search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆனால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களில் ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 41 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜோ ரூட் 91 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள்முடிவில் ஆஸ்திரேலியா 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்னும், உஸ்மான் கவாஜா 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா இறங்கியது.

    அணியின் எண்ணிக்கை 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.
    • இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்.

    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.

    தனது ஓய்வு குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதவாது:-

    இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம்.

    மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது.

    இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.

    சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல்.

    அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன்.

    உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து நின்றனர்.

    அப்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது நீண்ட கால பந்துவீச்சு கூட்டாளியான ஆண்டர்சனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

    அவர்கள் களத்தில் இறங்கியபோது, பிராட் ஆண்டர்சனை ஒரு பக்கமாக அணைத்து, மரியாதையின் போது அவரையும் அழைத்துச் சென்றார்.

    ஆண்டர்சன் எல்லைக் கோட்டிற்குப் பின்னால் நின்று பிராட் தனது தருணத்தை ரசிக்க வைத்தார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.

    ஜானி பேர்ஸ்டோ 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்தனர். 3ம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    • ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
    • டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

    இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

    • இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
    • இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    இதில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

    இதில், முதலில் களமிறங்கிய சாக் கிராவ்லே அரை சதம் அடித்து 73 ரன்களை குவித்தார். தொடர்ந்து, பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.

    ஹாரி ப்ரூக் 7 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன்னும், மொயின் அலி 29 ரன்களும், மார்க்வுட் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக, ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    3ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

    இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    அவர் ஆஷஸ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்னே 36 போட்டிகளில் 195 விக்கெட்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

    மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

    முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்டி நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடியது.

    டேவிட் வார்னர் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து, மார்னஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். முதலில் களமிறங்கிய

    உஸ்மாவ் கவாஜா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களிலும், அலெக்ஸ் காரே 10 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 71 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    டோட் முர்பி 34 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக, ஜோஷ் ஹாசில்வுட் 6 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • 2019-ல் வாடகை வீடு தேடுவோர் எண்ணிக்கை சராசரியாக 6 என்ற அளவில் இருந்தது
    • தற்போது 18 முதல் 20 என மூன்று மடங்கு உயர்ந்துள்ளது

    இங்கிலாந்து முழுவதும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகி வருகிறது.

    வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் அண்டு சராசரியாக 6 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 18 முதல் 20 ஆக உள்ளது என வீடுகள் வாங்க மற்றும் விற்பதற்காக இயங்கும் இணைய தளம் ரைட்மூவ் அளிக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிகளில் 30-ஐ எட்டியுள்ளது.

    வாடகைக்கு ஒரு வீட்டை தேடுவது மிகவும் மன அழுத்தத்தை உண்டாக்க கூடிய கடினமான செயலாக இருப்பதாக பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    சில வருடங்களாகவே இங்கிலாந்தில் வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் வங்கி கடன் பெற்று வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டு வாடகைக்கு இருப்பதையே விரும்ப தொடங்கினார்கள். அதிகரித்திருக்கும் வட்டி விகிதத்தால் சில வீட்டு உரிமையாளர்களும் லோன் மூலம் வாங்கிய தங்கள் வீடுகளை விற்க முயல்கிறார்கள்.

    இந்த காரணங்களால் வாடகைக்கு வீடு தேடுவோர் அதிகமாகவும், வீடுகள் குறைவாகவும் உள்ள ஒரு முரண்பட்ட சூழ்நிலை உருவாகி வாடகை வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது.

    பல இடங்களில் கேட்கப்படும் வாடகையை விட அதிகமாக வழங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். வீட்டை பார்ப்பதற்கு வரிசையில் நிற்க மக்கள் முன்னரே வந்து விடும் நிலை பல இடங்களில் நிலவுகிறது. பல குடும்பங்களில் இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரியும் கிளாடியா (25), ஒரு படுக்கையறை கொண்ட ஒரு ஃப்ளாட்டில் அவளது காதலன் மைக்கேலுடன் மாதத்திற்கு ரூ. 2.3 லட்சம் (2150 pounds) வாடகைக்கு குடிபுகுந்திருக்கிறார். இந்த வாடகை வழக்கமான வாடகையை விட ரூ.30 ஆயிரம் (200 pounds) அதிகம் ஆகும்.

    "எங்கள் இருவரின் மொத்த வருமானத்தில் பாதியை இதுவே விழுங்கிவிடும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை" என கிளாடியா கூறுகிறார். வழக்கமாக இந்தியாவில், நகரங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த நெருக்கடி தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது பேசுபொருளாகியுள்ளது.

    • மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
    • ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர். கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் இருந்தது.

    இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நேற்று விளையாடியது. களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார்.

    இதேபோல், மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத் ஆட்டமிழக்காமல் உள்ளார். கேமரூன் கிரீன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 71 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் மழை பெய்ததால் 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால், இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    • இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார்.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி நேற்று 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர். கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இன்று விளையாடியது. களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார். இதேபோல், மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத் ஆட்டமிழக்காமல் உள்ளார். கேமரூன் கிரீன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 71 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மார்னஸ் லபுசேன், மிட்ச்ல் மார்ஷ் தலா 51 ரன்களில் அவுட்டாகினர். டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர்.

    கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. 

    ×