புகளின் தென்னிந்திய தமிழக அலுவலகம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×