என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Zomato"
- தாமதமானதற்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்.
- இன்னமும் நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
ZOMATO டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் தொடர்மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சோமாட்டோவில் காஃபி ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டர் தாமதமாக வந்தாலும் மழை பெய்ததால் சூழ்நிலையை புரிந்துகொண்டேன்.
ஸ்வேதாங் ஜோஷி என்ற டெலிவரி செய்யும் நபர் என்னுடைய ஆர்டரை கொண்டு வந்தார். தாமதமானதற்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது பாதத்தில் அடிபட்டதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். டார்ச் அடித்து பாதத்தை பார்க்க முயன்றபோது அவரது பிறப்புறுப்பு வெளிப்பட்டது. அப்போது அந்த நபர் சிரித்துக்கொண்டே கேலியாக தன்னிடம் உதவி செய்யுங்கள் எனக் கேட்டதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், உடனடியாக ZOMATO நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும் அவர்களின் பதில் மேலும் தன்னை துயரப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 1 மணிக்கு யாரும் பணத்தை திரும்பப்பெறுவதற்கு ZOMATO வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்ள மாட்டார்கள். எனக்கு நடந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் அவர்கள் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று கேட்பதாக கூறினார்கள். மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார்கள் .ஆனால் இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பதிவில், ZOMATO தன்னை தொடர்பு கொண்டதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனாலும், இன்னமும் நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
- ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
- book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.
சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
- சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.
- உணவு டெலிவரி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
- ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன.
இந்த நிறுவனங்கள் உணவுக் கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக் கொள்கின்றன.
மேலும், உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.
இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
- வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது.
- நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வாடா மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது.
வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. முக்கியமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நிலவும் அதீத வெப்ப அலையால், குழந்தைகள், பெண்கள், உடல் நலம் குன்றியோரர், இணை நோய்கள் உள்ளோர், நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த வகை தொழிலாளர்களில் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் உணவு டெலிவரி, பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் அடங்குவர். டிஜிட்டல் மயமான உலகில் மக்கள் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சமாளிக்க முடியாத வகையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ வாடியளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஸோமாட்டோ நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது
தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ஸோமாட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் உண்மையாகவே தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் மதிய நேரங்களில் உணவு ஆர்டர்களை ஏற்காமாட்டோம் என்று ஸ்வ்மாடோ அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
- நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
- புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என ஜொமோட்டோ கேட்டுக்கொண்டது.
ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா தனது பதிவில் கூறி இருப்பதாவது:-
புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்தது. அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் இணையதளத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ordered paneer biryani from pk biryani house karve nagar pune maharashtra and I found a chicken piece in it(I am a vegetarian) I already got refund but this os still a sin since I am a religious person and it has hurt my religious sentiments.#pkbiryani #zomato pic.twitter.com/nr0IBZl5ah
— Pankaj shukla (@Pankajshuklaji2) May 13, 2024
- அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
- சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது
ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.
மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.
பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது.
- உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.
ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் போன்ற உயர்ரக பைக்கில் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் ஆச்சரியத்தை ஆழ்த்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் அக்ஷய் ஷெட்டிஹர் என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது. அவர் உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. ரூ.2.4 லட்சம் விலை கொண்ட அந்த உயர் ரக பைக்கில் பயணம் செய்த ஊழியர் யார்? என்பது பற்றி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், அது ஜொமோட்டோ நிறுவனர் பீபந்தர் கோயலாக இருக்கலாம் எனவும், சில பயனர்கள், அவர் உணவு வினியோக நிறுவனத்தை விளம்பரபடுத்துவதற்காக நியமிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
- வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
- சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.
அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.
After Watching this video, I Don't Think you Have any Other Motivation to Study Hard#UPSC #Motivation pic.twitter.com/BPykMKBsua
— Ayussh Sanghi (@ayusshsanghi) March 29, 2024
- பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர்
- சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது பெண் ஊழியர்களுக்கு டீ சர்ட்டுக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக மாற்றி அமைத்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இந்த புதிய சீருடையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆதலால் தான் நாங்கள் பெண்களுக்கான சீருடையை மாற்றுள்ளோம் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும்.
- தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம்.
உணவு விநியோக செயலியான சொமேட்டோ, தனது வலைத்தளத்தில், சிறிய உணவகங்களின் வணிகங்களுக்கான தினசரி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இந்த திட்டம் உணவகங்கள் தங்கள் வாராந்திர கட்டண திட்டத்தால் வரும் நிதி சிக்கல்களை சமாளிக்க மற்றும் வருவாயை அடிக்கடி பெற உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சிறிய அளவிலான உணவகங்களுக்கானது மற்றும் ஒரு உணவகத்திற்கு மாதத்திற்கு 100 ஆர்டர்கள் இருந்தால், அது தினசரி கட்டண திட்டத்துக்கு மாற்றப்படும். வாரந்தோறும் அல்லது தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம். மாறுவதற்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.
முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும். உணவக உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளும்போதும், பிரபலமான நிறுவனங்களைக் கையாளும் போதும் உணவு விநியோகத்தின் போட்டித் துறையில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
"செயல்திறன் மூலதனம் மற்றும் நிலையான பணப்புழக்கம் ஆகியவை அவர்களின் வெற்றிக்கான மிக முக்கியமான இரண்டு கூறுகள்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
- இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்
கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.
சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.
ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.
இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.
ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.
ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.
பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.
அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்