என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fear"

    • தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
    • அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றது. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் நாய் கடியால் தினமும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நாய் கடியால் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து அப்புறபடுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    2 நாட்களில் மட்டும் தெருக்களில் நடந்து சென்ற 12 பேரை வெறிபிடித்த நாய்கள் பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடந்துசெல்ல அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக கீழக் கரை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டம் வழக்கம் போல் கண் துடைப்பு கூட்டமாக இல்லா மல் கீழக்கரை நகரில் வெறி நாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வலைதளங்களில் பொதுமக்களின் கண்டனம் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது.
    • காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா ?

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி (வயது 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று காலையில் வெளியில் சென்றார். பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த முகமது ஷாலியை எழுப்பி தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விக்கிவாண்டி போலீசார், காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.
    • மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. நேற்று இரவு கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அந்த தெரு நாய்களை அங்கிருந்த ஒருவர் துரத்த முற்பட்ட போது அவரை அந்த நாய்கள் ஆக்ரோஷமாக கடிக்க சென்று விட்டன.

    அவர் உடனே அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் 2-வது முறையாக ஏற்பட்ட நில அதிர்வில் பொன்னுக்கரை நேதாஜி வீதியில் உள்ள இரு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திருக்கூர், அழகப்பநகர், வரந்தரப்பள்ளி, புதுக்காடு, நென்மணிகரை ஆகிய ஊராட்சிகளில் பல இடங்களில் நிலஅதிர்வும், வெடிச்சத்தமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பல இடங்களில் நில அதிர்வு மற்றும் வெடி சத்தம் ஏற்பட்டது. கடந்த 2 முறை நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில், நேற்று அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

    • வீடு, வீட்டு மனைகள் கணக்கெடுப்பால் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
    • நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருச்சி, 

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள 329 ஏக்கர் நிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அடிமனை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி, வெள்ளித் திருமுத்தம் கிராமத்துக்குட்பட்ட உத்தரவீதி, சித்திரை வீதி, அடையவளஞ்சான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 329 ஏக்கரில் பத்திரப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், பொதுமக்கள் அவசரத்திற்கு நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியவில்லை.இது தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த நிலம் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர் நல சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அம்மனு விசாரணைக்கு வர உள்ளது.இதனிடையே கடந்த ஜூன் மாதம், இந்த அடிமனை விவகாரத்துக்குட்பட்ட டிடி 1027-ல் கட்டப்பட்ட 329,91 ஏக்கர் இடத்திலும், பிளாக் வார்டு, டவுன் சர்வே எண்களில் உள்ள இடங்களில் தனிநபர்கள் பெயரில் மின் இணைப்பு ஏதும் வழங்கக்கூடாது என்றும், தனி நபர்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதனை கோவில் பெயருக்கு மாற்றம் செய்யவும் மின்வாரியத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் சில நாட்களாக வீடு வீடாகச் சென்று வீட்டின் உரிமையாளர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கேட்ட போது கோவில் நிர்வாகத்தின் உத்தரவின்படி கோவில் நிலத்தில் யார் யார் வசித்து வருகின்றனர் என்று பட்டியலிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை உரிமை மீட்புக்குழு சார்பில், போலீசில் புகார் அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லை க்குட்பட்ட கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை யில் நல்லாத்தூர் பெட்ரோல் பங்க் - தனியார் பள்ளிக்கு இடையே இடையே இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்குள்ள புளிய மரத்தின் பின்புறம் மறைந்து நிற்கும் மர்ம நபர்கள் சாலைக்கு வந்து கையை காட்டி வாகனத்தை நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகளை திசை திருப்பி, அவர்களை தாக்கி பணம், பொருள் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் வழிப்பறி நடந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி-கச்சிரா யபாளையம் சாலையில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் மர்ம நபர்களின் கைவரிசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த சாலையில் ரோந்து பணிக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது.
    • திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சாவடி பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு வணிக நிறுவன ங்கள் உள்ளன. அதில் ஜவுளி கடைகள், ஹோட்டல்கள், செல்போன் சர்வீஸ் கடைகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன.

    இந்த நிலையில் ஈகிள் டெக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஜவுளி கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட துணிகள் மற்றும் ரொக்கம் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. அதேபோல அதன் அருகே உள்ள கணபதி செல்போன் சர்வீஸ் கடையில் பழுது நீக்கத்தி ற்காக வந்திருந்த விலை உயர்ந்த 3 செல்போன்களும், 500 ரூபாய் ரொக்கமும் திருடு போனது. இதே போல வேறு சில கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஆனால் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமையாளர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஸ்ரீரங்கம் மங்கம்மாள் நகர் பகுதியில் காலி மனை புதர்களில் விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது
    • ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் மங்க ம்மாள் நகர் மெயின் ரோட்டில் ஒன்றிரண்டு காலி மனைகள் உள்ளன.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இருக்கும் இந்த காலி மனைகள் மரம் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.மேலும் காலி மனைகளில் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை போட்டு செல்வ தால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது.மேலும் காலி மனைகளில் பாம்பு போன்ற விஷ ஜந்து க்களின் நடமாட்டம் உள்ள தால் மக்கள் அச்சமடை ந்துள்ளனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீனிவா சன் கூறும்போது,இந்த பகுதியில் சமீப காலமாக குரங்கு மற்றும் நாய் தொல்லை அதிகரித்து ள்ளது. மயில்கள் அதிக அளவு நடமாடுகின்றன. இவை சில நேரங்களில் விஷ ஜந்துக்களை பிடித்து குடியிருப்பு பகுதிகளில் போட்டு விட்டு செல்கிறது. காலி மனைகளில் மழை நீர் தேங்குவதால் கொசு தொல்லையும் அதிகரித்து ள்ளது.ஆகவே காலி மனைகளை சுத்தப்படுத்தி பொதுமக்க ளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொ ள்கிறோம்.காலி மனைகளில் குப்பை போட்டு செல்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனைகளை சுத்தமாக பராமரிக்க அதன் உரிமை யாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

    • 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
    • தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.

    உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.

    ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

    தற்கொலை செய்வதற்கான காரணம்

    குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.

    அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.

    அறிகுறிகள்

    நடத்தையில் மாற்றம்

    தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.

    நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.

    போதை மற்றும் மது

    மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    மனநிலையில் மாற்றம்

    தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.

    இழந்ததை நினைத்து கவலைப்படுதல்

    மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.

    தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    தற்கொலை தடுப்பு

    தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

    • மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    • பெரம்பலூரில் டிப்-டாப் உடையணிந்து வீடுகள் தோறும் செல்லும் ஆசாமிகளால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்
    • கியாஸ் செக்கிங் என்று வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் சரியாக உள்ளனவா? என சரி பார்க்க வந்திருக்கிறோம். இதற்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.250 என கூறி பொதுமக்களிடம் வீடு வீடாக சில டிப்-டாப் ஆசாமிகள் கேட்டு வருகின்றனர். வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் உண்மை என நம்பி ரூ.250 செலுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்று வரும் நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியானவர்களா? என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்தாக வேண்டும் என்ற பட்சத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இறக்கும் நபர்களுடன் வந்து இது போன்ற ஆய்வுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    ×