search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் முதல்முறை நடத்த உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அறிமுக தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.

    அதன்பிறகு, இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்த உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025 ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. லாகூரில் அதிகபட்சம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
    • இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்தது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

    இதில், இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, ராகுல் தனது மற்ற துணை ஊழியர்களுக்கு வழங்கிய அதே பரிசு தொகையை (ரூ. 2.5 கோடி) விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டின் இந்த பெருந்தன்மையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இதுதான் ஒரு மனிதனின் அடையாளம். இதை தான் எல்லாரும் ரோல் மாடல் என்று அழைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
    • ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.

    ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இப்போட்டியில் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாடகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

    • ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
    • கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை :

    டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்தது. அது மட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பில்டிங் பயிற்சியாளர் தீலிப் ஆகியோரின் காலமும் முடிவடைந்துவிட்டது.

    இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்த சம்பளத்தை விட கூடுதலாக தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருக்கிறார். இதனால்தான் அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் மட்டும் சலுகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடியை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக ரூ. 21 ஆயிரம் வழங்கபட உள்ளது.

    இதை தவிர வெளிநாட்டிற்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியும் மற்றும் சலவை செலவுகள் ஆகியவற்றிற்கும் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இந்தியா 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. அடுத்து ஆடிய டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடியது. டியான் மியர்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றது.

    பாகிஸ்தான் 142 வெற்றியுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 111 வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது.

    • ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் களமிறங்கினர். இதில் சந்தோஷ் குமார் 8 ரன்னிலும் அடுத்து வந்த 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜெகதீசன் - ப்ரதோஷ் ரஞ்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெரில் 4, சித்தார்த் 23, அபிஷேக் தன்வர் 2 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனி ஆளாக போராடிய ப்ரதோஷ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஜிம்பாப்வே தரப்பில் டியான் மியர்ஸ் 65 ரன்கள் விளாசினார்.
    • இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவேரே- தடிவானாஷே மருமணி ஆகியோர் களமிறங்கினர். வெஸ்லி மாதேவேரே 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4, தடிவானாஷே 13, ராசா 15, ஜொனாதன் காம்ப்பெல் 1 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இந்நிலையில் டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டியான் மியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

    இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி துல்லியமாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கித் திணறியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    அந்த அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 27 ரன்னும், ஹோட்ஜ் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியா தரப்பில் சுப்மன் கில் 66 ரன்கள் குவித்தார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடி ஜெய்ஸ்வால் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து சுப்மன் கில் - ருதுராஜ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தொடர்வார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி20-யின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×