search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women's t20 world cup"

    • அக்டோபர் 4ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
    • மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. அக்டோபர் 20 ஆம்ட தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

    மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியா இடம் பிடித்துள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணி விவரம் வருமாறு:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டி (விக்கெட் கீப்பர். உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது), பூஜா வாஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல் (உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது). சஜனா சஜீவன்.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நிடா தருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் நிடா தர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிடா தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் விவரம் பின்வருமாறு:

    பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப் மற்றும் துபா ஹாசன்

    ரிசர்வ் வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம் மற்றும் உம்மி ஹனி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
    • வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்கதேசம் நடத்த இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்கதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்கதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐசிசி பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

    ஆனால், அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதாலும், இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் ODI உலக கோப்பை நடக்கவுள்ளதாலும் ஐசிசியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    ஆதலால் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து விரைவில் ஐசிசி முடிவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    • போராட்டங்கள், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்காளதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்காளதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    • 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.
    • இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். அதன் முடிவில் அந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

    குரூப் ஏ : ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதி சுற்று அணி

    குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தகுதி சுற்று அணி 

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார். மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது. கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 

    • பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    துவக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெர்த் மூனே களமிறங்கினர். ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பெர்த் மூனே- கார்ட்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது. அதிரடி காட்டிய கார்ட்னர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மூனே அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.

    கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் மெக் லேனிங் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். எலிஸ் பெர்ரி 7 ரன்னிலும், ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சிறப்பாக இருந்தது. ஆனால் பெர்த் மூனேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.  

    • தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது
    • ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஐந்து முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் களமிறங்குகிறது. அதேசமயம், முதல் முறையாக உலக கோப்பை இறுதிச்சுற்றில் நுழைந்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    • டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
    • இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது.

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    கேப்டவுனில் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கேப் டவுனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவலாக உள்ளது. இதேபோல், உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆவலில் தென் ஆப்பிரிக்காவும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டி சவாலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா எல்லா உலக கோப்பை போட்டியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணியாக உள்ளது.
    • டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கேப் டவுனில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நாளை நடக்கும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    • 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் 2வது அரையிறுதி போட்டி இன்று கேப்டவுனில் நடந்தது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் மோதியது, டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும், லாரா வல்வார்ட் 53 ரன்களும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர். நாட் ஷிவர் பிரன்ட் 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின்னர் கேப்டன் ஹீதர் நைட் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால் மறுமுனையில் அமி ஜோன்ஸ் (2 ரன்), சோபி (1 ரன்), கேத்ரின் ஷிவர் பிரன்ட் (0) என விரைவில் பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக திரும்பியது.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட கிளென் ஒரு ரன் தட்டிவிட்டு அடுத்த வாய்ப்பை கேப்டனுக்கு கொடுத்தார். ஆனால் 2வது பந்தில் கேப்டன் நைட் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டீன், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். கடைசி இரண்டு பந்துகளில் கிளென் 4 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினார். டாஸ்மின் பிரிட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

    நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன், தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    ×