search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red"

    • விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
    • விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள்  சமூக  வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி  ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

    • தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறா
    • தனது பூனையுடன் சமந்தா ரெட் லைட் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார்

    தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வரும் சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார்.

     

    இதற்கிடையில் தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட்காஷ்டில் சொல்லப்படும் மருத்துவ குறிப்புக்கள்  தவறானவை என்று சமீபத்தில் சர்ச்சையும் எழுந்து அடங்கியது.

     

    இந்நிலையில் சருமத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தனது மயோசிடிஸ் நோயை குணப்படுத்த வெளிநாடுகளில் பல்வேறு தெரபிகளை எடுத்து வரும் சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த தெரபியை தனது பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'ரெட் லைட் தெரபி டேட் ' என தனது பூனையுடன் சென்ற டேட்டிங் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். 

    • 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன.
    • வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.

    மனித கண்களுக்கு பகலில் நிறங்கள் புலப்படுவது போல் இரவில் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. மனித கண்களின் அமைப்பு அப்படித்தான் உள்ளது.

    பொதுவாக, நிறங்கள் அலைகளின் ஊடாக பயணிக்கின்றன. நிறத்தை பொறுத்து அந்த அலைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட அலைநீளம் கொண்டவையாக இருக்கின்றன. இதில், ஓரளவு அதிக அலைநீளம் கொண்ட நிறங்களை மனித கண்களால் குறைந்த ஒளி வெளிச்சத்தில் பார்க்க முடியும்.

    அந்த வகையில், பச்சை நிறம் மிகத்தொலைவில் இருந்து கூட பார்க்கும் வகையில் அலைநீளம் கொண்டதாக உள்ளது.

    பொதுவாக, நமது கண்களில் போட்டோரிசப்டர் செல்கள் என்று கூறப்படும் 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன. இந்த நிறமிகள்தான் நிறங்களின் அலைநீளத்தை உணர்ந்து மூளைக்கு அதனை தெரிவிக்கின்றன.

    பகல் நேரத்தில் இந்த நிற உணர் நிறமிகள் பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறங்களின் அலை நீளங்களை எளிதில் உணர்ந்து கொள்கின்றன. இதன் காரணமாகத்தான் போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் வாகனங்கள் கடந்து செல்ல அனுமதியை குறிக்கும் வகையில் பச்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதற்கு மாறாக போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் சிவப்பு நிறம் வாகனங்கள் நிறுத்த கட்டளையை அறிவிக்க பொருத்தப்பட்டுள்ளன. சிவப்பு வண்ண அலைநீளம் மிகக்குறைவு என்றாலும் வாகனங்கள் குறைந்த தொலைவில் கூட சிவப்பு விளக்கு எரிந்தால் உடனே அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு பயன்படுத்தப்படுகின்றன.

    குறைந்த வெளிச்சத்தில் கூட தெளிவாக கண்களின் நிற உணர் நிறமிகளால் கண்டுகொள்ளக்கூடிய நிறமாக இருப்பது மஞ்சள் நிறம். பெரும்பாலும் இரவு நேரங்களில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள், அவசர கால வாகனங்கள் மஞ்சள் நிறம் கொண்டவையாக இருப்பது இரவிலும் அவை தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். இதே போல வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.

    • சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
    • அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    • தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு சைபர்மெத்ரின் 3 சதம் மற்றும் குயினால்பாஸ் 20 சதம் ஈசிகலந்த 500 மில்லி ரசாயன மருந்து கலவையை 120 லிட்டர் தண்ணீருடன் செடியில் மருந்து ஒட்டுவதற்கு 25 மில்லி சிலிகான் ஒட்டும் திரவம் கலந்து உடனே தெளிக்குமாறு விவசாயிகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அறிவுறுத்தியுள்ளார்.

    • சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.93-க்கு ஏலம் போனது
    • க.பரமத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி,கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் உள்ளன. இதில் பெரும்பாலும் கிராம புறங்களில் மானாவாரி நிலங்களில் எள், கம்பு, சோளம் போன்ற பல விதமான பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து பிழைத்து வரு கின்றனர். குறிப்பாக க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம், புன்னம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, குப்பம், முன்னூர், அத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக மானாவாரி நிலங்களில் எள் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ளவற்றை அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத் திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 4 மூட்டை சிவப்பு எள் எடைக்கு நடந்த ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.88, அதிக விலையாக கிலோ ரூ.93-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உயர் ரக கேமராக்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமான ரெட் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #HydrogenOne #smartphone



    உயர் ரக கேமராக்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கும் ரெட், மொபைல் போன் சந்தையில் களம் கண்டது. கடந்த ஆண்டு ரெட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட் ஹைட்ரஜன் ஒன் உலகின் முதல் ஹாலோகிராஃபிக் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD 4-வியூ லைட்ஃபீல்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. நானோ தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், டிஸ்ப்ளே மிகவும் தெளிவாகவும், நிறங்களை புதுவித முறையில் பிரதிபலிக்கும். இதில் உள்ள ஹாலோகிராஃபிக் 4-வியூ ரெக்கார்டிங் முன்புறம் மற்றும் பின்பக்கம் 3D அனுபவம் வழங்குகிறது. 



    டியூரபில் கார்பன் பைபர், இன்ட்யூட்டிவ், ரெட் டிசைன் செய்யப்பட்ட பக்கவாட்டுகள் மற்றும் கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் JPEG வடிவில் சேமிக்கப்படுகின்றன. இதனால் அவை மற்ற மொபைல்களில் வழக்கமான புகைப்படம் போன்று காட்சியளிக்கும். 

    ரெட் ஹைட்ரஜன் ஒன் ஸ்மார்ட்போன் A3D மல்டி-டைமென்ஷனல் சரவுன்ட் சவுன்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் மாட்யூலர், சினிமா திறன் கொண்ட மீடியா மெஷின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் போனின் பேட்டரி பேக்கப், மெமரியை அதிகப்படுத்தவும் கேமரா மாட்யூல் லென்ஸ் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாட்யூல்கள் 2019ம் ஆண்டில் கிடைக்கும்.

    இன்ஸ்டாகிராம் போன்று 3D புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு என ஹோலோபிக்ஸ் எனும் செயலியை கொண்டிருக்கிறது. விரைவில் ஃபேஸ்டைம் போன்ற ரியல்-டைம் 3D செயலி வழங்கப்படுகிறது. ஹைட்ரோஜன் நெட்வொர்க் சேவை திரைப்படம் மற்றும் வீடியோவினை கட்டணம் மற்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.



    ரெட் ஹைட்ரஜன் ஒன் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. LTPS-TFT டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. மெமரி அலுமினியம்
    - 6 ஜி.பி. ரேம் / 256 ஜி.பி. மெமரி டைட்டானியம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. டூயல் ஸ்டீரியோ பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 8 எம்.பி. டூயல் ஸ்டீரியோ முன்பக்க கேமராக்கள்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரெட் ஹைட்ரஜன் ஒன் ஸ்மார்ட்போனின் அலுமினியம் வெர்ஷன் 1195 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.87,550 என்றும், டைட்டானியம் வெர்ஷன் விலை 1595 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.1,16,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ×