search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Awareness"

    • துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார்
    • இனிப்புகள், பட்டாசுகள் வழங்கப்பட்டது

    வேலூர்:

    விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து சத்துவாச்சாரியில் உள்ள ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து, அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்கத் தொடங்க வேண்டும். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து சற்று ஒதுங்கி, பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது.

    மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்குக் கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது க்ரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    மேலும் புவி வெப்பமாவதை தடுப்பது, காற்று மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு சமூக சேவகர் சுரேஷ் துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.

    • தீயணைப்புத் துறை சார்பில் விளக்கம்
    • மாணவிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தீயணைப்பு நிலைய அலுவ லர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பருவ மழையை முன்னிட்டும், தீவிபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×