என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "suspended"
- ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
- சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.
அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.
இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் விசாரித்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு கொண்டு வந்த டிபனில் அசைவ உணவு இருந்ததாக கூறி அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The principal of a private school in #UttarPradesh's #Amroha suspended a nursery student, allegedly for bringing non-vegetarian food in his lunch box to school. The incident came to light after a video, shot by the student's mother, went viral on social media.The video showed a… pic.twitter.com/J3D0ycd3gR
— Hate Detector ? (@HateDetectors) September 5, 2024
- பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நெரெடி கும்மாவை சேர்ந்தவர் அஸ்வினி. நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக தேவார கொண்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் நல்கொண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் நிகிதா மற்றும் செவிலியர்கள் அஸ்வினியை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் ஆகும் என தெரிவித்தனர்.
30 நிமிடங்களுக்கு பிறகு அஸ்வினியை நடை பயிற்சி செய்யுமாறு தெரிவித்தனர். அப்போது அஸ்வினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
நாற்காலியில் உட்கார்ந்த அஸ்வினிக்கு குழந்தை பிறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த செவிலியர்கள் அஸ்வினியை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் கால தாமதம் செய்து பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர் நிகிதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, சைதம்மா, மவுனிகா, சரிதா ஆகியோர் சஸ்பெண்டு செய்து கலெக்டர் நாராயண ரெட்டி உத்தரவிட்டார்.
- ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார்.
- தீபக் சர்மா துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.
டெல்லி:
டெல்லி திகார் ஜெயிலின் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் கோண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றுள்ளார்.
அந்த விழாவில் நடிகர் சஞ்சய்தத் நடித்த 'கல்நாயக்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார். அப்போது திடீரென தீபக் சர்மா வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.
#JUSTIN: Tihar Jail administration has suspended Deepak Sharma, Assistant Superintendent, presently posted in Mandoli Central Jail No 15. A video went viral where he was waiving a pistol at a birthday party. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/nOo62m5Rwl
— Mahender Singh Manral (@mahendermanral) August 9, 2024
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தீபக் சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தீபக் சர்மாவை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜ.க.வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததால் அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
- பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், கல்லூர் அடுத்த பெரம வஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிரிஷா என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும் என மாணவர்களிடம் பலமுறை வலியுறுத்தினார்.
ஆனாலும் மாணவர்கள் ஆசிரியை கூறும் அறிவுரையை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங் நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிரிஷா கத்திரிக்கோலை எடுத்து வந்து 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சென்ற மாணவர்களின் தலையைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தலைமுடி வெட்டிய ஆசிரியை சிரிஷாவை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
- பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
- பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
- கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பு.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, 5, 6, 8, 9, மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் 2024 ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 5ல் உள்ள புரசைவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ லைன் அமைப்பதற்கான இணைப்பு பணிகளால், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், புரசைவாக்கம், பெரியமேட், சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம், கொண்டித்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்களில் சப்ளை நிறுத்தப்படும்.
மண்டலம் 6ல் அயனாவரம், செம்பியம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், மண்டலம் 8ல் கெல்லிஸ், மண்டலம் 9ல் திருவல்லிக்கேணி, மண்டலம் 10ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், அவசர தேவைகளுக்கு நீர் விநியோகம் செய்ய https://cmwssb.tn.gov.in என்ற மெட்ரோ வாட்டர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் தடையின்றி தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- விசாரணை நடைபெற்று வருகிறது.
- தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தை.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றிய அதிகாரி சரவணன் வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரி சரவணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் கடத்தல் காரர்களிடம் இருந்து தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சரவணனுக்கும் சம்பந்தம் இல்லை.
அவர் யார்-யாருக்கு உதவினார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். தங்கம் கடத்தலுக்கு குடியுரிமை அதிகாரி உடந்தையாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
- தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
இன்று (19-6-2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் பிரவீன்குமார், வயது 26 நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவக்கல்லூரி வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், சுரேஷ், வயது 40 மற்றும் சேகர், வயது 59 ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பின் காரணம். உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும்.
மேற்கண்ட 26 நபர்களில், வடிவு மற்றும் கந்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துகளும் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.
மேலும். பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களுக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தமா.சுப்பிரமணியன் ஆகியோரை உடணடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, திரு. சஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும். தக்க மேல்நடவடிக்கைக்காகவும், ஆணையிட்டுள்ளார்கள்.
- கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதிய எஸ்.பியாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.
காவல்துறை, வருவாய் துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட் சாராயம் அருந்தியிருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சஸ்பெண்டு உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
- பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே அவர், இங்கு பணியில் உள்ளார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் என்ஜினீயர் பால சுப்பிரமணியன் இன்று திடீரென பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த தகவல் மாநகராட்சி பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ஜினீயர் பால சுப்பிரமணியன் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்