search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • லக்‌ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமனில் முடிந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. ஹர்மன்பிரித் ஒரு கோல் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.

    அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், இந்திய அணி மொத்தம் 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
    • 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.

    இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
    • குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.

    இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • 1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
    • 1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் அதிகவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயம் செய்யும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் 'டாப் 8' வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

    முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷெல்வி ஆன்பிரேசர் பிரைஸ் (ஓமைக்கா) அரை இறுதியில் திடீரென விலகினார்.

    இதில் யாருமே எதிர்பார்க்காதவாறு அமெரிக்கா, ஜமைக்காவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். தீவு நாடான செயின்ட் லூசியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது. அந்த பெருமை ஜூலியன் ஆல்பிரட்டை சாரும்.

    1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது. அந்நாட்டை சேர்ந்த டியா கிளைடனால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    4x400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் நெதர்லாந்து தங்கம் வென்றது. அந்த அணி வீரர், வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 7.43 வினாடியில் கடந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தகுதி சுற்றில் புதிய உலக சாதனை படைத்த அெமரிக்காவில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த அணி 3 நிமிடம் 07.74 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. இங்கிலாந்து அணி 3 நிமிடம் 08.01 வினாடியில் கடந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    பெண்களுக்காகன டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் டொமினிக்சன் வீராங்கனை தியா லபோனட் 15.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.

    ஜமைக்காவை சேர்ந்த நிக்கெட்ஸ் 14.87 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை ஜாஸ்மின் மூர் 14.67 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் அமெரிக்க வீரர் ரியான் கிரவுசர் 22.90 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாஸ் 22.15 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவை சேர்ந்த கேம்பெல் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான டெகத் லான் போட்டியில் நார்வே வீரர் மார்க்ஸ் ரூத் 8796 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியை சேர்ந்த லியோ நியூ கெபூர் வெள்ளிப் பதக்கமும் (8748 புள்ளிகள்), கிரினிடா வீரர் லின்டன் விக்டர் வெண்கல பதக்கத்தையும் (8711 புள்ளிகள்) கைப்பற்றினார்.

    டெகத்லான் என்பது 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிந்து, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய 10 விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும்.

    • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
    • தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3-வது பதக்கத்தை நூலிழையில் தவற விட்டார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தார். வெண்கல பதக்கம் பெற்றார்.

    இந்த ஒலிம்பிக்கில் மனுபாக்கருக்கு முன்பு அர்ஜூன் பபுதா நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.

    மேலும் நேற்று முன்தினம் லப்பு அணிகள் வில்வித்தை பிரிவில் தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    கடந்த காலங்களில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

    அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

    • லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார்.
    • ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் நள்ளிரவில் நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி 8 நிமிடம் 11.04 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் பெற்ற 2-வது தங்கமாகும். ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் அவர் 9 தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.

    இதன் மூலம் லாரிசா (சோவியத் யூனியன், ஜிம்னாஸ்டிக்), பாவோ நூர்மி (பின்லாந்து, தடகளம்), மார்க் பிஸ் (அமெரிக்கா, நீச்சல்), கார்ல் லீவிஸ் (அமெரிக்கா, தடகளம்), டிரெசல் (அமெரிக்கா, நீச்சல்) ஆகியோருடன் லெடெக்கி இணைந்தார். இவர்கள் 9 தங்கம் வென்று இருந்தனர்.

    லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார். அவர் ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.

    • ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
    • காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

    இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட அதே அணிகள்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதி போட்டியில் மோதுவுள்ளன.

    காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தையும், ஜெர்மனி அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் ஸ்பெயினையும், நெதர்லாந்து ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.

    2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

    • டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
    • தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.

    தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.

    பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.

    தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

    இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ×