என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camp"

    • ஆதிதிராவிட, பழங்குடி யின இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் அனைத்து வகுப்பு மாணவர்களும், இந்த முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    ஆதிதிராவிட, பழங்குடி யின இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஆதிதிராவிட, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் என்.சி.எஸ். மூலம் இணையதள வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் பிரபல மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம், டெல்லியை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் அனைத்து வகுப்பு மாணவர்களும், இந்த முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு ரெட்டியார்பாளையம், கனரா வங்கி,2-ம் தளத்தில் உள்ள அலுவலகத்தை 0413- 2200115 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட வர்களுக்கு ஊன்றுகோள், செவிதிரன் கருவி, செயற்கை கால், பேட்டரி சைக்கிள், கையுரை, வீல்சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தனர்.

    இதற்கான கருவிகள் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கலகத்தில் தயார் செய்து வருகிற டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் சேலம் உருக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் உலகநாதன், வெங்கடாசலபதி, ஆகியோறும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன், பேச்சு பயிற்சி நிபுணர் ஸ்ரீ தேவி மற்றும் எக்காம்வெல் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட சிறப்பு பயிற்று னர்கள், முட நீக்கு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் நாளை அஞ்சல் குறைதீர் முகாம் நடந்தது
    • குறைகளை நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்

    கரூர்:

    கரூர் கோட்ட அஞ்சல் துறை அலுவல கத்தில், சிறப்பு குறைதீர் முகாம் நாளை (4-ந் தேதி ) நடக்கிறது. இதுகுறித்து, கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 31ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை தபால் துறை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கரூர் கோட்ட தபால் அலுவலகத்தில், நாளை மதியம் 3 மணிக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், தபால் நிலையங்களில் அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை, வாடிக்கையாளர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், dokarur.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கல்லாலங்குடி ஊராட்சியில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யம் கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம் 2021-2022 பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து திட் டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறங்குழவன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதா ரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன. தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழி காட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையி லும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத் திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' ஆகும் என பொது மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

    சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா அறிவழகன், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை குணசீலன், இளமாறன், வெற்றியப்பன், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் ஜெனித் அரிஸ்டாட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் பிற துறைகளை இணைத்து செயல்படுத்துவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் முன்னிலை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், நிதி சார் கல்வி ஆலோசகர் இளங்கோ, கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்ட பணிகள் ஆணைகுழு வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா வழிகாட்டுதலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் குடும்ப நல நீதிபதி முத்துகுமரன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதில் அரசின் நலத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீதித்துறை தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். 

    • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்

    கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனை தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய முறைகளையும் எடுத்து கூறினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, ஆசிரியர் நிர்மலா, மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
    • பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது .

    வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலரும் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பிரேம் குமார், மற்றும் வாலிகண்டபுரம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் , டாக்டர் பிரதீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்புண், இரத்த சோகை , இரத்த அழுத்தம் , கண் பார்வை பரிசோதனை போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் அயன் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இம்முகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 356 பசுக்கள், 800 ஆடுகளுக்கு சிகிச்சை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பூண்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை ஊராட்சி தலைவர் சுந்தராம்பாள் சாம்பசிவம் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் அரியலூர் சொக்கலிங்கம் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜா, கார்த்திகேயன் , கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, இளங்கோவன் , செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 356 பசுக்கள், 620 வெள்ளாடுகள், 180 செம்மறியாடுகள், 250 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 13 மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்கு கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ, பட்டப்படிப்பு, டி.பார்ம், லைபரியன் முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
    • மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உ ள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்ற சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத் தில் நடைபெற்றது.ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மாணவர்கள் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு முகாமை மாவட்ட தொடர்பு அலுவலர் எம். சீனிவாசன் ஆய்வு செயது பேசினார்.

    • நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் சுள்ளிபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள் குறித்து விவசாயி–களுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள், மானிய விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ரிவுலிஸ் சொட்டுநீர் நிறுவன உழவியல் நிபுணர் கிருஷ்ணா தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் சுள்ளிபாளையம் கிராம உழவர் ஆர்வலர் குழுக்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.

    ×