search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • நியூசிலாந்தின் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    ஏற்கனவே, சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    • ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    • ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.

    • ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    • நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    இதேபோல், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    • 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.

    துபாய்:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

    17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

    இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஐ.பி.எல். ஏலம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஐ.பி.எல். ஏலப் பட்டிய லில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அசோசியேட் நாடுகளில் இருந்து 2 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டவர்களுக்கான இடமாகும். 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.

    பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். 23 வீரர்க ளுக்கு அடிப்படை விலை யாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.1½ கோடியாகும்.

    ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகப் போகும் வீரர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார்க், கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), கோயட்சி (தென்ஆப்பிரிக்கா), ஹசரங்கா (இலங்கை). ஹர்ஷல் படேல், ஷாருக்கான் (இந்தியா) ஆகியோர் மீது இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார்.
    • மேலும், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இதற்கிடையே, உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர் ஐசக் எர்சோகை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்ஸ்வாழ் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
    • மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    துபாய்:

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும், பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்சில் வாழும் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது.

    இன்று சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான சமநிலைக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணத்தை உலகின் முன் வைத்துள்ளது.

    உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் இந்தியா இருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் அதன் பங்களிப்பு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.

    புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில், காலக்கெடுவுக்கு 9 ஆண்டுக்கு முன்பே எங்களின் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
    • இதில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இதற்கிடையே, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்

    அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ், வங்காளதேசத்தை சேர்ந்த நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூசும் வென்றுள்ளனர்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

    • துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார்.
    • துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களில் ஒருவர் அலன்னா பாண்டே. இந்தி நடிகை அனன்யா பாண்டேவின் உறவினரான இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அலன்னா பாண்டே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஆடம்பர ஓட்டல் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார். அதிநவீன 2 நிலைகள் கொண்ட 4 படுக்கை அறைகள் மற்றும் 12 இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம் மற்றும் துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    வீடியோவுடன் அலன்னா பாண்டேவின் பதிவில், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஓட்டல் தொகுப்பின் சுற்றுப்பயணம் இது. இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகை 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

    • அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
    • துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

    துபாய்:

    துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது போக்குவரத்து தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 14-வது ஆண்டாக கடந்த 1-ந்தேதி 'உங்கள் வழியில் விளையாட்டுக்கள்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டது.

    இதே நாளில் சாலை மற்றும் போக்குவரத்து தொடங்கிய 18-வது ஆண்டு விழா கொண்டாட்டமும் நடந்தது. துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், படகு, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடிகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது போக்குவரத்து தினத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கார்பன் உமிழ்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகள் குறைய உதவியாக இருக்கிறது. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் பொது போக்குவரத்து சேவையை அதிக முறை பயன்படுத்திய தலா 3 பேர் பரிசுகள் வழங்கி கவுரவிக்க தேர்வு செய்யப்பட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 8 ஆயிரம் முறை பயணம் செய்த டெர்ரன் பாடியா முதல் பரிசையும், 7 ஆயிரம் முறை பயணம் செய்த சலேம் அல் சமகி 2-ம் இடத்தையும், 6 ஆயிரத்து 750 முறை பயணம் செய்த முகம்மது அப்தெல் காதர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    பொது பிரிவில் 15 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த முகம்மது அபுபக்கர் முதல் பரிசையும், 14 ஆயிரத்து 422 முறை பயணம் செய்த முகம்மது அகமது ஜதா 2-ம் பரிசையும், 13 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த சிராஜ் அல் தின் அப்தெல் காதர் 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு 7 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 3-வது பரிசு பெற்றவர்களுக்கு 5 லட்சம் நோல் பாய்ண்டுகளும் வழங்கப்பட்டது.

    அவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் வகையில் நோல் பாய்ண்டுகள் வழங்கப்பட்டது. அவர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் ஹீரோக்கள் என அழைக்கப்பட்டனர்.

    பரிசுகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    துபாயில் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பொது போக்குவரத்து சேவையை எளிதில் பயன்படுத்தும் வகையில் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கார்பன் உமிழ்தலை தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×