search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanwar"

    • டெல்லி முழுவதும் 185 கன்வர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 20 ஆயிரம் தங்கும் வகையில் காஷ்மீர் கேட் அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள். அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

    கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முகாம் அமைத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    அதன் அடிப்படையில் டெல்லியில் நாட்டிலேயே மிகப்பெரிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில வருவாய்த்துறை மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். 20 ஆயிரம் தங்கும் வகையில் காஷ்மீர் கேட் அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.

    டெல்லி முழுவதும் 185 கன்வார் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் புகாத கூடாரங்கள், தூங்குவதற்கான ஏற்பாடுகள், சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் வழங்கப்படும்.

    மெடிக்கல் ஸ்டாஃப்கள் 24X7 என்ற அடிப்படையில் தயார் நிலையில் இருப்பார்கள். தேவைப்பட்டால் உடனடியாக பக்தர்கள் மெடிக்கல் உதவி பெற முடியும். உள்ளூர் மருந்தகங்கள் முகாம்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்காக CATS ஆம்புலன்ஸ் குவிக்கப்பட்டுள்ளன.

    அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு டெல்லி எல்லை வழியாக பக்தர்கள் (Kanwariyas) செல்லும்போது டெல்லி மாநிலத்தை சென்றடைவார்கள். அவர்கள் வசதிக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது
    • லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை கடை முன் பெயர்பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

    முதலாவதாக மத்தியில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் இந்த உத்தரவு ஏற்றத்தாழ்வுகளுக்கு உதாரணமாக அமையும் என்று கண்டித்திருந்தது.

    மேலும் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிவினையை ஏற்படுத்தும் எதையும் தான் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில், உ.பியில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக் தள கட்சியின்  தலைவரும் பாராளுமன்ற எம்.பியுமான ஜெயந்த் சவுத்ரே, கன்வரை சேர்ந்தவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் எப்போதும் ஒருவரின் மதத்தை கேட்பதில்லை. அது முக்கியமும் இல்லை. சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மதம் சார்ந்து பாஜக எழுப்பியுள்ள இந்த சர்ச்சைக்கு கூட்டணி கட்சித் தலைவர்களே கண்டனம் தெரிவித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

     

    ×