search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?: ஜெய் ஷா விளக்கம்
    X

    ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?: ஜெய் ஷா விளக்கம்

    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:

    பி.சி.சி.ஐ.யின் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களுக்கு இதுபோன்ற விரிவாக்கம் தேவைப்படுகிறது. ஆனாலும், வீரர்களின் பணிச்சுமையைக் கணக்கிட விரும்புகிறோம்.

    ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் 2025-26ல் 84 போட்டிகளாகவும், அதைத் தொடர்ந்து 2027ல் 94 போட்டிகளாகவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    84 போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். போட்டிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நீடித்திருக்க வாய்ப்புள்ளது.

    பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் முடிவு எட்டப்படலாம். இறுதி முடிவு பி.சி.சி.ஐ.யிடம் உள்ளது.

    ஆனால் வாரியம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கருத்துக்கள் இரண்டையும் சமமாக பரிசீலிக்கும்.

    அடுத்த ஐ.பி.எல். தொடரில் 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. போட்டிகளின் அதிகரிப்பால் வீரர்களின் சுமையை நாங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், பிசிசிஐ தான் 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×