search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

    கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

    இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்.
    • கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

    குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில், "தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்" என்று பேசியுள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

    பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதியை குலைத்தல், அவதூறு பரப்புதல் என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • அலுவல் ஆய்வு குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
    • விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டசபை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார்.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, சட்டசபை கூட்டத்தொடர் முன் கூட்டியே வரும் 20-ந்தேதி நடைபெறும்.

    * அலுவல் ஆய்வு குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    * விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டசபை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார் என்றார்.

    வருகிற 24-ந்தேதி கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    • நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
    • நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

    குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில், "தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்" என்று பேசியுள்ளனர்.

    தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அடவிநயினார் அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 4½ அடி உயர்ந்து 81.80 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக இன்று மேலும் 3½ அடி உயர்ந்து 85.15 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 104.26 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.33 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43.25 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் அடித்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட்டில் 24 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சி மற்றும் மாஞ்சோலை பகுதிகளிலும் தொடர்ந்து 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. செங்கோட்டை யில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் ராமநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 57 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 60 அடியை எட்டியுள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் 21.36 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 15 அடி நீரே தேவை. கருப்பாநதி அணையில் நீர் இருப்பு 29.86 அடியாக உள்ளது.

    இன்று காலை வரை குண்டாறு அணை பகுதியில் 4.8 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • நெல்லை மாநகரில் நேற்று பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாநகரில் நேற்று பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வள்ளியூர், ராதாபுரம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் அதிக பட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று கனமழை பெய்தது. பகலில் தொடங்கி மாலை வரையிலும் பெய்த கனமழையின் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 77.10 அடியாக இருந்த நிலையில், தொடர் கனமழையின் காரணமாக ஒரே நாளில் 4½ அடி உயர்ந்து இன்று 81.80 அடியை எட்டி உள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 91.14 அடியாக இருந்த நிலையில் இன்று 101.64 அடியை எட்டி உள்ளது. ஒரே நாளில் அந்த அணையின் நீர்மட்டம் 10½ அடியை எட்டி உள்ளது. நேற்று வரை 2 அணைகளுக்கும் வினாடிக்கு 850 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 2 கனஅடி நீர் அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.27 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 10.8 சென்டி மீட்டரும், ஊத்து பகுதியில் 9 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடு முடியாறு அணையில் 16 மில்லிமீட்டரும், கருப்பாநதி மற்றும் குண்டாறு அணை யில் தலா 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கருப்பாநதி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 20.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 58 அடியாகவும் இருக்கிறது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. மேலும் இதமான காற்றும் வீசியதால் ரம்மிய மான சூழ்நிலை நிலவியது.

    • தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.

    இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.

    பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

    வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.

    பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

    இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.

    சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    • மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டரும் மழை பெய்தது. மழையால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 850 கனஅடியாக இருந்து வருகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.10 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.08 அடியாக உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 3.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை வரை 62 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 41 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அம்பையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசியில் ஒரு மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷண நிலை நிலவி வருவதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    • உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேர் திருவிழா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

    மேற்படி 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

    மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை.
    • சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் கடந்த மாதம் 4-ந் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் உவரி அருகே கரைசுத்துபுதூரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    இந்த வழக்கை திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம், இதுவரையிலான விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி அன்புவிடம் சமர்ப்பித்து விவரங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்து புதூருக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெயக்குமாருக்கு சொந்தமான அந்த தோட்டம் சுமார் 7 ஏக்கர் அளவு கொண்டது. அதில் இதுவரை நெல்லை மாவட்ட போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடல் கிடந்த இடத்தில் இருந்து 1 ஏக்கர் அளவிலேயே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதனால் சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.

    இதற்காக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, இன்று காலை முதல் ஜெயக்குமாரின் தோட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதில் ஏதேனும் முக்கிய தடயங்கள் சிக்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    • தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "செட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

    நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.

    அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.

    இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.

    இந்நிலையில் 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

    இதனை தொடர்ந்து, செட் தேர்வு நடத்து வதற்கான விண்ணப்பங்களை பெற்று தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்த தேர்வில் கலந்துக்கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அந்த அறிவிப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்த தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
    • தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு ஏற்ப, ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

    இந்த நிலையில் சக்திவேல் (வயது 60) என்ற நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து விட்டதால் சக்திவேல் தவழ்ந்தபடி அவசர சிகிச்சை கட்டிடத்தை நோக்கி சென்றார்.

    இதனைப் பார்த்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், முதியவரை மீட்டு சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி மழையில் நனைந்தபடி தவழ்ந்து செல்வதும், அவரை மீட்டு ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×