search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அடுத்த ஆண்டு நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கராச்சி:

    வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களது முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடந்தன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    இந்நிலையில், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சிக்கு பதில் ராவல்பிண்டியில் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

    அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும்.
    • நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான் என்றார் நாதன் லயன்.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாகும்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் கூறியதாவது:

    10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனாலும் நாங்கள் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்.

    நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.

    இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன். நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான்.

    இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

    எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும்போது அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை கண்டறிந்து நாம் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்றது.
    • டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் நடைபெற்றது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டை முன்னிட்டு 1977 ஆண்டு சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது

    டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார்.

    வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனந்தை ஒட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977 ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
    • 2-வது இன்னிங்ஸில் ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் துவங்கிய டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆட துவங்கியது. எனினும், அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான லூயிஸ் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பிரத்வைட் 25 ரன்களில் அவுட் ஆனார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 66.2 ஓவர்களில் 222 ரன்களை எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளையும், முல்டர் மற்றும் டேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. கைல் வெர்ரின்னே 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வியான் முல்டர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மகாராஜ் 0, வெர்ரின்னே 59, ரபாடா 6, பர்கர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    • இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா.
    • இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த மாதம் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்றி இருந்தார். தொடர் முழுதும் தனது மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் நாயகன்விருதைப் பெற்று அசத்தினார். தற்போது பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர். நிறைய சிறுவர்கள் பும்ரா பவுலிங் ஆக்சன் மூலம் டிரெண்டாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது ஒரு சிறுமி பும்ரா ஆக்சனில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    மேலும் பலர் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுமிக்கு வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் பும்ரா ஆக்சனில் பந்து வீசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர்.
    • விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர்.

    ஜஸ்ப்ரிட் பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

    கடந்த 2016-ம் ஆண்டு டோனி தலைமையில் ஜஸ்ப்ரிட் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின் 2017 - 2021 வரை விராட் கோலி தலைமையில் அவர் அதிகமாக வளர்ந்தார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர் என பும்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர். அவர் வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுவார். ரோகித் சர்மா மிகவும் கடுமையானவர் அல்ல. அவர் பவுலர்களின் கருத்துக்களை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார்.

    எம்எஸ் டோனி எனக்கு வேகமாக நிறைய பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார். டோனி எப்போதும் அதிகமாக திட்டமிடுதலை நம்ப மாட்டார்.

    விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர் எப்போதும் தனது இதயத்தை ஜெர்ஸியில் வைத்து விளையாடுவார். அவர் எங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர் தான் நடத்துகின்றனர்.

    இவ்வாறு பும்ரா கூறினார்.

    • 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்.
    • கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.

    சென்னை:

    சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதனால் அஸ்வின் தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தை நெருங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

    இதுவரை இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் கும்ப்ளே இருக்கின்றார். கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.

    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கான பதிலை அவர் 2017-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாம் 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

    இது குறித்து பேசியுள்ள அவர், நான் அனில் கும்ப்ளேவில் மிகப்பெரிய ரசிகர். அவர் 619 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதனால் நான் 618 விக்கெட்டுகள் வந்த உடனேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். அவருடைய சாதனையை நான் முறியடிக்க மாட்டேன். 618 விக்கெட்டுகள் வந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    நான் எப்போது 618 விக்கெட் எடுக்கிறேனோ அதுதான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று அஸ்வின் கூறியிருந்தார். அஸ்வின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாக இருக்கின்றது. கும்ப்ளே ஓய்வு பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கால் எடுத்து வைத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வாங்கிய அஸ்வின், அந்த தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 121 ரன்களும் அடித்திருந்தார். அஸ்வின் கும்ப்ளேவின் சாதனையை நெருங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள் ஆவது விளையாட வேண்டும். இதில் இந்திய அணி வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.

    இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டது. ஆனால், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

    மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    • வங்காளதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி ராவல்பிண்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

    அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

    வங்கதேச டெஸ்ட் அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி:

    ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

    ×