search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அலெக்ஸ் கேரி 66 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கவாஜா 141 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஜாக் கிராலி 7 ரன்னுடனும், பென் டக்கெட் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார்.
    • வீட்டில் அரவிந்த் சசிகுமார் உடலில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    லண்டன்:

    கேரள மாநிலம் பனம்பில்லி நகரை சேர்ந்தவர் அரவிந்த் சசிகுமார் (வயது 37). இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் உள்ள சவுத்தாம்படன் வே பகுதியில் தங்கி பணியாற்றி வந்தார். ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் அரவிந்த் சசிகுமார் உடலில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை உடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சல்மான் சலீம் (23) கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அரவிந்தை சல்மான் சலீம் கொலை செய்துள்ளார். சமீபத்தில் லண்டனில், ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன்னர் 3-ம் சார்லஸ் நவம்பர் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லண்டன் :

    இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியவர்கள் என்றும் 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பட்டியலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் உள்ளிட்டோர் உள்ளனர்.

    • அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

    லண்டன்:

    நடப்பு ஆண்டின் டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சசக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் ஹாக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹேம்ப்ஷைர் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சசக்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஆலிவர் கார்ட்டர் 64 ரன்னும், ரவி போபரா 30 ரன்னும், மைக்கேல் பர்கஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு ஹேம்ப்ஷர் அணி ஆடியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து ஹேம்ப்ஷர் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லியான் டாசன் அரைசதம் அடித்து 59 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ வேதர்லி 33 ரன்னும், பென்னி ஹோவல் 25 ரன்னும் எடுத்தனர்.

    இந்நிலையில், சசக்ஸ் அணியின் வீரர் டைமல் மில்ஸ் வீசிய 14-வது ஓவரின் 5-வது பந்தில் பென்னி ஹோவல் சிக்சர் அடிக்க முயற்சித்தார். டீப் ஸ்கொயர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி வேகமாக ஓடி வந்து பறந்து சென்று ஒரு கையால் பந்தைத் தாவிப் பிடித்து லியான் டாசனை ஆட்டமிழக்க செய்தார்.

    அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் எடுத்துள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவிட் வார்னர் 9 ரன்னில் அவுட்டானார். லாபுசேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் 16 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். கிரீன் 38 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 118 ரன்கள் எடுத்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 78 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்துள்ளது.

    • திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

    சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் ஆயுதங்கள் ஏந்தி சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் 36 நாட்கள் தப்புவதற்கு உதவியாக இருந்தவர் அவதார்சிங் கண்டா.

    அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான இவர் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய காலிஸ் தான் விடுதலை படையின் தலைவராக இருந்து வந்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமரியாதை செய்ததோடு காலிஸ்தான் கொடியையும் ஏற்ற முயன்றனர்.

    இந்த போராட்டத்தில் அவதார் சிங் கண்டா முக்கிய பங்காற்றினார். இவர் சமீப காலமாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதார் சிங் கண்டா நேற்று இறந்தார்.

    திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவதார் சிங் கண்டா சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இறந்த அவதார்சிங் கண்டா வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சீக்கிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வெடிகுண்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களுள் மிக முக்கியமானதாக இவர் விளங்கி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற அவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.

    • சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.

    சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.

    கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.

    சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.

    அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • மாணவியின் தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி வசித்து வந்தார்.

    இந்நிலையில், தேஜஸ்வினி நேற்று காலை அவரது அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், இவருடன் இவரது தோழி ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தேஜஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர், தேஜஸ்வினி தங்கி இருந்த பகிரப்பட்ட அறையில் ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் புதிதாக குடியேறினார் என்றும் அவர் தான் தேஜஸ்வினியை கொலை செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து, கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர 23 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம்.
    • போலண்ட் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார் பாட் கம்மின்ஸ்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    டிராவிஸ் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் பதற்றமான காலைக்குப் பிறகு எங்களுக்கு ஆறுதல் அளித்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷசுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹெட் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார்.

    முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம். அதை எண்ணும்போது நாங்கள் நன்றாக விளையாடினோம்.

    பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். போலண்ட் - அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகத் தொடர்கிறார்.

    ஸ்மித், போலண்ட், ஹெட் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம்.

    இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். வெற்றிபெறும் போது நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    • டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக விளையாடியது எங்களை காக்க வைத்தது.
    • ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மைதான சூழ்நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எங்கள் சிறப்பான தொடக்கம் என நான் நினைத்தேன்.

    முதல் அமர்வில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். டிராவிஸ் ஹெட் வந்து ஸ்டீவன் ஸ்மித்துடன் நன்றாக விளையாடினார். அதுதான் எங்களைக் கொஞ்சம் காக்க வைத்தது.

    திரும்பி வருவது எப்போதுமே கடினம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை வெளிப்படுத்தினோம். இறுதிவரை போராடினோம்.

    அந்த நான்கு வருடங்களும் கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனை. ஆனால் நாங்களும் ஒரு மைல் முன்னால் செல்ல விரும்புகிறோம்.

    இங்கு வந்து கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்ததை நீங்கள் பெறமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை.

    ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு ரன்னுக்கும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆரவாரம் செய்தார்கள் என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.
    • ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது.

    ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய சர்வதேச தொடர்களை நடத்தி வருகிறது. இந்த 4 விதமான தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

    ×