search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
    • உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிங்கம்புணரி

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.60டி வீதம் 3 ஆண்டுக ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

    தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

    தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கி களில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனா ளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களி லும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்து ரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக 100 பேருக்கும், கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டவும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் உறைவிப் பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்கவும் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியின ருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம், ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப் படும்.

    200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின விவசாய தொழிலா ளர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க லாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • துவராள்பதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்டுகபட்டியில் துவராள்பதி அம்மன்-7 கம்பை தெய்வங்கள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

    கணபதி பூஜை, நவகிரக ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் முடிந்து முதற்கால யாக பூஜைகள் பூர்ணாகுதி உடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து மண்டப சாந்தி, பிம்பசுத்தி, லட்சுமி பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட இரண்டாம் கால பூஜைகள் பூஜைகள் நிறைவுபெற்றது.

    இதையடுத்து யாக சாலையில் இருந்த தீர்த்த குடங்களை ஏந்தி சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 16 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலை யரங்கில் நடைபெறுகிறது.

    இதில் சிறப்பு விருந்தினர் களாக சோகோ நிறுவனத் தலைவர் பத்ம ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, பூமி குழுமம் பன்னாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெய்குமார், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    விழாவில் 465 மாண வர்கள்,379 மாணவிகள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற உள்ளார்கள்.இதில் 16 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று தங்கப் பதக்கம் பெற இருக்கிறார்கள்.பிற்பட்ட கிராமப்புற இளையோர் நலன் கருதி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று இளங் கலையில் 19 பிரிவு களும், முதுகலையில் 7 பிரிவுகளும் உள்பட ஆய்வுப்பிரிவு, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகியவையுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது.

    பட்டமளிப்பு விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.
    • 3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோம நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    கடந்த 15-ந் தேதி முதல் நவராத்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் அம்மன் சன்னதி அருகே கண்ணைக்கவரும் வகையில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஆனந்தவல்லி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    தினமும் உற்சவ அம்ம னுக்கு பூஜைகள், தீபாரதனை கள் நடைபெற்று அதன்பின் துர்க்கை அம்மனுக்கு பூஜை கள் நடைபெற்று வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனையும் கொலு அலங்காரத்தையும் தரிசித்து செல்கின்றனர்.

    நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். தினமும் மாலையில் கோவில் மண்ட பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் வேதியே ரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் மகாபஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில்3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன்கோவில், செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

    • நாலுகோட்டையில் ரூ.5 ½ லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைத்தற்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறப்பட்டது.
    • வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வடக்கு ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதியினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

    இதனை நாலு கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கிளைச் செயலாளர் உடையப்பன், வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    நிழற்குடை அமைத்து நிதிஒதுக்கிய செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

    • சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை குலவையிட்டு பாடினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொட்டக்குடி ஊராட்சியில் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் நகர்.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மண் சாலை போக்குவரத்திற்கு மட்டுமின்றி, திருவிழா காலங்களில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு ஊர்வலத்துக்கும் முக்கிய பயன்பாடாக உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை இல்லாமல் மிகவும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் இந்த தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கூட தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. மாறி உள்ளது. இதனால் மழைநீர் கழிவு நீராக சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாற்று நடும்போது குலவையிட்டு தங்களது துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    • மருது பாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
    • சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலிகான், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • திருப்புவனத்தில் கருணாநிதி நூற்றாண்டு பூங்கா பொதுமக்களின் வரவேற்பை பெற்றது.
    • பூங்காவில் உள்ள மரக்கன்றுகளை பேரூரட்சி தலைவர் சேங்கைமாறன் பார்வையிட்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி யில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சேங்கைமாறன் பதவி வகித்து வருகிறார்.

    தற்போதைய பேரூராட்சி மன்றம் அமைந்தது முதல் திருப்புவனம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவை யான வடிகால், சாலை, சிமிண்ட்சாலை, பேவர் பிளாக் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    மேலும் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டும் நிலையில் தலைவர் சேங்கைமாறன் நேரடி பார்வையில் இக் குறைகளை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாக்கியா நகரில் பிரமாண்ட பூங்கா அமைத்து அதில் சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பேவர்பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்கு வந்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

    பெண்கள் மாலை நேரங்க ளில் பூங்காவில் உட்கார்ந்து தங்கள் குழந்தைகள் விளையாடுவதை ரசிக்கின்ற னர். இப் பூங்காவில் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைவர் சேங்கைமாறன் ஆலோசனைப்படி இங்கு தற்போது பலன் தரும் வாழை , தென்னை, மற்றும் பழ மரக்கன்றுகள், பூச்செடிகள் உள்ளிட்டவை நடப்பட்டு பேரூராட்சி பணியாளர்களால் பரா மரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரத்தில் கண்ணைக்கவரும் வகையில் மின்விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பூங்காவுக்கு திருப்புவனம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுகுறித்து தலைவர் சேங்கைமாறன் கூறுகையில், எங்களது கனவு திட்டமான இந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பூங்காவை அமைத்து பரா மரித்து வருகிறோம். தினமும் இப்பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நகரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதி களுக்கு நிதி ஒதுக்கி திட்டங்கள் நிறை வேற்றப்படுகிறது. அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    • அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை
    • அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை 9 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்த என அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

    மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்கிறது.

    • தேவகோட்டை மணிமுத்து ஆற்றில் 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் ஐப்பசி மாத முதல் தீர்த்த வாரியை முன்னிட்டு நகரில் உள்ள சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்தி பூங்காவை அடைந்தனர்.

    அதேபோல் தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அகத்தீஸ்வரர், சவுந்தர நாயகி அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் கோட்டூர், மார்க்கண்டன்பட்டி வழி யாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் காந்தி பூங்காவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் மணிமுத்தா ற்றில் எழுந்தருளினர்.

    அங்கு 7 சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரை சேர்க்கை யாளர்களும், நாட்டார்களும், நகரத்தார்களும் பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடு களை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

    ×