search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள வைகை இல்லத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்புக்குழு அலுவலர்களை நியமித்து, மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவல கங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் உரிய வசதிகளை செய்து தருதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளி கல்வித்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறும்பா ன்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மற்றும் நெடுஞ்சா லைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வைகை அணை பகுதியை பார்வை யிட்டு, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வைகை அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த 9ம் தேதி 71 அடி உயரம் கொண்ட அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 70 அடியில் நிலைநிறுத்தி வந்தனர். 10ம் தேதி மேலூர், கள்ளந்திரி மற்றும் 15ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி உள்பட அணையிலிருந்து 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. அணைக்கு 2001 கனஅடி நீர் வருகிறது. அணையி லிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 140 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர்.

    கூடலூர்:

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ள்ளது. கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநா ராயணன் கோவிலில் மாலை அணிந்து ெகாள்வது வழக்கம்.

    ஆனால் வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர். அருவியில் நீராடுவதற்கு வனத்துறை யினர் தடைவிதித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுருளி அருவிக்கு நீராட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். இதுமட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். தற்போது மழை நின்றுவிட்டதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரிக்கு திருமணமாகி 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தனது 13 வயது மகளுக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாதமாக சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற த்தில் நடந்து வந்தது.

    அரசு தரப்பில் வக்கீல் தவமணி செல்வி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

    • மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.
    • 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் முடிவுற்கு பயன்பாட்டுக்கு வந்தன.

    கம்பம்:

    கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை கம்பம் கிழக்குப் பகுதியில் முல்லைப்பெரி யாறு ஆற்றின் கரை யோரத்திற்கு சென்று தகனம் செய்து வருகின்றனர்.

    இங்கு மரக்கட்டைகள், வறட்டி உள்ளிட்டவைகளை கொண்டு உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதே போல் நகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவீன தகன மேடை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் இருந்து வந்தது. மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.

    இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழைக் காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடையின் தரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது, அதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வந்தன.

    இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் நவீன எரிவாயு தகன மேடை நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடை ந்ததையடுத்து கியாஸ் எரிவாயு பொருத்தப்பட்ட தகன மேடை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    இதையடுத்து தகனமேடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் தொண்டு நிறுவன த்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது.இதற்கு நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் வாசுதே வன்,நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் சுல்தான் சல்மான் பார்சி மற்றும் நகராட்சி பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • தேனியில் வெவ்வெறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்த கார்த்திக் தேனியில் உள்ள ஓட்டலில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனக்கு யாரும் இல்லை என கூறி புலம்பி யுள்ளார்.

    சிறிது நேரத்தில் ஓட்டல் மாடியில் அவர் தங்கி இருந்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்க ளுக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கண்டமனூர் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (55). கடந்த 3 வருடங்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. மாலையில் 133அடியை எட்டும்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 120 அடியாக இருந்த நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. 2407 கன அடி நீர் வருகிறது. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 133 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பம் பள்ள த்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயரும் என எதிர்பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. 705 கன அடி நீர் வருகிறது. 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடியாக உள்ளது. 133.30 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 0.2, சோத்துப்பாறை 5 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.

    • 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
    • கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 1½ கி. மீ தொலைவில் அமைந்துள்ள புதுக்காலனி பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் வஞ்சி ஓடை உள்ளது.

    போடி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த வஞ்சி ஓடையை தாண்டியதும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லை தொடங்குகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டி ருந்தது.

    நாளடைவில் இப்பகு தியில் விவசாயம் முற்றிலும் அழிந்து இப்பகுதி முழுவதும் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு தற்போது இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.

    தற்போது மழைக்காலம் என்பதால் பொதுப்ப ணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வஞ்சி ஓடைப்ப குதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி வஞ்சி ஓடை கரைகளை பலப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

    ஏற்கனவே சேதமடைந்த பாலத்தின் அருகே கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.

    இதனால் ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்க பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தநிலையில் இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்களால் உருவாக்கப்பட்ட பாலம் என்பதால் போடி நகராட்சி நிர்வாகமும் அணைக்கரை ப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைத்து தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே ஜெயம் நகர் விரிவாக்க பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • சோதனையில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது கேரள மாநில டோக்கன் லாட்டரிகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவா (வயது 48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

    தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறி யாளர் சதீஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் கட்டபணை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் உள்ளிட்ட குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிபகுதி மதகு பகுதிகளை ஆய்வு செய்த னர்.

    கசிவுநீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலையில் ஆலோசனை க்கூட்டம் குமுளி 1ம் மைலில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதன் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில்,

    அணையில் உள்ள 13 மதகுகளில் 2,4,5வது மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. மேலும் கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையில் வழக்க மான பணிகளை மேற்கொள்ள பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி குழு தலைவரை வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணைக்கு 1324 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. 635 கனஅடி நீர் வருகிறது. 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 124 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 21, பேக்கரி 27.4, கூடலூர் 2.8, சண்முகாநதி அணை 0.8, உத்தமபாளையம் 1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • பாலசமுத்திரம் தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
    • அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் கழிவுநீரோடு தேங்கி நிற்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு க்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்க ளுக்கு ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் இன்று காலை பள்ளி மாணவ-மாணவிகளுடன் பந்துவார்பட்டி, பாலசமுத்திரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்த னர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஊராட்சிமன்ற தலைவர் கனிராஜ் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    • சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.
    • வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரு கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகம் வழியாகவே கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    நாளை கார்த்திகை மாத பிறப்பையொட்டி இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.

    வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சத்திரம் வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அழுதகடவு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும் முக்குழி வழியாக காலை 7 மணி முதல் மதியம் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம். அங்கிருந்து சத்திரத்துக்கு திரும்ப காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை சீசனை யொட்டி பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விலை நிர்ணயம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டு ள்ளார்.

    பத்தினம்திட்டா, கோட்ட யம் மாவட்டங்களில் உணவு வகைகளின் தரம், அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×