search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.
    • 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகெயில் ஹொசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
    • பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டன. அந்த வகையில், இந்த போட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

    சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.

     


    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய பெர்குசன் அவை அனைத்தையும் மெய்டென்களாக (ரன் ஏதும் கொடுக்காமல்) வீசினார். நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    முன்னதாக கனடா அணி கேப்டன் சாத் பின் சஃபார் டி20 கிரிக்கெட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் மெய்டென்களாக வீசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றிருக்கிறார். 

    • பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
    • டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 39-வது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    பப்புவா நியூ கினியா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி உரா (1) மற்றும் கேப்டன் அசாத் வாலா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சார்லெஸ் அமினி மற்றும் சீஸ் பௌ முறையே 17 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இதன் மூலம் அந்த அணி 19.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் தவிர டிரெண்ட் பௌல்ட், டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மொரி 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
    • 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன்.

    தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என ஆஷா சோபனா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.

    இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

    அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்.

    இவ்வாறு ஆஷா கூறினார்.

    • இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
    • இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

    குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்புக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அதே லக்னோ அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ்.

    அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் குழுவில் ஜான்டி ரோட்ஸ் இடம்பெறுவதற்காக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
    • மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    தரோபா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மழை நின்றதால் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இதுவே தனது கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை என்று அறிவித்து இருப்பதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப நியூசிலாந்து அணி தீவிர முனைப்பு காட்டும்.

    • நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன்.
    • ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

    புளோரிடா:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

    முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.

    இந்நிலையில் பாகிஸ்தான் அனியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் இடது மற்றும் வலது என பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

    நாம் சிறந்தவர்களுடன் போட்டியிட விரும்பினால், நாம் நமது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். உடற்தகுதி அடிப்படையில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம். தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த விரும்பும் வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு கேரி கிர்ஸ்டன் கூறினார்.  

    • இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
    • ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    பர்படாஸ்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

    இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
    • பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் நாளையுடன் முடியவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறத் தவறியதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்த மோசமான விளையாட்டுக்காக மன்னிக்கவும். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பேட்டிங் கிளிக் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சில தவறுகளை செய்தோம். 

    எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாகதான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும்போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு

    இவ்வாறு பாபர் அசாம் கூறினார். 

    • அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.
    • சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

    லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டி ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று போட்டிகளின் விவரம் பின்வருமாறு..

    ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா

    ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்

    ஜூன் 21 இரவு இங்கிலாந்து VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 22 காலை அமெரிக்கா VS வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 22 இரவு இந்தியா VS வங்காளதேசம்

    ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் VS ஆஸ்திரேலியா

    ஜூன் 23 இரவு அமெரிக்கா VS இங்கிலாந்து

    ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா VS இந்தியா

    ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம்

    சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது.

    அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    • இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
    • நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் முறையே 34, 46 மற்றும் 30 ரன்களை அடித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் முறையே 31 மற்றும் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 7 ரன்களிலும், சைபிராண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.

    ×