search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்
    • ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார்

    ஆஸ்திரியாவில் கிட்ஜ்புகேல் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஹுயேஸ்லர்- ஜெர்மனியின் ஆல்மையர் மோதினர். இதில் ஆல்மையர் 2-1 என வெற்றி பெற்றார்.

    முதல் செட்டை 7(7)-6(5) என ஹுயேஸ்லர் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் இழந்தார். இதனால் ஆல்மையர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓ'கானெல்-ஐ செர்பிய வீரர் எல். ஜெரே 2-0 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார். செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்.

    • ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
    • தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார்.

    செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். அந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார். இந்த செயலுக்காக அவருக்கு 8,000 டாலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம்.

    8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.

    சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள ஜோகோவிச், அது விரக்தியை ஏற்படுத்திய தருணம் எனவும், அல்கராஸ் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தினார் எனவும், வெற்றி பெற தகுதியான வீரர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி ஒன் தொலைக்காட்சியில் சுமார் 11.3 மில்லியன் பேர்கள் இறுதிப் போட்டியை கண்டுகளித்துள்ளனர். டென்னிஸ் மட்டையை உடைத்தது மட்டுமின்றி, நடுவர் கடிந்துகொள்ளும் நிலைக்கும் ஜோகோவிச் தள்ளப்பட்டார்.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.

    லண்டன்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

    கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 29-வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல, பெண்கள் ஒற்றையரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரிபாகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக உச்சிமுகர்ந்த செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார்.


    அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    • புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.
    • என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் தோல்வி குறித்து கண்ணீர் விட்டு ஜோகோவிச் பேசியது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.

    தோல்வி குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-



    20 வயதில் முதிர்ச்சி அடைந்த வீரர் போல் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். அவரது மன உறுதியை பாராட்டுகிறேன். பலம் மற்றும் பலவீனங்களை கொண்டுள்ள ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார். அவரது சர்வீஸ்கள் சிறப்பாக இருந்தது.

    விம்பிள்டன் பட்டத்தை பெற அவர் தகுதியானவர். விம்பிள்டனில் சவால் நிறைந்த இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்பு நான் வெற்றி பெற்று இருக்கிறேன். அதில் 2 போட்டிகளில் நான் தோல்வியை தழுவி இருக்க வேண்டியது. புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    2019 இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக தான் வெற்றி பெற்றிருக்கக் கூடாது. அதற்கான பழிவாங்கல் தான் இன்று என்னை அல்கராஸ் வீழ்த்தியது.

    மேலும் ஜோகோவிச் நேர்காணலை நிறுத்துவதற்கு முன் கண்ணீர் சிந்தி அழுதார்.

    ஆமாம், என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. லவ் யூ, என்னை ஆதரித்ததற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் நன்றாக தெரியும், இந்த கன நேர உணர்ச்சிகள் எல்லாம், தீர்ந்த பின்னர் நான் மிகவும் பெருமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கடந்த காலங்களில் பல நெருக்கமான போட்டிகளில் வென்று பட்டத்தையும் வென்றுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

    ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் 23 கிராண்ட் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2- வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) - உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 8 தடவை சாம்பியனாகி இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினால் பெடரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அவர் விம்பிள்டன் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    36 வயதான நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விம்பிள்டனில் 2018 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் 2020 ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

    அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாகவும், ஒட்டு மொத்தமாக 24-வது கிராண்ட் சிலாமையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபனை 3 தடவையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றுள்ளார்.

    20 வயதான அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். அமெரிக்க ஓபன் சாம்பியனான அவர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    சமபலம் வாய்ந்த இருவரும் மோதும் விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் தலா 1 வெற்றியை பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வான்ட்ரோ சோவா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை (துனிசியா) வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
    • மார்கெட்டா வோண்ட்ருசோவா- ஆன்ஸ் ஜெபருடன் மோதினார்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில், செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா- துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் ஆகியோர் மோதினர்.

    இதில் வோண்ட்ருசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினர்.

    இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    ×