என் மலர்
நீங்கள் தேடியது "dogs"
- வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
- நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.
தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.
இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
- சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
நாய்கள் தொல்லை
அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்னர்.
மாநகராட்சி நடவடிக்கை
அதைேயற்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின் பேரில், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சந்திப்பு பஸ் நிலையம் பகுதிகள், ெரயில் நிலைய போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 நாய்களை வலை விரித்து பிடித்தனர்.
இந்த பணியானது மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
- வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
- கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
- 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
- நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது.
திருப்பூர்:
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குட்பட்ட வாா்டு எண் 11, 13, 14 ஆகிய வாா்டுகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் என பலரையும் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.
தெருநாய்கள் தொல்லை தொடா்பாக புகாா் அளிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. ஆகவே தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்க்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
- சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள நாச்சிகுளம் நகரின் முக்கிய பகுதியாகும்.
இங்குள்ள தெருக்களில் சமீப காலாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்கள், கடைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.
அதேபோல், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
- இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாவட்டத்திலேயே முதன் முறையாக நடந்த நாய்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அமைப்பில் நாய்களை நிறுத்தி வைத்திருந்தனர். அருகிலே அதற்கு தேவையான தண்ணீர், உணவு பொருட்களும் இருந்தது.
கண்காட்சியில் இடம்–பெற்று இருந்த ஒவ்வொரு நாய்களையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள், நாய்கள் உண்ணும் உணவுப்–பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து போலீசாரின் நாய்கள் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது. தொடர்ந்து கண்காட்சி நடந்து வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து இன்று மாலை நாய்கள் கண்காட்சி நடைபெறும். இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டும். சிறந்த நாய் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
- தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் எச்சரிக்கை
- பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான கோபால் நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுவை மாவட்டத்தின் மையப் பகுதியான உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.
குறிப்பாக இந்திராகாந்தி நகர், சாந்தி நகர், உருளையன்பேட்டை, குபேர் நகர், கென்னடி நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களால் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. தெருநாய்களின் தொல்லையால் மேற்கண்ட பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. மேலும், வருகின்ற மாதம் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள், மாணவர்கள் தெருக்களில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
அதுபோல், நாய்கடித்தவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவனைக்கு சென்றால் போதிய விஷக்கடி மருந்தும் சரிவர இல்லை என்ற நிலையும் இருக்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் தங்களிடம் புகார் கடிதம் அளித்தோம்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட தெரு நாய்களின் பிரச்சனை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசும் மாநிலம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கால்நடைத்துறை இணைந்து தெரு நாய்களை பிடிக்க நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.
ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆகவே, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
- நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.
ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.
வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.
- சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
- செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை நாய்கள் கடித்து குதறியது. 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
- உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு என்பது கொடுமையானது. நாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு பவர்களின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இறப்பார்கள். எனவே மதுரை நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்பு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு வாகனங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது வெகு சொற்பமாக நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமையும் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதிலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2021 -ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும்,
2022 -ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
- இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.
இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.
எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
- விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.
நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.
சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.