search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samvidhaan Hatya Diwas"

    • எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்- மத்திய அரசு
    • 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் கடந்த காலத்தை பாஜக பார்க்கிறது- ராவத்

    50 வருடத்திற்கு முன் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை பாஜக பார்க்கிறது. அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    எமர்ஜென்சி அறிவித்து 50 வருடங்கள் ஆகிறது. பாஜக இன்னும் கடந்த காலத்தை பார்க்கிறது. நாட்டின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி போன்ற நிலை தற்போது உள்ளது. யாரை வேண்டுமென்றாலும் பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    நீதிமன்றங்கள் மீது நெருக்கடி உள்ளது. மத்திய அமைப்புகளை அரசு நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வருகிறார்கள். ஊழல், அராஜகம் அதிகரித்து வருகிறது. சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. அந்தக் காலத்திலும் இதே நிலைதான். இந்திராஜி மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றினார்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    எமர்ஜென்சி அறிவித்தபோது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் சிவசேனா எமர்ஜென்சியை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
    • அன்றைய தினம் அரசியல் சாசன படுகொலை தினமான அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சியை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்தரிகை குரல் ஒடுக்கப்பட்டது. அன்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    இந்த நிலையில் ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ஜூன் 4 மோடி விடுவிப்பு தினம் என பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    10 வருடங்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கிய 2024 ஜூன் 4-ந்தேதி வரலாற்றில் மோடி விடுவிக்கப்பட்ட தினம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போடப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவூட்டுவதாக அமையும்.

     காங்கிரசால் இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தை கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்திரா காந்தி 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சியை அறிவித்தார்.
    • அன்றைய தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டது. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவாரக்ள்.

    இந்த நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

     அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் என்று தெரிவித்துள்ளார்.

     மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக அரசியலமைப்பு அழிக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×