என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கால்பந்து
- என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை.
- நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன்.
இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக சுனில் சேத்ரி விளங்கி வருகிறார். இவர் திடீரென நேற்று சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
39 வயதான இவர் இந்திய அணிக்காக 19 வருடங்கள் விளையாடி 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரரும் ஆவார். ஜூன் 6-ந்தேதி இந்திய அணி குவைத் அணிக்கெதிராக விளையாடுகிறது. இதுதான் அவருடைய கடைசி போட்டியாகும்.
இந்த நிலையில் ஓய்வு முடிவை எடுத்தது குறித்து சுனில் சேத்ரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை. நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன். கடினமாக பயிற்சி மேற்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இந்த முடிவு மனநிலை அம்சங்கள் தொடர்பாக வந்தது.
ஓய்வு முடிவு உள்ளுணர்வாக வந்தது. ஒரு வருடம் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுவேன். அதன்பின் எவ்வளவு காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. அதன்பின் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
பயிற்சியாளராக ஆவது குறித்து நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அது குறித்து எனது ஓய்வு காலத்தில் யோசிப்பேன். தற்போது என்னுடைய எண்ணத்தில் அது இல்லை.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரை தவிர்த்து, விராட் கோலியிடம் எனது ஓய்வு குறித்து தெரிவித்தேன். அவர் எனக்கு மிகவம் நெருக்கமானவர். அவர் என்னை புரிந்து கொள்கிறார்.
இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
- சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் கீழ் 'சகோதரரே உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.
"உங்களின் கால்பந்து வாழ்க்கை அற்புதமானது. சந்தோசமாக ஓய்வை கொண்டாடுங்கள் லெஜெண்ட்" என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சுனில் சேத்ரியின் இந்த வீடியோவை பிசிசிஐ மற்றும் பல்வேறு ஐபிஎல் அணிகள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.
India Football captain Sunil Chhetri to retire on June 6. ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2024
What a ride this has been, skipper! 94 international goals, so many laurels, an unbroken conviction and you've inspired so many young Indians to dream big. ⚽️?
Happy farewell to the No.11 but India's #1,… pic.twitter.com/s3hEuXFjq3
- சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் இந்த அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
- பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளா
- ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே. 25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார். ஆனால், போட்டி டிரா ஆகி பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா கோப்பையை வென்றன. 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல் அடித்துள்ளார். 2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.
- ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாரீஸ்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் ஜோஸ்லு அடித்த கோல்களால் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
அரையிறுதியின் முதல் டெக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
- பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.
பார்சிலோனா:
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் ஒவ்வொரு கால்இறுதியும் இரண்டு ஆட்டங்களை கொண்டது. இதில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்) பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) இடையிலான கால்இறுதியின் முதலாவது சுற்றில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2-வது கால்இறுதி சுற்று பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ரொனால்டு அராவ் ஜோ சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பி.எஸ்.ஜி. அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.
இரண்டு கால்இறுதி சுற்றில் அடித்த கோல்களின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. 6-4 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 2021-ம்ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள பி.எஸ்.ஜி. அணி அடுத்து போரஸ்சியா டார்ட்மன்ட் (ஜெர்மனி) கிளப்பை சந்திக்கிறது.
- அபா அணிக்கு எதிராக ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- இந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து போட்டியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஐந்து முறை பலோன்-டி'ஆர் விருதை வென்றுள்ள அவர், தற்போது சவுதி ப்ரோ லீக்கில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல்-நசர் அபா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல்-நசர் 8-0 என வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்-தாய் அணிக்கு எதிராக ஏற்கனவே ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல்-நசர் அணி 5-1 என வெற்றி பெற்றிருந்தது. ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல் அடித்துள்ளார்.
இந்த சீசனில் அல்-நசர் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அல்-ஹிலால் முதல் இடம் பிடித்துள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் அலேக்சாண்டர் மிட்ரோவிக் 22 கோல்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும்.
- லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும்.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்ல் ஒளிபரப்புகிறது.
ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இத தவற விட்டுடாதீங்க என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
- ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
- ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.
மெஸ்ஸியின் மாயாஜாலத்தை எதிர்பார்த்து டிக்கெட் வாங்கிய ஹாங்காங் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்ப அளிக்க நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.
ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் கோபத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.
இதனால் போட்டியை முன்னெடுத்த நிர்வாகிகள் தரப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பப் பெறலாம் என்றும், ஆனால் சட்ட ரீதியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டணத்தை திருப்பித் தருவதால் 7.1 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் தோராயமாக 4,880 ஹாங்காங் டாலர் செலவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 38,000 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
ரசிகர்கள் நீதிமன்றம் அளவுக்கு செல்ல காரணமாக இருந்தது மெஸ்ஸி இதற்கு அடுத்த போட்டியில் விளையாடியதுதான். இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வெடுத்த மெஸ்ஸி, அடுத்த நாள் ஜப்பான் அணிக்கு எதிராக களமிறங்கினார் என்பதே ரசிகர்களை கொதிப்படைய வைத்திருந்தது.
- சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
- 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.
- உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள்.
ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டராக விளையாடுகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.
ஏனென்றால் இவர் தனது திருமணம் குறித்த தகவலை எக்ஸ் தள பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் யாருமே இல்லாத கிளப் அடிலெய்டு யுனைடெட் ஆடுகளத்தில் தனது வருங்கால பார்ட்னரிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முட்டிக்கால் போட்டு ப்ரபோஸ் செய்தார். உடனே லெய்டன் வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டார்.
மேலும் என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி.
உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள். இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன்.
இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது.
இவ்வாறு எக்ஸ் தளத்தில் கூறினார்.
ஆண்கள் கால்பந்து வீரர்கள் மறைமுகமாக ஓரினசேர்க்கையாளராக இருந்த போதிலும் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரே ஓரினச்சேர்க்கையாளர் கேவல்லோ ஆவார்.
- 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
- முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையேயான கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாஷ்வில்லே அணி மற்றும் இண்டர் மியாமி அணிகள் மோதின.
இந்த போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஃபுளோரிடாவில் தொடங்கிய இப்போட்டியில், 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் போட முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு சற்று மேல் நோக்கி சென்றது. எனினும், மியாமியின் மற்றொரு வீரர் லூயிஸ் சுவாரஸ் 8-வது நிமிடத்தில் மெஸ்ஸி பாஸ் செய்து கொடுத்த பந்தை கோல் ஆக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியிலும் மியாமி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில், மியாமி வீரர் ராபர்ட் டெய்லர் தலையால் அபாரமாக கோல் அடித்தார்.
கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த நாஷ்வில்லே அணி, 80-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. ஆனால் முக்தார் அடித்த அந்த கோல் ஆப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.
இறுதியாக 90+3 நிமிடத்தில் நாஷ்வில்லே அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் சாம் சுர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார்.
ஆட்டநேர முடிவில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்