search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றிபெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
    X

    2வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றிபெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

    • டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 240 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

    இந்நிலையில், இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குசால் மெண்டிஸ் 30 ரன்னில் அவுட்டானார்.

    சமரவிக்ரமா 14 ரன்னும், சரித் அசலங்கா 25 ரன்னும், ஜனித் லியாங்கே 12 ரன்னும் எடுத்தனர்.

    7வது விக்கெட்டுக்கு வெலாலகேவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடினார். 72 ரன்கள் சேர்த்த நிலையில் வெலாலகே 39 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×