search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.
    • மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.

    இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.

    2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.

    கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.

    அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது.

    அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதுகிறது.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    டி20 தொடரின் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    • இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்று மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
    • வெற்றிக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி என அவரே கூறினார்.

    கயானா:

    டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இதனிடையே உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக பலர் குற்றச்சாட்டி வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் வெற்றிகுறித்து மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மைக்கேல் வாகனை இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கமாய் கலாய்த்துள்ளார். நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமாக வெற்றிபெற்றதாக அஸ்வின் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " ∫ 1 dx = x + C. ∫ a dx = ax+ C. ∫ xn dx = ((xn+1)/(n+1))+C ; n≠1... இதனால் தான் இந்தியா வென்றது" என்று அதில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41-ல் வெற்றி பெற்றுள்ளார்.
    • பாபர் அசாம் 85 போட்டிகளில் கேப்டனாக இருந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் 56 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பாபர் அசாமின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். அந்த வகையில் பாபர் அசாம் 85 போட்டிகளில் கேப்டனாக இருந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளார். ரோகித் 61 போட்டிகளில் 49-ல் வெற்றி பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

    • இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம்.
    • பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், அவருக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இதுவே அதிகமான ஸ்கோர்தான்.

    கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 3 ஓவரில் 26 ரன்கள் எடுத்தது. உடனே சுதாரித்து கொண்ட ரோகித், அக்சர் படேலை ஓவர் வீச அழைத்தார். அதன் விளைவு முதல் பந்திலேயே பட்லர் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 16.4 ஓவரில் இங்கிலாந்து 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காததே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், இந்தியாவை நிச்சயம் கட்டுப்படுத்தியிருப்போம்.

    இதுதான், நான் செய்த பெரிய தவறு. மொயின் அலிக்கு ஓவர்களை கொடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்'' எனக் கூறினார்.

    • நடப்பு டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார்.
    • இதில் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

    ஜார்ஜ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    இந்த டி20 தொடரில் 35 வயதான முன்னாள் கேப்டன் கோலி, ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் விராட் பார்ம் ஒரு பிரச்சனை இல்லை. அவர் அதை இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    விராட் ஒரு தரமான வீரர். அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. 15 வருடங்கள் விளையாடும் போது, பார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் அதை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம்.

    இறுதிப் போட்டியின் சந்தர்ப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்தோம். அதுவே எங்களுக்கு முக்கியமாகும். எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இறுதிப்போட்டியில் இன்னொரு சிறப்பான ஆட்டத்தை நடத்துவேன் என்று நான் நம்புகிறேன்.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் இறுதி போட்டியில் மோத போவது யார் என்ற நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அப்போது அந்த இடத்துக்கு வந்த விராட் கோலி, தோளில் தட்டிக் கொடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2019-ம் ஆண்டில் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்ததும் ரோகித் கண்கலங்கினார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டும் டி20 உலகக் கோப்பையிலும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் அவர் கண்கலங்கிய வீடியோ அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது. இவரது கேப்டன்சி சிறப்பானதாக உள்ளது என இவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
    • அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

    உலகக்கோப்பையில் இலங்கையின் மோசமான செயல்பாடு இதுவாகும். இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (இங்கிலாந்து) நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. மற்றபடி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    • ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார்.
    • அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. எனினும் டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் விராட் கோலி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 39 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

     


    அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேற சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா முறையே 47 மற்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அர்ஷ்தீப் சிங் முறையே 17 மற்றும் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

     


    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரீஸ் டோப்லெ, ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    172 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே விக்கெட் இழந்தது. அந்த அணியின் பில் சால்ட் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


     

    இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் காரணமாக அந்த அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 68 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • விராட் கோலி, ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தனர்.
    • ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் 

    விராட் கோலி ஒன்பது ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

    ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    ஜடேஜா 17 ரன்கள் அடிக்க இந்தியா 172 ரன்கள் அடித்துள்ளது.

    • கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    ×