search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள்.
    • பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

    மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.

    புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.

    பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார்.

    நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.

    ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை.

    தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ?

    எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா?

    இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம்.

    பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக தூத்துக்குடிக்கு சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலை அங்குள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்தும், சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தவாறும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வழக்கம்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    • இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகப்படுத்தி சூறாவளி பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த 2 தொகுதிகளும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் வைத்து 2 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கார் மூலமாக பிரசார கூட்டம் நடைபெறும் நாங்குநேரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேசுகிறார்.


    நாங்குநேரியில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நான்குவழிச்சாலையில் இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாகமுடன் செய்து வருகின்றனர்.

    நாங்குநேரி கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மீண்டும் சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு சென்று. அங்குள்ள தனியார் விடுதியில் இரவில் தங்குகிறார். மீண்டும் நாளை மாலை அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை செல்கிறார்.

    அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு இரவில் தங்குகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
    • நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது.

    தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லை மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கட்சியினர் பலரும் போட்டி போட்டு சீட் கேட்பதால் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு அக்கட்சியின் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என ஒரு பட்டாளமே டெல்லியில் முகாமிட்டுள்ளது. இதற்கிடை யே சீட் எங்களுக்கு தான் வேண்டும் என்று கட்சியினர் போட்டி போட்டு கோஷ்டிகளாக செயல்பட்டு சீட் வாங்க காய் நகர்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு நபரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என்று கூறி மற்றொரு தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்காக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு இன்று காலை திரண்ட ஒரு பிரிவு காங்கிரசார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த அந்த குறிப்பிட்ட நிர்வாகிக்கு சீட்டு வழங்கக் கூடாது, அவர் ராகுல் காந்தி பாதயாத்திரையின்போது அவரது உருவம் குறித்த பேனரை கிழித்தெறிந்தவர், கட்சிப் பணியில் ஈடுபடாமல் இருப்பவர் என்றும் கூறியதோடு, அந்த நபருக்கு சீட்டு வழங்கும் பட்சத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடும் அந்த குழுவினர், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம், பரிசு பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்று சோதனை செய்கின்றனர்.

    அந்த வகையில் நேற்று மாலை டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். காரில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் என்பவர் வந்தார். அவரது காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது.

    அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, நெல்லையில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருவதாகவும், வியாபாரம் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று சில கோவில்களிலும், நாளை (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படு கிறது. அதன்படி இன்று சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. எனினும் இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பா லான பக்தர்கள் அங்கு புறப்பட்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பகுதியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவ நல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை பங்குனி உத்திரத்தை யொட்டி இந்த கோவில்களில் மேலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மகா தேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார் குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில், அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்க ளிலும் இன்றும், நாளையும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை சாஸ்தா கோவில்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் பெரும்பாலான சாஸ்தா கோவில்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, வாடகை கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று வாடகை கார், வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. முக்கிய கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர பகுதி யில் மட்டும் சுமார் 40 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

    இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.

    தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.

    பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

    • பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் நிலையான குழுக்களும் சோதனை சாவடி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு நிலையான குழுவினர் அதன் அதிகாரி செல்லத்துரை தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.62 ஆயிரத்து 400 பணம் இருந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்த பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, பத்தமடை பகுதியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், அதற்கான மாத ஊதியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.

    • தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் விசுவாசம் என்ற 87 வயது முதியவர் வீட்டிற்கு நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12-டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன.

    மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்

    மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது.

    மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×