search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Journey"

    • பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார்.
    • இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரெயிலில் செல்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் போலந்தில் பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

    போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோரைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அங்கு வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    போலந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, அங்கிருந்து ரெயில் மூலம் வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

    ரஷிய போர் தொடங்கியதற்கு பின் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி போலந்தில் இருந்து சொகுசு ரெயில் மூலம் உக்ரைன் செல்கிறார். சுமார் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தன்மயா லால் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுக்கு மேலாக இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.

    கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
    • ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இயக்கப்படும் பல ரெயில்களில் விஷ பூச்சிக்கள் பயணிகளை கடிப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பெண் பயணி ஒருவரை பாம்பு கடித்ததாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண், ஆயுர்வேத டாக்டர் ஆவார். கேரள மாநிலம் நீலம்பூரைச் சேர்ந்த காயத்ரி (வயது 25) என்ற அந்த டாக்டர், நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில வல்லப்புழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கைக்கு அடியில் காலில் ஏதோ கடிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கீழே குனிந்து பார்த்தபோது, அங்கு எதுவும் இல்லை. ஆனால் காலில் பல்லால் கடித்த காயம் காணப்பட்டது.

    பாம்பு கடித்தது போன்ற காயம் இருந்ததால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையில் ரெயில், வல்லப்புழா நிலையத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, உடலில் விஷம் ஏறவில்லை என தெரிய வந்தது.

    எனவே அவரை கடித்தது பாம்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடித்தது எது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

    வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் எலி இருப்பது தெரியவந்தது. எனவே அது தான் டாக்டர் காயத்ரியை கடித்திருக்கலாம் என தெரிகிறது.

    ×