search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கலெக்டர் தகவல்
    • முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளது

    ஆம்பூர்:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் சார்பில் 100 சிறப்பு தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடத்தவும், அதில் திருப்பத்தூர் மாவட் டத்திற்கு 3 முகாம் நடத்தவும் அரசு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்பேரில் 2 வேலை வாய்ப்பு 'முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. 3-வது தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆம்பூர் இந்து மேல்நிலை ப்பள்ளியில் வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.

    எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், 8-ம் வகுப்பு முதல் பட்டயப்ப டிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.

    • நேருக்கு நேர் வேகமாக மோதியது
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்( வயது 28). இவர் தனது பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புலவர்பள்ளி ஏரிகரையில் எதிரே வந்த பைக் அரவிந்த் சென்ற பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.

    பைக்கில் வந்த அர்விந்த் மற்றும் வினோத்(30) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மாற்றம் செய்யப்ப ட்டனர்.

    இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.

    இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • ஜெயிலில் அடைத்தனர்
    • மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 22).

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் முகேஷை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    • கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
    • பொருட்கள் எரிந்து நாசமானது

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது 33). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடைக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது சவுகத் அலியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.

    இதனை தடுக்க வந்த சவுகத் அலியின் உறவினர் ஒருவர் மாற்றுத்தி றனாளியான அவர் இது குறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் தட்டி கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாற்றுத் திறனாளியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    நேற்று இரவு மீண்டும் சவுகத் அலி கடைக்கு மது பாட்டிலுடன் வாலிபர் வந்தார். அப்போது திடீரென மது பாட்டிலில் தீ வைத்து கடைக்குள் வீசினார்.

    இதில் கடையில் இருந்த சில பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சவுகத் அலி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை காட்சிகளை வைத்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர்.

    இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.

    இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • டி.ஐ.ஜி. அஞ்சலி செலுத்தினார்
    • மீட்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட் டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். உடனடியாக அங்கு விரைந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்த, வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த முரளி (வயது 45) என்பவரும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

    இதை தொடர்ந்து முரளி போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கேயேபடுத்து ஓய்வெடுத்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஒலித்த போது எடுக்காததால், சக போலீசார் எழுப்ப முயன்றனர்.

    அப்போது அவர் சுயநினைவின்றி இருந்ததால், கிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏட்டு முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான ஆம்பூருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தது.

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், ஏட்டு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், செந்தில் உள்ளிட்ட போலீசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஏட்டு முரளியின் வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    உயிரிழந்த ஏட்டு முரளி கடந்த 2003-ம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆம்பூர் தாலுக்கா மற்றும் டவுன், உமராபாத், வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலை யங்களில் பணியாற்றினார்.

    அவருக்கு திருமணம் மனைவி மற்றும் சஞ்சனா (7) என்ற மகளும், லோகித் (5) என்ற மகன் உள்ளனர்.

    • தூய்மை பணியாளர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த சில ஆண்டுகளாக புலவர்பள்ளி பகுதியில் கொட்டி அங்கு பிரித்து வந்தனர்.

    குப்பைகளை பிரித்து எருவாக்கும் வகையில் பயோ மெட்ரிக் செய்யாமல் அங்கு குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும்,பல்வேறு மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 10 நாட்களாக குப்பைகள் அங்கு கொட்டகூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்க கடந்த 15 நாட்களாக வரவில்லை என்றும் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல தூய்மை பணியாளர்கள் வராமல் தெருக்கள்,சாலைகள்,கழிவு நீர் கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் பரவி குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    மேலும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி பிரிப்பதற்கு புலவர்பள்ளி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கு குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்க குப்பைகிடங்கு கட்டுவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கு இதுவரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள கோமுட்டேரி என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் இடம் தேர்வு செய்து அங்கும் குப்பைகள் பிரித்து உரம் தயார் செய்வதற்கு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அங்கும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரும்பு ராடால் சரமாரி தாக்குதல்
    • கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

    இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைத்து அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைப் குடிநீர் குழாய் உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்ப ள்ளி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியபோது விபரீதம்
    • தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மயிலா (வயது 60). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது குடிசை வீட்டின் மேலே மின் ஒயர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் லேசான காற்று அடித்தது. அப்போது மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்தது.

    குடிசை தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    ×