search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணி வீரர்கள் துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தல்.
    • சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படுகின்றனர்.

    இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. தொடக்க சுற்று போட்டி செப்டம்பர் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது. ரோகித் சர்மா, பும்ரா, விராட் கோலி ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் முகமுது சிராஜ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உம்ரான் மாலிக்கும் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா "பி" அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜடேஜா தேசிய அணிக்காக விளையாடவில்லை. இலங்கை தொடரின்போதும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    ரஞ்சி டிராபியில் விளையாடி 41 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாதவ் இடம் பிடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடினார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார்.

    இந்தியா "ஏ" அணிக்கு சுப்மன் கில்லும், "பி" அணிக்கு அபிமன்யு ஈஸ்வரனும், இந்தியா "சி" அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்டும், "டி" அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யரும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர்.

    • கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது.
    • பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

    ஐசிசி-யின் அடுத்த தலைவராக பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த பொறுப்பில் அவர் இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தது, முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை துவக்கியது, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களின் பரிசுத்தொகையை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டினார்.

    இந்நிலையில் ஐசிசி-யின் தலைவராக நியூசிலாந்து நாட்டின் கிரேக் பார்க்லே இருந்து வருகிறார். 2020-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2022-ல் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே தற்போது 3-வது முறையாக தலைவர் பதவியில் இருக்க விரும்பாத அவர் தாமாக விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    ஆனால் ஐசிசி தலைவர் பதவியை அடைவதற்காக கிரேக் பார்க்லேவை ஜெய் ஷா வலுக்கட்டாயமாக பதவி விலகச் செய்ததாக சில இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் ஜெய்ஷா குறித்த விமர்சனங்களுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    ஜெய் ஷா அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டை போலவே ஐசிசி அமைப்பிலும் அவர் தலைவரானால் உலக அளவில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு பெரிய பயனை கிடைக்கும்.

    கிரேக் பார்க்லே 3-வது முறையாக தலைவர் பதவியை விரும்பாததால் விலகுவதாக சொன்னார். ஆனால் ஜெய் ஷா கட்டாயத்தில் அவர் விலகுவதாக பழைய சக்தி நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பார்க்லே மூன்றாவது முறையாக பதவி ஏற்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டால் ஐசிசி அமைப்பில் உள்ள பழைய சக்திகளின் பிரதிநிதிகள் மீட்டிங்கில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) என்ன செய்தார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இனிமேலும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற ஆதங்கத்தாலேயே அவர்கள் இப்படி குறை சொல்வதற்காக விரல் நீட்டுகிறார்கள். கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது. இருப்பினும் அணி வெல்லவில்லையெனில் ஸ்பான்சர்கள் வெளியேறி விடுவார்கள். எனவே பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியா இடம் பிடித்துள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணி விவரம் வருமாறு:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டி (விக்கெட் கீப்பர். உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது), பூஜா வாஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல் (உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது). சஜனா சஜீவன்.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    • இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன்.
    • உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. ஒருநாள் போட்டியில் அதிக வாய்ப்பு வழங்கியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து இவர் களற்றி விடப்பட்டார்.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்யும் வகையில் விளையாட விரும்புகிறேன். கடுமையாக உழைத்து புதிதாக வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டியில் முன்பே அறிமுகம் ஆகியிருந்தாலும், காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.

    எதிர்வரும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன். பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொள்வோம்

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது.
    • அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    துபாய்:

    ஐ.சி.சி. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    கடைசியாக கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 8 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 1 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வங்காளதேசத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அங்குள்ள துபாய், ஷார்ஜாவில் போட்டி நடைபெறுகிறது.

    இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது. பாகிஸ்தானை அக்டோபர் 6-ந் தேதி சந்திக்கிறது. இலங்கையுடன் 9-ந் தேதியும், ஆஸ்திரேலியாவுடன் 13-ந் தேதியும் மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    17-ந் தேதி முதல் அரை இறுதி துபாயிலும், 18-ந் தேதி 2-வது அரை இறுதி ஷார்ஜாவிலும் நடக்கிறது. இறுதிப் போட்டி அக்டோபர் 20-ந் தேதி துபாயில் நடைபெறுகிறது. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மாற்று தினம் (ரிசர்வ் டே) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் 2-வது இன்னிங்சில் அந்த அணி வீரர் முகமது ரிஸ்வான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரிஸ்வான் 2-வது பந்தை எதிர் கொள்வதற்கு முன் நடுவரிடம் தெரிவித்து விட்டு வங்கதேச அணியின் பீல்டிங்கை பின்னாடி திரும்பி பார்த்தார்.

    ஆனால் அதற்குள் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஓடி வந்தார். அப்போது ரிஸ்வான் அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால் கோபமடைந்த ஷகிப், தன்னுடைய கையில் இருந்த பந்தை முகமது ரிஸ்வானை நோக்கி வேகமாக வீசினார்.

    நல்லவேளையாக ரிஸ்வான் மீது படாமல் மேலே சென்ற பந்தை விக்கெட் கீப்பர் பிடித்தார். நடுவர் "ஏன் இப்படி செய்தீர்கள்" என்று ஷகிப்பிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் அப்போட்டியில்,'பந்து அல்லது விளையாட்டு உபகரணத்தை மற்றவர் மீது வேண்டுமென்றே எறிந்தார்' என்ற 2.9 விதிமுறையை ஷகிப் அல் ஹசன் மீறியதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே அதற்கு தண்டனையாக அப்போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் 1 கெரியர் கருப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    • டி20 மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நீடிக்கிறார்.
    • ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் அகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    லண்டன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 இருபது ஓவர், 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் செப்.11-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நீடிக்கிறார். இரு அணியிலும் ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹூல், ஜான் டர்னர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

    20 ஓவர் அணியில் டான் மவுஸ்லி, புதுமுக வீரராக இடம் பெற்றுள்ளார். 3 மாத தடைக்கு பிறகு ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்சி அணிக்கு திரும்பியுள்ளார். அதே நேரத்தில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் அகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் சேர்க்கப்படவில்லை.

    இங்கிலாந்து டி20 அணி:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

    ஒருநாள் அணி:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

    • டிசம்பர் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பிசிசிஐ செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

    3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் ஐ.சி.சி.யின் சேர்மனாக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதியாகும். ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கிறார் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஐ.சி.சி. புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய் ஷா ஐ.சி.சி. சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளராக மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

    தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோஹன் ஜெட்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் துவங்குகிறது.

    லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.
    • இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.

    இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் காயத்தால் இடம் பெறவில்லை. மேலும் முதல் டெஸ்டில் காயம் அடைந்து அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் தொடரை விட்டு விலகி உள்ளார்.

    இந்த நிலையில் தட்டையான ஆடுகளங்களில் பென் ஸ்டோக்சை விட மார்க் வுட் முக்கிய வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    நீங்கள் பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளத்தில் விளையாடும் பொழுது, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்சை விட மிக முக்கியமானவர் மார்க் வுட்தான். ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சாதகமாக இருந்த நிலையில், இலங்கை அணியின் தினேஷ் சண்டிமல் மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, காயத்தால் மார்க் வுட் வெளியேறியிருந்தது எவ்வளவு பின்னடைவாக இருந்தது என்பதை காண முடிந்தது.

    பாகிஸ்தானிலும் நியூசிலாந்திலும் இப்படியான ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை எடுக்க என்ன செய்வது என வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி விளையாடும் டெஸ்டுகளில் 60 முதல் 70 சதவீதம் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மார்க் வுட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அட்டவணையில் இந்தியாவை உள்நாட்டில் வீழ்த்துவதற்கும், ஆஸ்திரேலியா சென்று அவர்களை வீழ்த்துவதற்கும் மார்க் வுட் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருப்பார். இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.

    ஆர்ச்சர் கூட 95 மைல் வேகத்தில் தொடர்ந்து வீசியது கிடையாது. ஆனால் மார்க் வுட் அதை தொடர்ந்து செய்கிறார்.அவரது வெறித்தனமான வேகம் கொண்டு வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் உலகத்தில் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட்டில் நாம் பார்த்திராத ஒரு பையனாக அவர் இருக்கிறார். அவர் எதிரணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு நடுக்கத்தை உண்டாக்குகிறார்.

    இவ்வாறு வாகன் கூறினார். 

    • முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது.
    • ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும்.

    வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் வங்கதேசம் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்துக்கு முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் உகூறியதாவது:-

    முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது. நீங்கள் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்தீர்கள். இரண்டாவதாக நம்முடைய வேக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் நற்பெயர் முடிவுக்கு வந்துவிட்டது.

    இந்த தோல்வியை ஒரு நம்பிக்கை மீது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகும். இந்திய அணி ஆசியக் கோப்பையின் கடந்த ஆசியக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை வெளியில் காட்டிவிட்டது. இப்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

    நம்முடைய வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டது. 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் வங்கதேசம் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தார்கள். ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும். ஷான் மசூத் தற்பொழுது கேப்டனாக தோல்வியில் இருக்கிறார்.

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றுப் பொழுது சூழ்நிலை கடுமையாக இருந்தது என்று நினைத்தேன். பாகிஸ்தான் அணி அங்கு தொடரை வெல்வது சாத்தியம் கிடையாது. ஆனால் நீங்கள் இப்பொழுது சொந்த நாட்டில் வங்கதேசம் அணிக்கு எதிராக தோற்று இருக்கிறீர்கள். கேப்டனாக ஷான் மசூத் கண்டிஷனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

    மேலும் பிஎஸ்எல் மற்றும் கவுண்டி போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.

    • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
    • இதுவரை 6 முறை உலகக்கோப்பையை ஆஸ்திரேலுயா அணி வென்றுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.

    வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.

    இதனையடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை 6 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியானது, ஏழாவது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

    அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

    அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்

    ×