search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற

    மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.

    வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    • இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கவுதம் கம்பீர் வளர்ச்சியடைந்து வரும் கிரிக்கெட்டை அருகிலிருந்து பார்த்தவர்.

    தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை எதிர்கொண்டு, சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 

    • 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
    • தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    டி20 உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பார்படாஸ் மைதானத்தில் இந்தியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரொபைல் படமாக வைத்தார்.

    தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

    ரோகித் சர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாக கூறி அவரின் ப்ரொபைல் படத்தை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-இன்படி, தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. ஆனால் ரோகித் மண் தரையில் தேசிய கோடியை நட்டு வைத்து அவமதித்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

    • 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது சிராஜூ இடம் பிடித்தார்.

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது. இதனையடுத்து அணியில் இடம் பிடித்த வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் சேர்த்து ரூ. கோடியை பிசிசிஐ வழங்கியது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜூக்கு தெலுங்கானா முதலமைச்சர் அவரை பாராட்டி பரிசுகளை அறிவித்துள்ளார்.

    அந்த வகையில் தெலுங்கான முதலமைச்சரான ரேவந்த் ரெட்டி இந்திய வீரரான சிராஜை நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்கு மாநில அரசின் சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், அரசாங்க வேலையும் தரப்படும் உறுதி அளித்துள்ளார்.

    • தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
    • கவுதம் கம்பீருக்கு ஒரு அணிக்கு பயிற்சியளிப்பதில் அனுபவம் இல்லை.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் கவுதம் கம்பீர் இடையே நடக்கும் சம்பள பேச்சுவார்த்தையால், இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்து அவருக்கு முழு சுதந்திரம் வழங்கவும், தனியாக பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்காமல் அதுவும் கம்பீரின் மேற்பார்வையிலேயே நடக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் மூலம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தான் நியமிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    • நாளை தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிகான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
    • இந்த அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிகான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்:

    ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஷோயப் பாஷிர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    டெஸ்ட் தொடர் அட்டவணை விவரம்:

    முதல் டெஸ்ட்: ஜூலை 10-14 - லண்டன்

    2வது டெஸ்ட்: ஜூலை 18-22 - நாட்டிங்ஹாம்

    3வது டெஸ்ட்: ஜூலை 26-30 - பர்மிங்ஹாம்.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார்.
    • கோலி ஓய்வுக்கு பின்னர் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இப்போது தான் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2007-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல 2013-க்கு பிறகு இந்திய அணி ஐசிசி டிராபியை வெல்வதும் இதுவே முதல்முறை.

    இறுதி போட்டியில் விராட் கோலி எடுத்த 76 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டி தொடருடன் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விராட் கோலி முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார்.

    இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

    இந்நிலையில் மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டி வந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

    புதிய வீடு குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    எனது அலிபாக் வீட்டைக் கட்டுவதற்கான பயணம் ஒரு தடையற்ற அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் ஒன்றிணைவதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிய அவாஸ் குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி. இங்கு என் அன்புக்குரியவர்களுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க காத்திருக்க முடியாது.

    இவ்வாறு கோலி கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இதையடுத்து டி 20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.

    இதில், இந்திய அணியில் வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர்.

    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது.

    பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐசிசி தொடர்களில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் பெற்ற பரிசுகள் விவரம் வருமாறு:-

    2013ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அப்போது, உதவி ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

    2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு முதலில் வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசுத் தொகையை அறிவித்த வாரியம், அதன்பின்னர் ரூ. 2 கோடியாக மாற்றி அறிவித்து வழங்கியது. துணை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வெகுமதியாக வழங்கப்பட்டது.

    2007 ஐசிசி உலக டி20யை இந்தியா வென்ற பிறகு, ஒட்டுமொத்த அணிக்கும் 12 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

    • 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
    • விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.

    அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.

    2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

    ×