search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதனால், 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.

    பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    • இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது.
    • இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.

    புளோரிடா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 மணி நேரம் கழித்து ஆய்வு செய்த பின்னர் 5 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது. இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.


    அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி நடைபெறமால் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெறும். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

    இதனால் போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வேண்டி கொண்டிருப்பார்கள்.

    • யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல.
    • நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோயோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோயோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஃபிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஃபிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்.

    எனவே நீங்கள் யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் ஃபிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ-யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவேன் என கவுதம் கம்பீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.
    • எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது.

    2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது குரூப் சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடி வருகிறது. அடுத்து சூப்பர் 8 சுற்று முழுவதும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற இருப்பதால் இந்திய அணி அங்கு செல்ல உள்ளது. அமெரிக்காவில் இந்திய அணியின் கடைசி போட்டியில் கனடா அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது.

    இந்த நிலையில் அணியில் இருக்கும் நான்கு மாற்று வீரர்களில் சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கானை மட்டும் இந்தியாவுக்கு கிளம்பிச் செல்லுமாறு பிசிசிஐ கூறியுள்ளது. மற்ற இரண்டு மாற்று வீரர்களான ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது இந்திய அணியுடன் தொடர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும். எனினும், ஒவ்வொரு அணியும் கூடுதலாக சில மாற்று வீரர்களையும் சேர்த்து இந்த தொடருக்கு அறிவித்தது. இந்திய அணியும் நான்கு மாற்று வீரர்களை அறிவித்தது.

    அதில் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு தேவை இல்லை என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். மாற்று துவக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே, நான்காவது வீரராக இருக்கும் சுப்மன் கில்லை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    மேலும், வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள பிட்ச்கள் அனைத்தும் மந்தமானவை என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அங்கு அதிக வேலை இல்லை. ஏற்கனவே, 15 பேர் கொண்ட அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் ஹர்திக் பாண்டியாவும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். மாற்று வீரர்களில் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். எனவே, ஆவேஷ் கானை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை.
    • ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முக்கிய காரணமாக அமைந்தார்.

    கிட்டத்தட்ட 10 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய அணிக்கு திரும்பினார். அதுவரை பும்ராவால் மீண்டும் பழைய மாதிரி பவுலிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பும்ரா தனது பவுலிங் மூலமாக ஒட்டுமொத்த உலகிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் கிளென் மெக்ராத், லசித் மலிங்காவின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை. ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மிரட்டுகிறார்.

    பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்று. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.

    மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம். நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    • பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினால் இப்படிதான் நடக்கும் என பாகிஸ்தான் பத்திரைக்கையாளர் கூறியிருந்தார்.
    • இந்த பதிவுக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    டிரினிடாட்:

    20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

    இதன் மூலம் குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்நிலையில் நியூசிலாந்து அணி வெளியேறியதையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ஏப்ரலில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உலகக் கோப்பை 2024-க்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்த தொடரில் விளையாடாமல் நியூசிலாந்து சீனியர் வீரர்கள் ஐபிஎல் விளையாட சென்றனர். தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்காக விளையாடினால் இப்படிதான் நடக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு முன்னாள் நியூசிலாந்து வீரரான மிட்செல் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், எங்களது சி பக்கமான அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததை என பதிலடி கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
    • அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் யார் என்று ஷகிப் கேள்வி எழுப்பினார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.

    பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.

    என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.

    • சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.
    • ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.

    அந்த வகையில், இன்று காலை நடைபெற்ற தொடரின் 29-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இதன் காரணமாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் க்ரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது.

     


    க்ரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக க்ரூப் சி-யில் நியூசிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது. 

    • அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
    • பசல்ஹாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி துவக்கம் முதலே ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் டோனி உரா, கேப்டன் அசாத் வாலா முறையே 11 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லெகா சைகா மற்றும் சீஸ் பௌ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

     


    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இடையில் நிதானமாக ஆடிய கிப்லின் டோரிகா 27 ரன்களையும், அலெய் நௌ 13 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் 95 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

     


    96 எனும் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11 ரன்களிலும், இப்ராகிம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 49 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஓமர்சாய் மற்றும் முகமது நபி முறையே 13 மற்றும் 16 ரன்களை எடுத்தனர்.

    இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அலெய் நௌ, செமோ கெமியா மற்றும் நார்மன் வனுவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
    • பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

    அந்த வகையில், பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ஷேசாத் மற்றும் பாபர் என இருவரின் டி20 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள் கொண்டு ஒப்பீடு செய்யப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "புள்ளி விவரங்களை பார்க்கும் போது, நானே சிறப்பாக செயல்பட்டு இருப்பேன் என்று தோன்றுகிறது. உனது புள்ளி விவரங்கள் என்னைவிட மோசமாகவே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர்களில் 205 பந்துகளை எதிர்கொண்டு, நீ ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை."

    "உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை நீ அழித்துவிட்டாய். குழுவில் உள்ள உனது நண்பர்களுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. 22 வயது வீரரான சயிம் ஆயுப் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டியது உனது கடமை, ஆனால் இளம் வயதிலேயே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. வெறும் 25 போட்டிகளில் ஆயுப்-ஐ மக்கள் விமர்சிக்கின்றனர்," என தெரிவித்தார். 

    • அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து கட்டாயம் வென்றாக வேண்டும்.
    • லாடெர்ஹில்லில் தற்போது மழை பெய்து வருகிறது.

    லாடெர்ஹில்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    தனது முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (கனடா, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ள அமெரிக்காவுக்கு இது கடைசி லீக்காகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி சூப்பர்8 சுற்றுக்குள் கால்பதிக்கும். தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். இந்தியாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருந்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

    பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் (இந்தியா மற்றும் கனடாவுக்கு எதிராக) தோல்வியை தழுவியது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து கட்டாயம் வென்றாக வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு உருவாகும். மாறாக அயர்லாந்து தோற்றால் அதனுடன் சேர்ந்து பாகிஸ்தானும் மூட்டையை கட்ட வேண்டியது தான்.

    சர்வதேச 20 ஓவர் போட்டியில் அமெரிக்காவும், அயர்லாந்தும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

    லாடெர்ஹில்லில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை பெய்வதற்கு 85 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் அமெரிக்கா 5 புள்ளியுடன் அடுத்த சுற்றை எட்டி விடும். அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளின் கதை முடிவுக்கு வந்து விடும். போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உள்ளூர் நேரப்படி இரவில் தென்ஆப்பிரிக்கா-நேபாளம், நியூசிலாந்து- உகாண்டா அணிகளின் ஆட்டங்கள் தொடங்கினாலும் இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி முறையே மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி, காலை 6 மணிக்கு தான் தெரியும்.

    • 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி சார்பில் சோயப் கான் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (11) அடித்தார். இதன் மூலம் 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 12 மற்றும் 24 ரன்களை அடித்தனர்.

    பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில், இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஓமன் சார்பில் பிலால் கான் மற்றும் கலீமுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    ×