search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indo china border"

    • மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா பேசினார்
    • அதிக்ராபூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும்

    எல்லைப் பிரச்சனைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

    அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடக விளங்கும் சீனா சமீப காலமாக திபெத், லடாக் எல்லாப் பிரதேசங்களில் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது, சீன வரைபடத்தில் இந்திய பகுதிகளில் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. இருநாட்டு வெளியுறவுத் துறையும் சம்பிரத்யமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், சீனா அதை செயலில் காட்டவில்லை.

    இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா, லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை சட்டப்பூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    லே லடாக், அருணாச்சல் பிரதேஷ், சிக்கிம் என திபெத் வரை 1400 கிலோமீர் வரை எல்லைப் பகுதி நீண்டுள்ளது. இது சீன எல்லை கிடையாது திபெத் எல்லை என்றே குறிப்பிட்டுள்ளார். இதக்கிடையில் நேற்று எல்லையில் உள்ள  பாங்காங் நதியின் சீனா கட்டிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    • 2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது.
    • உடனடியாக இந்தியா மற்றொரு எல்லையில் சீனா இடத்தை ஆக்கிரமித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

    இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதன்பின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.

    கல்வான் பள்ளத்தாக்கில் பல சதுர கிலோ மீட்டர் வரையிலான இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்திய பிரதமர் ஒரு அங்குல நிலம் கூட சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    பிரதமர் மோடி தெரிவித்ததை சீன பத்திரிகைள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டனர். இந்திய பிரதமர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இந்திய நிலத்தை தாரைவார்த்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண், எந்தவித போராட்டமின்றி இந்திய நிலத்தை தாரைவார்த்து விட்டடதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாக கேரள மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. உடனடி பதிலடியாக எல்லையின் மற்றொரு பகுதியில் நாம் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்தோம். இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

    அப்போது இரு தரப்பிலும் தங்களது பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டது. எந்தவித போராட்டம் இன்றி 4067 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலத்தைர பிரதமர் மோடி சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டார்.

    இவ்வாறு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

    • எல்லைக்கோடு தொடர்பான பிரச்சினை முடியவடையாத நிலையில் அவரது பயணம், மேலும் அதை சிக்கலாக்கும்.
    • இந்தோ-சீனா கிழக்குப் பகுதியில் இந்திய தலைவர்கள் செல்வதற்கு கண்டனம்.

    இந்திய பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசல பிரதேசம் சென்றிருந்தார். அப்போது சீனா எல்லையையொட்டி தவாங்- டிராங் பகுதிகளை இணைக்கும் வகையிலான ரூ.825 கோடி மதிப்பிலான சேலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி அருணாசல பிரதேசம் சென்றதற்கு சீனா ராஜாங்க ரீதியிலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

    இந்திய பிரதமர் மோடி அருணாசல பிரதேச மாநிலம் சென்றதற்கு ராஜாங்க ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். எல்லைக்கோடு தொடர்பான பிரச்சினை முடியவடையாத நிலையில் அவரது பயணம், மேலும் அதை சிக்கலாக்கும். இந்தோ-சீனா கிழக்குப் பகுதியில் இந்திய தலைவர்கள் செல்வதற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

    ஆனால் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், அருணாசல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    பிரதமர் மோடி திறந்து வைத்த ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள், காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்- டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

    எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

    • சிக்கிம் முதல்வர் தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்
    • புத்த மதத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் அவர் உரையை கேட்க வந்துள்ளனர்

    இந்திய எல்லையோரம் உள்ள பிராந்தியமான திபெத் (Tibet), சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    திபெத்தியர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தலைமை மத குருக்கள் "லாமா" (lama) என அழைக்கப்படுவார்கள். தலைமை மத குரு தலாய் லாமா (Dalai Lama) என அழைக்கப்படுவார்.

    தற்போது 14-வது தலாய் லாமா பொறுப்பில் உள்ள டென்சின் க்யாட்ஸோ, சிக்கிம் மாநில தலைநகர் கேங்க்டாக் (Gangtok) நகரில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்தார். அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள பல்ஜோர் அரங்கில் (Paljour Stadium) ஆன்மிக உரையாற்றினார்.

    முன்னதாக சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் (PS Tamang) தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்.

    தொடர்ந்து தலாய் லாமா, வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரிக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சலுகாரா (Salugara) பகுதியில் உள்ள ஒரு புத்த மடாலயத்தில் போதிசித்தா எனப்படும் புத்தரின் லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து புத்த மதத்தினரிடம் உரையாற்றுகிறார்.

    அசாம், பீகார், சிக்கிம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடான நேபாளத்திலிருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உரையை கேட்க அங்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலாய் லாமா, "எங்கள் சொந்த நாட்டிலேயே திபெத்தியர்களான நாங்கள் அகதிகளாக்கப்பட்டோம். அங்கு எங்களுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு (இந்தியாவில்) நாங்கள் சுதந்திரமாக உள்ளோம்" என தெரிவித்தார்.

    கடல் மட்டத்திலிருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருப்பதால், உலகிலேயே உயரமான பிரதேசமாக திபெத் உள்ளது. உலகின் உயரமான (8848 மீட்டர்) மலையான "மவுன்ட் எவரெஸ்ட்" (Mount Everest) திபெத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோ- சீனா எல்லையில் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது சீனா
    • சாலைகள், ஹெலிபேடுகள் அமைத்துள்ளதாக பென்டகன் தகவல்

    இந்தியா- சீனா இடையில் எல்லை கட்டுபாட்டுக் கோடு தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சீனா இந்தியா எல்லைக்குள் ஊடுருவது உண்டு. பின்னர், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கிவிடும்.

    கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற சம்பவத்தின்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா எல்லை அருகே பாதுகாப்பை அதிகரித்துள்ளது. என்றபோதிலும், சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×