search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
    • இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல் படுத்தப்பட உள்ளது.

    விருதுநகர்

    தமிழகத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். முதல் கட்டமாக பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் சேகரித்து தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் நமது செழுமையான தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாற்றும் விதமாக தனி நபர்களிடமிருக்கும் இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    கலாசாரம் மற்றும் பராம்பரியத்தின் பெரிய தடயங்களை கால மாறுதல்கள் மற்றும் மனித அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தனி யார்களிடம் உள்ள பதிவேடு களின் தேசிய பதிவேட்டில் இணைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் பொருட்டு கோவை, சேலம், திருச்சி ராப்பள்ளி, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட பதிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினரிடமோ மற்றும் தனி நபர்களிடமோ பழமையான மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஏதேனும் இருப்பின் அப்பதிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 04562-252601, 252602, 252603-மற்றும் 9445008161 ஆகியவற்றின் மூலம் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியா ளரை (பொது) தொடர்பு கொண்டும் அல்லது அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரி விக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    • காரைக்குடி-தூத்துக்குடி ரெயில் பாதையை செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
    • வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியிடம் பொது நலகமிட்டி தலைவர் பரமஞானம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்வமணி, செல்லப்பாண்டி, நரிப்பை யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது வரை அந்த பணிக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே பாதை அமையப்பெற்றால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவதாக நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.

    • கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது
    • லோக் ஜனசக்தி தமிழ் மாநில தலைவர் தெரிவித்தார்

    திருச்சி:

    லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ் மாநில தலைவர் வித்யாதரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இப்போது அவர் கூறியதாவது,

    இந்திய நாடாளுமன்றத்தில் 40 ஆண்டு காலம் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக இருந்து பல்வேறு சாதனைகள் செய்த மறைந்த சமூக நீதி காவலர் ராம் விலாஸ் பசுவானுக்கு தமிழ்நாட்டில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மாயமாக்கப்படும் சூழலில் தனியார் நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

    எல்லா மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில ஒன்றிய அரசு கல்வியை ஒன்றிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதில் ஒன்றிய அரசு தமது பிடியை தளர்த்த வேண்டும் என்றார்.

    பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், நம்பியார், சுந்தரவடிவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் வலியுறுத்தினார்.
    • தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ள ப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாய பணிகள் தற்போது தொடங்கியு ள்ளதை முன்னிட்டு தேவை யான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது. அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பயனா ளிகளுக்கு முழுமையாக கிடைத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
    • ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து அறநிலையத்துறை அலுவ லகத்துக்கு சென்ற கென்னடி எம்.எல்.ஏ. அறநிலை யத்துறை ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை, ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார்.

    அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று நிதி அளிப்பதற்கான ஆவணங்களை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து நிதி உதவியினை வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.

    இதில் கலியமூர்த்தி,ஊர் பஞ்சாயத்தாரர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கி யராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ரவிக்குமார், இளைஞர் அணி பஸ்கள், கவி, அரவிந்த், ரகுராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு தொடக்கப்ப ள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கல்வி நலன் மாணவர் நலன் ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும்.

    ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்ப டுத்த வேண்டும்.

    இதற்கு ரிய நிதியினையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தப் போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.

    இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்

    கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ெரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • திருமங்கலம் நகராட்சியில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் -விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள வார்டுகள் 21, 21 26 மற்றும் 27 வார்டு களுக்கான பகுதி சபை கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் ஆதவன்அதியமான் முன்னிலை வகித்தார். இதில் 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டோல்கேட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருமங்கலத்தில் பெரிய பிரச்சினையாக ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பால பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. அதன்பின் பணிகள் தொடங்கவில்லை. விதிமுறை மீறி கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கூறுகையில், ெரயில்வே மேம்பால பணிகள் குறித்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதவிக்கு வந்தவுடன் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    தற்போது டோல்கேட் எதிர்ப்புக்குழுவினர் முதல்வரை சந்திக்க வேண்டும். எங்களிடம் வழங்கிய கடிதத்தினை முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் விரைவில் முதல்வரை இது தொடர்பாக சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.

    கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, வினோத், ரவி, ராஜகுரு, முத்துகாமாட்சி, சாலிகாஉல்பத் ஜெய்லானி, ரம்ஜான்பேகம் ஜாகீர், பகுதி சபை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு ரூ. 100 செலவு.

    நாகப்பட்டினம்:

    22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து நாகையில் இரண்டாவது நாளாக மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்னதர்.

    அப்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம், அதிகாரிகள் ஆய்வுகுறுவை அறுவடை முடிந்த நிலையில் மழையால் நனைந்த நெல்லை கொள்முதல் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    அதனை தொடர்ந்து நேற்றைய தினம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனிடையே இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குநர், எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வில், கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளிடம் மத்திய குழுவினர் குறைகளை கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரி நெல்லை சேகரித்த மத்திய குழுவினர் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று சென்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் செலவு ஏற்படுவதாகவும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் தடைப்பட்டு நின்றால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதாக நினைக்காமல் அது நாட்டின் இழப்பு என கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வெண்மணி, வலிவலம், எட்டுக்குடி, உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    • இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர், மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குட்டி.தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி, மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் உபயதுல்லா, எம்.பி.க்கள் ராமலிங்கம், சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களுமான அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், ராமசந்திரன், மகேஷ்கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், குடந்தை மாநகர செயலாளர்கள் தமிழழகன், செந்தில்குமார், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, பிரசார குழு உறுப்பினர் இறை.கார்குழலி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ், வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கவுன்சிலர் மேத்தா உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான பொதுக்குழுக்கூட்டம் பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது
    • உலர் சாம்பல் உற்பத்திக்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான பொதுக்குழுக்கூட்டம் பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    மாநிலத் தலைவர் அருள்ராஜா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கடலில் கலக்காமல் சிறு குறு தொழிலுக்கு இலவசமாக வழங்க வேண்டும், அனல் மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் 20 சதவீத உலர் சாம்பல் உள் ஒதுக்கீட்டினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், உலர் சாம்பல் உற்பத்திக்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் கொடுத்துள்ள இடைக்கால தீர்ப்பை அமல்படுத்தி செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உலர் சாம்பல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உட்பட சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள உலர் சாம்பல் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கழிவாக வெளியேற்றப்படும் சாம்பலை சிறு-குறு தொழிலுக்கு இலவசமாக வழங்காமல் கடலில் கரைக்கப்படுகிறது இதற்கு டன் ஒன்றுக்கு 500 ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    மேலும் சாம்பலை இலவசமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டது. தேர்தலை சங்கத்தின் நிறுவனர், பொருளாளர் மற்றும் தேர்தல் அதிகாரியான சென்னியப்பன் நடத்தினார். இதில் தூத்துக்குடி மண்டல புதிய தலைவராக முருகன், செயலாளராக அரவிந்த், பொருளாளராக முகமதுகான் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவர் ராகவன், மாநில, மண்டல, மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • தார்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தலைமை பொறியாளரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    • விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்ப ணிகள் நடந்தது.

    தற்போது இந்த சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர் பாலமுருகனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார்.

    அப்ேபாது தலைமைப் பொறியாளரிடம் எம்.எல்.ஏ. கூறுகையில், மேற்கண்ட சாலை மிகவும் பழுதடைந்து காணப்படு வதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆகவே நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    மேலும் சாலையின் விரிவாக்கத்திற்காக சாலையின் உள்பக்கமாக உள்ள மின் கம்பங்களை நகராட்சி மூலம் சாலை யின் வெளிபக்கமாக மாற்றி யமைத்து–தருவதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    அதற்கு தலைமை பொறியாளர் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை என 2 துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி மதிப்பீடு தயார் செய்து டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் நிர்வாக அனுமதி பெற்று விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

    அதற்கு எம்.எல்.ஏ. மழைக்காலம் தொடங்க இருப்பதால் புதிய தார்ச்சாலை அமைக்கும் வரை சாலையில் உள்ள குண்டும் குழியையும் சீரமைக்கும் பணியை (பேட்ச் ஒர்க்) மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக சாலையை சீரமைத்து தருவதாக கூறினார்.

    அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.

    ×