என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "birthday"
- தோகைமலை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது
- குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர்
கரூர்,
நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் தோகைமலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் தலைமையில், தோகைமலை ஒன்றிய தலைவர் சுரேந்தர் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், வடிவேல், பாஸ்கர், பொன்னர், அருண், ரமேஷ் மற்றும் பொன்னடி ஆகியோர் ஏற்பாட்டில் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். பின்னர் குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள் நிரோஷ் குமார், வினோத், தளபதி தியாகு மற்றும் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செந்துறையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடபட்டது
- விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகே ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் கட்சி துணை தலைவர் டாக்டர் மணிரத்னம் கலந்து கொண்டு செந்துறை ஒன்றியத்தில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை கல்வியே முன்னேற்றம் செய்யும். ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் கிடைக்கும். இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை கொடுத்துள்ளேன். எனது வாழ்நாளில் 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று உறுதி ஏற்று உள்ளேன் என்று பேசினார். முடிவில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
- ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- இந்த முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்
திருப்பரங்குன்றம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கினார்.
தொடர்ந்து நடந்த ரத்த தான முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், ராஜ்குமார் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பகுதி தலைவர் நாகேசு வரன், வட்டார தலைவர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் முத்து வேல், சவுந்தர பாண்டி, வித்யாபதி, சத்யன், சரவணபவன், தங்க ராஜா, பழனிகுமார், மலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பா ளரும், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு 50 மின் விசிறிகள் மற்றும் 4 வாட்டர் ஹீட்டர்களை வழங்கினார்.
இதில், மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி,
மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடந்து அமைச்சர் கீதாஜீவன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக வரலாற்றில் இடம்பெற்ற தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கொண்டாடப்பட்ட உள்ளது. 3-ந் தேதி கலைஞரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தி.மு.க சார்பிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை முன்னிட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழி திரையுலகினரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்.. அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய சங் பரிவார கும்பல்- டாக்டர் ஷர்மிளா பகீர் குற்றச்சாட்டு
தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.
பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங்,
மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள்,
வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,
மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத்து. ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன்பாபு, சுபேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், சரண்யா, ஜான், ராமும்மாள்,
விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வக்குமார், ஜெயசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், நாராயணன், டென்சிங், மூக்கையா, மற்றும் சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், ராஜா, மகேஸ்வரசிங், அருணகிரி, பாலசுப்பிரமணி, பெரியசாமி, சிவசுந்தர், இசக்கி, அற்புதராஜ், பெலின்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் ஓன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி நெல்சன் முத்து நகர் கிளை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் ராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செய்திருந்தார்கள்.
- கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
- முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், பேரூர் அவை தலைவர் திரவியம், சுந்தரபாண்டி, மணி, கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- ஒவ்வொரு குழந்தையும், தனக்குக் கிடைக்கப்போகும் பிறந்த நாள் பரிசை ஆவலோடு எதிர்பார்க்கும்.
- நீங்கள் பரிசு கொடுக்கப்போகும் குழந்தையின் தேவை என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.
பரிசுப் பொருட்களை விரும்பாத குழந்தைகள் கிடையாது. சிறுவயதில், நமக்கு மிகவும் பிடித்த பொருள் பரிசாகக் கிடைத்தால், அதை அத்தனை பாதுகாப்பாய் வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து மகிழ்ந்திருப்போம். இந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இன்றைய குழந்தைகளிடமும் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும், தனக்குக் கிடைக்கப்போகும் பிறந்த நாள் பரிசை ஆவலோடு எதிர்பார்க்கும்.
அவ்வாறு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளின் குழந்தைகளுடைய பிறந்த நாளுக்கு, ஒரு நல்ல பரிசை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதோ சில ஆலோசனைகள். நீங்கள் பரிசு கொடுக்கப்போகும் குழந்தையின் தேவை என்ன என்பதை கண்டுபிடியுங்கள். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு பேனா தேவைப்படலாம்.
ஒரு குழந்தைக்கு அழகான புத்தகப்பை, இன்னொரு குழந்தைக்கு பரீட்சைக்கான எழுத்து அட்டை. இவ்வாறு தேவை அறிந்து பரிசு கொடுத்தால் பயனுள்ளதாகவும், மனதில் நிற்பதாகவும் இருக்கும். அடுத்தபடியாக நீங்கள் கொடுக்கும் பரிசு, வயதுக்கு மீறியதாக இருக்கக்கூடாது. உதாரணத்துக்கு டீனேஜ் பருவ பிள்ளைகளுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே வயதுக்கு மீறிய விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் எது வயதுக்கு மீறியது என்பது மாறுபடும். அதை உணர்ந்து கொடுங்கள்.
நீங்கள் கொடுக்கப்போகும் பரிசு, குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் இணைந்து உபயோகிக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. உதாரணமாக, வரைவதற்கு தேவையான வண்ணங்கள் - பிரஷ், அதற்கான நோட்டு புத்தகங்கள், கைகளால் தொட்டு விளையாடும் 'க்ளே' போன்றவற்றை கொடுக்கலாம். இல்லையென்றால், செடிகள் கொடுக்கலாம். இது குழந்தைகளை இயந்திரமாக்காமல் காக்கும்.
அவர்கள் தங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடவும் உதவும். ஒரு குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்து செயல்பட உதவும் பரிசைக் கொடுங்கள். உதாரணமாக, இசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இசைக்கருவிகள்; விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள்; கம்ப்யூட்டரில் கோடிங் மாதிரி நவீன விஷயங்களில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு அதுதொடர்பான புத்தகங்களைக் கொடுக்கலாம்.
புகைப்பட ஆல்பங்கள் எப்போதுமே குழந்தைகளுக்கு ஒரு இனிய அனுபவம்தான். ஒரு புகைப்படத்தை தொட்டுப்பார்த்து அந்த நொடியை உணர்வதை, எந்த டிஜிட்டல் சாதனமும் கொடுத்திடாது. இந்த தலைமுறை குழந்தைகள், அந்த உணர்வை பெறுவது சொற்ப நேரங்களில்தான். ஆகவே, குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படங்களை இணைத்து ஆல்பமாக போட்டுக் கொடுப்பது சிறந்த பரிசாக அமையும்!
பரிசு பொருட்கள் பேக் செய்வதில் புதுமை
குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்களை பேக் செய்யும் விதத்திலும், அவர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்த முடியும். வெள்ளைத் தாளில் பரிசுப் பொருளை பேக் செய்து, வண்ணம் தீட்டும் பென்சில்களை அதில் இணைத்து, அவர்களே வண்ணம் தீட்டும் விதத்தில் கொடுக்கலாம். கேக் துண்டு வடிவத்தில் பரிசுப் பொருளை பேக் செய்து, அதில் சிறு மெழுகுவர்த்தியும் இணைக்கலாம். பரிசுப்பொருள் பேக் செய்த பார்சலையே, உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதத்தில் ஏதாவது ஒரு விலங்கு, காய்கறி மற்றும் பழங்கள் உருவத்தில் மாற்றி அமைக்கலாம். குழந்தைகள் இதை மிகவும் விரும்புவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்