என் மலர்
நீங்கள் தேடியது "floods"
- ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன.
- 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன. அங்குள்ள 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
நாகோன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாமில் வெள்ளம் மற்றும் புயலில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்.
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
- மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஊட்டி:
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.
தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.
மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
- ராணுவ வீரர்கள் உயிரிழந்தற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் உள்ள சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் மூழ்கியதால் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தேசம் துணைநிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மியான்மரின் வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
- 30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர் விவரம் தெரியவில்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது கச்சின் மாநில அரசு தெரிவித்துள்ளது.
30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மியீச்சினா மற்றும் வைமாவ் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.
மியீச்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி 5 அடிக்கு மேல் செல்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரண்டு அடி உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
- பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.
மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
- மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
வங்காளதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது.
- மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மதிக்கின்றன. மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று அசாமுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றார். இன்று காலை அசாமின் சில்சாருக்கு சென்றடைந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று அழைத்து சென்றனர்.
பின்னர் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அசாம் பயணத்துக்கு பிறகு ராகுல்காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் மெய்தி-குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போதும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே அவர் மணிப்பூருக்கு இரண்டு முறை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். தற்போது எதிர்கட்சித்தலைவரான பிறகு முதன் முறையாக ராகுல்காந்தி மணிப்பூர் செல்கிறார்.
- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து.
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு செடிகளில் தண்டு உடைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஊட்டி நகரிலும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஊட்டி நகரின் மத்திய பகுதியான பிரிக்ஸ் பள்ளி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
பிங்கர் போஸ்ட் பகுதியில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. ஊட்டி பெர்ன்ல் பகுதியிலும் மரம் விழுந்து, அது உடனடியாக அகற்றப்பட்டது.
கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இருவயல் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

மேலும் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் செல்லும் சாலையில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அத்துடன் மூங்கில் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்து, அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. பல மணி நேரங்களுக்கு பிறகு இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.
மேல் கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
மாயாறு, பாண்டியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2-வது நாளாகவும் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை, அவலாஞ்சி அணை, அப்பர் பவானி அணை உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியும் நிரம்பி வழிகிறது.அணைக்கு வினாடிக்கு 300கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 150 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
குந்தா அணை திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கூடலூருக்கு விரைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-339, அப்பர் பவானி-217, பந்தலூர்-136, தேவாலா-152, சேரங்கோடு, எமரால்டு-125, குந்தா-108, பாடந்தொரை-102, ஓவேலி-98, கூடலூர்-97, செருமுள்ளி-96, அப்பர் கூடலூர்-95, பாலகொலா-67, ஊட்டி, நடுவட்டம்-58.
- ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கல்லூரி மாவட்டம் பெடப்பயலு அடுத்த குஞ்சு வாடா பகுதியில் காட்டாறு உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவு செய்தார். சமையல் செய்யும் பெரிய பானையில் மூதாட்டியை அமர வைத்து நீந்தியபடி ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்றார்.
பின்னர் தாயை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான முறையில் தாயை பானையில் உட்கார வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மழை காலங்களில் இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பாலம் அமர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
- ஏராளமானோர் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
- தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று தவித்தபடி இருந்துள்ளனர். உயிர் பிழைப்பதற் காக அவர்கள் நடத்திய போராட்டம் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.
வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய நீத்து என்ற பெண், தான் வேலை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட தகவலை தெரிவித்திருக்கிறார்.
அப்போது அவர், "நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கி உள்ளேன். எனது வீட்டை சுற்றி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் வீட்டை சகதி சூழ்ந்திருக்கிறது. தயவுசெய்து எங்களை காப்பாற்ற யாரைவது அனுப்புங்கள்" என்று கதறி உள்ளார்.
இதையடுத்து நீத்து பணிபுரிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் வீடு இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவரது வீடு இருந்த பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் நீத்து வீடு இருந்த பகுதிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் நீத்து ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது தங்களது வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், ஆற்றை தங்களது வீட்டை நோக்க திருப்பி விட்டது போல் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் கூறி எப்படி யாவது காப்பாற்றுங்கள் என கூறி கதறி இருக்கிறார்.
ஆனால் சிறிது நேரத்தில் நீத்து இருந்த அவரது வீட்டின் சமையல் அறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். போன் பேசுவதற்காக வீட்டின் சமையல் அறைக்கு வந்தபோது அந்த பரிதாப சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நீத்துவின் கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
நீத்து வீடு இருந்த பகுதியில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தும் பலியாகி விட்டனர். மேலும் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர்.
- கனமழையால் ஜெய்ஜோன் சோ நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வாடா இந்திய மாநிலங்கள் வெள்ளக்காடாக மிதக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பருவகாலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருமண நிகழ்விற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் வந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜெய்ஜோன் சோ நதியை கடக்கும் போது அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை கடக்க வேண்டாம் என்று கார் ஓட்டுநரிடம் உள்ளூர் மக்கள் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றை கடந்துள்ளனர்.
ஆற்றில் இருந்து 5 பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 2 பேரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காரில் பயணித்த தீபக் பாட்டியா என்பவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளூர் மக்கள் அனுமதித்தனர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில்கனமழை பெய்தது.
- நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இடி-மின்னலுடன் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கனமழை பெய்ததால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. களக்காடு-சிதம்பராபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
களக்காடு பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 20 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 3-வது நாளாக கனமழை பெய்தது. அங்கு 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரம், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. தென்காசி சாலையில் அமைந்துள்ள புதூர், சீதபற்பநல்லூர், வெள்ளாளன்குளம் பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு வெடிப்பு விழுந்து கிடந்த நிலையில் 3 நாட்களாக தொடர் மழையால் ஓரளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மாநகரில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இரவில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது.
அதீத மின்னல் காரணமாக மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் வைத்திருப்போர் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழையும் வாசலில் குளம்போல் மழை நீர் தேங்கியது. டவுன் சாப்டர் பள்ளி மைதானம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ்பகுதி ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பாளையில் 9 சென்டி மீட்டரும், நெல்லையில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 15 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 113.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 359 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 117.45 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறில் 69.40 அடி நீர் இருப்பு உள்ளது. கொடுமுடியாறில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 39 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 30 மில்லி மீட்டர், காக்காச்சியில் 14 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பரவலாக பெய்தது. செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தென்காசியில் 10 மில்லி மீட்ரும், செங்கோட்டையில் 8.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை கடனா அணை, கருப்பாநதி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அணைகள் நீர்மட்டம் உயரும் அளவில் மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மணியாச்சி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கயத்தாறில் 43 மில்லிமீட்டரும், கடம்பூரில் 50 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம் பகுதியில் மதியத்திற்கு பின்னர் திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு கனமழை பொழிந்தது. அங்கு 39 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், கோவில் பட்டி, காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், காடல்குடி, விளாத்திகுளம், வைப்பார், வேடநத்தம் என அனைத்து பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது.