search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lateral entry"

    • நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • கடும் எதிர்ப்புக்கு பிறகு நேரடி பணிநியமன முறையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. 50% இட ஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதியை நிலை நாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நேரடி பணிநியமன முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நேரடி பணிநியமன முறைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் நேரடி பணிநியமனம் என அரசுப்பணியில் அல்லாத துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பா.ஜ.க. அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, நேரடி பணிநியமன முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில்,மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

    • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

    • லேட்டரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • லேட்டரல் என்ட்ரி முறைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார். 

    • பி.டெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம்.
    • கல்வி தகுதியை குறிப்பிட்டு வரும் 3-ந் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இவர்கள் பி.டெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். புதுவை மாநில அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 426 லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது. இந்த இடங்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை குறிப்பிட்டு வரும் 3-ந் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாப்அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு இடங்கள் இருந்தால் பிற மாநில மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்புடும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்ய சமீபத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய முன்னாள் மந்திரி சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Chidambaram
    புதுடெல்லி :

    அரசுத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களை அதிகரிக்கும் பொருட்டு லேட்ரல் என்ட்ரி எனும் திட்டப்படி, மத்திய அரசின் 10 துறைகளின் இணை செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தனியார் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள், இணை செயலாளர் பதவிக்கு அணுகலாம் என பிரத்யேக விளம்பரத்தையும் மத்திய அரசு நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. 

    இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் கூறியுள்ளதாவது :-

    இந்த புதிய முறை மற்றும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களை துணை செயலாளர்களாக நியமிக்கும் முறை தவறானது. அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு வேண்டியவர்களாக மட்டுமே இருப்பார்கள். 

    செல்வாக்கை பயன்படுத்தி இந்த பதவிகளுக்கு வருபவர்கள் மக்களுக்காக பணியாற்ற மாட்டர்கள். இது முற்றிலும் நாட்டு நலனுக்கு எதிரானது. மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்யும் புதிய முறையை பற்றி விரிவாக மத்திய அரசு விளக்க வேண்டும். 

    இது குறித்து விமர்சனம் செய்ய காங்கிரஸ் கட்சியிடம் அதிகமான கேள்விகள் இருந்தாலும், மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே எங்கள் முடிவு அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Chidambaram
    ×