search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.
    • 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.

    ஒருநாள் போட்டித் தர வரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    தொடக்க ஆட்டம், அரை இறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப் போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரையிறுதி உள்பட 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பாதுகாப்பு கருதி மத்திய அரசு அனுமதி மறுப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாட தயார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி.யின் கூட்டம் கொழும்பில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அரசு அனுமதி மறுப்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

    இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவது கட்டாயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்து இலங்கையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

    • கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம்.
    • ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே மைதானத்தில் தகராறு ஏற்பட்டது. மூவரும் மைதானத்தில் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது, கம்பீரும், கோலியும் கட்டிப்பிடித்து தகராறுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே...

    இந்நிலையில், இந்த தகராறு முடித்து வைத்தது கவுதம் கம்பீர் தான் என்று மூத்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

    மேலும் அமித் மிஸ்ரா கூறுகையில், "கவுதமிடம் நான் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தேன். விராட் கோலி அவரை நோக்கிச் செல்லவில்லை. கவுதம் தாம் விராட் கோலியை நோக்கி சென்றார். அவர் சென்று 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது' என்று கேட்டார். எனவே கவுதம்தான் சண்டையை முடித்தார், கோலி சண்டையை முடிக்கவில்லை.

    அந்த நேரத்தில் கவுதம் தனது பெரிய மனதைக் காட்டினார். கோலிதான் சென்று சண்டையை முடித்திருக்க வேண்டும். அவர் சென்று 'கௌதி பாய், இதை முடித்துக் கொள்வோம்' என்று கூறியிருக்க வேண்டும்.

    கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம். ஆனால், ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    நான் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இன்னும் ஐபிஎல் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் ரோகித்தை சந்திக்கும் போது, அவர் எப்போதும் என்னை கேலி செய்வார். அவர் என்ன நினைப்பார் என்று நான் யோசிக்க தேவையில்லை.

    விராட் நிறைய மாறிவிட்டதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம். உங்களுக்குப் புகழும் அதிகாரமும் கிடைத்தால், மற்றவர்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தங்களை அணுகுகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

    • இந்த அணியில் மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
    • யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது.

    மும்பை:

    சமீபத்தில் உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. அப்போது உலக அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யுமாறு யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டிருந்தது.

    அதற்கு மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே கொண்ட உலக அளவில் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தார். அந்த மூன்று இந்திய வீரர்களில் டோனியின் பெயர் இடம் பெறவில்லை.

    யுவராஜ் சிங் தேர்வு செய்த அணி உலக கிரிக்கெட் லெவன்- சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.

    2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது. ஆனால் தனது சக வீரரான டோனியை அவர் இந்த அணியில் தேர்வு செய்யவில்லை.

    2007-ல் டோனி கேப்டன் பதவியை பெற்றதில் யுவராஜ் சிங்கிற்கு அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகவே, அவர் டோனியின் பெயரை தவிர்த்து இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    • கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
    • கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ரோகித் பாய் அல்லது மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் போன்ற அனைவரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் சிறந்த குணங்கள் உள்ளன. இருப்பினும் ரோகித் பாய் தலைமையில் நான் அதிகமாக விளையாடியுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். 

    அவர் தலைமையில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். உண்மையில் அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது.

    ஏனெனில் அது என்னை போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது. அதே சமயம் அழுத்தமும் இருக்கும். ஆனால் அதை எக்ஸ்ட்ரா அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். பேட்ஸ்மேனாக இருக்கும் போது கூட நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில் அழுத்தம் ஏற்படும். கேப்டனாக இருக்கும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அதில் அழுத்தமும் ஒன்றாகும். அதைத் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் போது கிடைக்கும் திருப்தி அற்புதமானது.

    இவ்வாறு கில் கூறினார்.

    • வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
    • நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

    15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    • முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
    • வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

     

    இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ்  நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.

    மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
    • 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெற்றிக் கோப்பையுடன் இந்தியா திரும்பிய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். பின்பு மும்பை மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து உலகக் கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு அவரது சொந்த மாநிலங்களில் வரவேற்பு மற்றும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    'ஹர்டிக் பாண்டியா வதோதராவின் பெருமை' என்ற திறந்தவெளி பஸ்சில் ஹர்திக் பாண்ட்யா வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
    • வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.

    • ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
    • ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    டேவிட் வார்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டிலும், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இப்படி அறிவித்ததையடுத்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னருக்கு பதிலாக அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம் பெற்றுள்ளார்.

    அவர் டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த டேவிட் வார்னருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது, "எங்கள் புரிதல் என்னவென்றால், டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என்பதை அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். 

    • டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை சுப்மன் கில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முடித்தது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

    முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 2019-2020-ல் நியூசிலாந்தில் நடந்த டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
    • கடைசி போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடும் போது, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. சிக்கந்தர் ராசா குதித்து டாஸ் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1964-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 166 ரன்கள் குவித்தார்.
    • 4 டெஸ்ட் மட்டுமே ஆடிய இபதுல்லா ஒரு சதம் உள்பட 253 ரன் எடுத்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பில்லி இபதுல்லா (வயது 88) நேற்று மரணம் அடைந்தார். டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக இன்னிங்சிலேயே சதம் அடித்த சாதனையாளர்.

    1964-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்டில் 166 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்டில் அவரும், மற்றொரு புதுமுக வீரர் அப்துல் காதிரும் முதல் விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தனர். இந்த நாள் வரைக்கும் இருஅறிமுக வீரர்கள் ஜோடியாக எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக நீடிக்கிறது. மொத்தம் 4 டெஸ்ட் மட்டுமே ஆடிய இபதுல்லா ஒரு சதம் உள்பட 253 ரன் எடுத்தார்.

    இவரது மறைவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூரவ எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளது.

    ×