search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koffee With Karan"

    • கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
    • உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.

    காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.

    பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:

    நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.

    அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.

    அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

    உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.

    அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.

    பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்தித் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #KLRahul #HardikPandya #BCCI #KoffeeWithKaran
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 'காபி வித் கரண்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.



    அதேசமயம், பாண்டியா, ராகுல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரி டி.கே.ஜெயின், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மீதி ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த அபராத தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். #KLRahul #HardikPandya #BCCI #KoffeeWithKaran

    ×