search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anshuman Gaekwad"

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுஷ்மான் கெய்க்வாட் சிகிச்சை பெற்று வந்தார்.
    • கபில் தேவ் தன்னுடைய பென்சன் தொகையை அனுஷ்மான் சிகிச்சைக்கு கொடுத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    அவருடைய இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார் .

    அனுஷ்மான் உயிரிழந்ததற்கு பிசிசிஐ செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

    பிசிசிஐ முன்னாள் செயலாளரான சவுரங் கங்குலியும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்காக 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுஷ்மான், 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்..

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்.

    71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஷ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை அவருடைய மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து, அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ 1 கோடி நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.

    • இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐயிடம் கபில் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அணி வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அன்ஷுமன் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    மொகிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்க்கார், மதன்லால், ரவிசாஸ்திரி மற்றும் கீர்த்தி ஆசாத் போன்ற அவரது முன்னாள் அணியினர் கெய்க்வாட் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தை பிசிசிஐ பரிசீலித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் என கபில்தேவ் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:

    இது ஒரு சோகமானது மற்றும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. நான் அன்ஷுவுடன் சேர்ந்து விளையாடியதால் நான் வலியில் இருக்கிறேன். இந்த நிலைமையில் அவரைப் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் கஷ்டப்பட வேண்டாம். அவரை வாரியம் கவனித்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும்.

    அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்தில் இருந்து வரவேண்டும். ரசிகர்கள் அவரைத் தவறவிட மாட்டார்கள், அவர் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நன்றாக பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை ஊழியர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைப்பது நல்லது.

    எங்கள் காலத்தில் வாரியத்திடம் பணம் இல்லை. இன்று அது மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினால் அவர்கள் தங்கள் பணத்தை அங்கு வைக்கலாம். பிசிசிஐ அதைச் செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன்.

    அவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்க தயார் என தெரிவித்தார்.

    • பரோடா மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
    • 1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளில் தத்தாஜி விளையாடியுள்ளார்

    இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவர், தத்தாஜிராவ் கெய்க்வாட் (Dattajirao Gaekwad).

    இன்று தத்தாஜிராவ் கெய்க்வாட், தனது 95-வது வயதில், முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளினால் காலமானார்.

    பரோடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தத்தாஜிராவ் கெய்க்வாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வலது கர பேட்ஸ்மேனான தத்தாஜி, 1952ல் இங்கிலாந்தின் லீட்ஸ் (Leeds) மைதானத்தில், விஜய் ஹசாரே (Vijay Hazare) தலைமையிலான அணியில், சர்வதேச அளவிலான தனது முதல் கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கினார்.


    ஆரம்பத்தில் தொடக்க வீரராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர், பின்னர் "மிடில் ஆர்டர்" விளையாட்டில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.

    1952லிருந்து 1961 வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் மேட்சுகளை தத்தாஜி விளையாடியுள்ளார்.

    1959ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார்.

    1961ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இறுதியாக இந்தியாவிற்காக விளையாடினார்.

    பரோடா சார்பில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் 1947லிருந்து 1961 வரை விளையாடியவர் தத்தாஜி. இப்போட்டிகளில், 3139 ரன்களை குவித்து, 14 சதங்களும் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தத்தாஜி கெய்க்வாட்டின் மகன் அன்சுமன் கெய்க்வாட் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். அன்சுமன், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மேட்சுகளில் விளையாடியவர் என்பதும் 90களில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தத்தாஜி கெய்க்வாட்டின் மரணத்தை தொடர்ந்து, "93 வருடம் 349 நாட்கள்" வயதில் வாழும், செங்கல்பட் கோபிநாத், இந்தியாவின் அதிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் எனும் அந்தஸ்தை பெறுகிறார்.

    ×