search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KTR"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
    • கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்

    மழை வெள்ளம் 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வார்த்தைப் போர் 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

    கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ் 

    'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

     

    ரேவந்த் ரெட்டி பதிலடி 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார். 

    • வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்

    தமிழகத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தைக் கிண்டலடித்து பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவர் கே.சந்திரசேகர ராவின் [KSR] மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் [KTR] சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

     

    நேற்று முன் தினம் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கேடிஆர், தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்காவை குறிப்பிட்டு, 'ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு பஸ்சை கொடுங்கள், மொத்த குடும்பமும் அதில் பயணம் செய்யட்டும். பெண்கள் பஸ்சில் காய்கறிகளை நருக்கட்டும், பிரேக் டான்ஸ் ஆடட்டும், டான்ஸ் வீடியோ எடுக்கட்டும்' என்று பேசினார். சமீப காலமாக பெண்கள் பஸ்சில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோக்களை குறிப்பிட்டு இவ்வாறு வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், 'கட்சிக் கூட்டத்தில் நான் பேசியது சகோதரிகளை புண்படுத்தியிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க வேண்டும். சகோதரிகளை அப்படிப் பேச வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல' என்று பதிவிட்டு தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதற்கிடையில் தற்போது டெல்லியில் உள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி விரைவில் பாஜகவோடு இணைக்கப்படும் என்று பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் பாஜகவின் சேரும் என்றும் கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க உள்ளதாகவும், கேடிஆருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் ஹரிஷ் ராவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

     

    தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார் கேசிஆர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியைச் சந்தித்தது பிஆர்எஸ். மக்களவைத் தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பிஆர்எஸ் பெறவில்லை. இந்த நிலையில்தான் பிஆர்எஸ் பாஜகவோடு இணைக்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.  

    • 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
    • வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    ×