search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    Dindigul Dragons Won
    X

    எலிமினேட்டரில் வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ்

    • இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர்.
    • ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    சேப்பாக் அணிக்கு துவக்க வீரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆக ஜெகதீசன் மற்றும் அபராஜித் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த வந்த பிரதோஷ் (19), டேரில் ஃபெராரியோ (4), சித்தார்த் (7) என சேப்பாக் அணி அடுத்தத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 72 மற்றும் 22 ரன்களை விளாசினர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரரான விமல் குமார் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் சரத்குமார் மற்றும் சுபோத் பாட்டி முறையே 12 மற்றும் 14 ரன்களை எடுத்தனர்.

    இதனால் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி குவாலிபயர் சுற்றின் 2 ஆவது போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    டிஎன்பிஎல் குவாலிபயர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

    Next Story
    ×