search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu Kahsmir"

    • பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
    • இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள், ஜம்முவில் உள்ள 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில் "மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது. பாஜக ஜம்மு-காஷ்மீரில் தோற்கடிக்கப்படும்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பயங்கரவாதி என பாஜக தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விசயத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மவுனம் காத்து வருகின்றனர்" என்றார்.

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சண்டை நடந்தது.
    • இந்த என்கவுண்டரில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கிஷ்ட்வாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    • கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும்.
    • தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், முதன்முறையாக அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மதசார்பற்ற ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும் என பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:-

    இந்த சட்டமன்றத் தேர்தலில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியளிக்கும் அல்லது மரணம் மற்றும் அழிவை உறுதியளிக்கும் ஆகியவற்றில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தபோது சொந்த அரசியலமைப்பு கொண்டிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு தற்போது ஒருங்கிணைந்த அரசியலமைப்பு உள்ளது.

    மதசார்பற்றதாக மாறிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். ஒரே கொடியுடனும், கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான். யாசின் மாலிக், ஆசியா அந்த்ராபி அல்லது ஷபீர் ஷாவை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கம் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

    ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் தனிப்பட்ட நபர்களை சந்தித்தார். அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என கருதுபவர்கள். இது இந்திய பாராளுமன்ற தீர்மானத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தை மட்டுமு் இழிவுப்படுத்த வில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் இருந்த அவர்களுடைய முன்னோர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறு சுதான்சு திரிவேதி தெரிவித்தார்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி.
    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்க திட்டம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் முன்னணி மாநில கட்சிகளாக உள்ளன.

    90 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டன. மெகபூபா முக்தி இந்த கூட்டணியில் இணைவாரா? எனத் தெரியவில்லை. பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி கட்சியிடன் தேர்தலுக்கு முந்தைய அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற கருத்தை புறந்தள்ளிவிடவில்லை.

    இதற்கிடையே பாஜக 60 முதல் 70 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமித் ஷா, ஜே.பி. நட்டா உளளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின்போது மக்களுக்கு மிகவும் அறிமுகமான பிரபலமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதால் தனித்து களம் இறங்கிய பாஜக தீர்மானித்துள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

    மேலும், சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வலுவான சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்த பின் பாஜக ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து. முஃப்தி முகமது சயீத் முதல்வரானார். அவர் 2016 ஜனவரி மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி முதல்வரானார்.

    2018-ல் இருந்து மெகபூபா முப்திக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. பின்னர் நவம்பர் மாதம் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், அங்கு விரைவில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. #BJPPDP #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இதனை அடுத்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில், காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்துள்ளது பரபரப்பான ஒன்றாகியுள்ளது. 

    காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பணிகளில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக காஷ்மீர் கவர்னர் ஆட்சியை சந்திக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் - பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.

    அமர்நாத் நில விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டணி உடைந்தது. குலாம் நபி ஆசாத் வாபஸ் பெற்றதால், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பின், 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி அமைக்க இழுபறி நீடித்த நிலையில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 2016-ல் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின், சயீத்தின் மகள் மெகபூபா முப்தி முதல்வராவார் என கூறப்பட்டது.

    ஆனாலும், பாஜக கூட்டணிக்கு கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆட்சியமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தற்போது, பாஜக - பிடிபி கூட்டணி முறிந்துள்ளதால் 10 ஆண்டுகளில் நான்காவது முறையாக கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளது. 
    ×