என் மலர்
நீங்கள் தேடியது "freight train"
- சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன
- நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- தஞ்சை மாவட்டத்தில்குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும்.
பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது.
- ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது. இதனால் பதறிப்போன ரெயில்வே கேட் கீப்பர் உடனே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இல்லையென்றால் ரெயில் தொடர்ந்து சென்றால் மேலும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
- 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு, கோதுமை மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
- பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .
- சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை க்காக அனுப்பப்படும்.
இது தவிர வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .
இந்த நிலையில் இன்று தஞ்சையில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி லாரிகளில் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
- அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.
தருமபுரி:
சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.
பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.
- ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
- தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.
78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Hoshiarpur, Punjab: The freight train, which was at a halt at Kathua Station, was stopped near Ucchi Bassi in Mukerian Punjab. The train had suddenly started running without the driver, due to a slope https://t.co/ll2PSrjY1I pic.twitter.com/9SlPyPBjqr
— ANI (@ANI) February 25, 2024
- டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.
சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
- அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
- இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் இன்று 9ஜூன் 20 அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இரேன்ப்து லோக்கோ பைலைட்களுக்கும் பதேர்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் ரஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அம்பலா- ஸ்ரீஹிந் ரயில்வே தடத்தில் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதால் மிதமிஞ்சிய போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடம்பத்தால் மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் ரயில்கள் செல்ல முடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா நோக்கிச் சென்ற மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் கவரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியதில் இரண்டு ஏசி பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.
பெட்டிகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரெயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- இந்த குறிப்பிட்ட ரெயிலானது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் எடுத்துக்கொண்டது.
- அந்த ரெயில் வழிதவறிச் சென்றது பின்னர் தெரியவந்தது.
ரெயில்கள் தாமதமாக புறப்படுவது, வந்து சேர்த்து எல்லாம் இந்தியாவில் படு சகஜமான மக்களுக்கு பழகிவிட்ட ஒரு விஷயம். 2, 3 மணி நேரங்கள் முதல் 1, 2 நாட்கள் வரைகூட ரெயில் தாமதம் குறித்து கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இந்தியாவிலேயே அதிக தாமதமாக தனது பயணத்தை முடித்த ரெயில் சுவாரஸ்யமான ஒரு சமாச்சாரம். 42 மணி நேரத்தில் பயணத்தை முடிக்க திட்டமிடப்பட்ட இந்த குறிப்பிட்ட ரெயிலானது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் எடுத்துக்கொண்டது.
இந்த நிலைமை 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தின் பஸ்திக்கு சென்ற சரக்கு ரெயிலுக்கு நிகழ்ந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு,பஸ்தியில் உள்ள தொழிலதிபரான ராமச்சந்திர குப்தா, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான டை- அமோனியம் பாஸ்பேட் (DAP) ஐ தனது வணிகத்திற்காக ஆர்டர் செய்தார்.
நவம்பர் 10, 2014 அன்று, 1,316 DAP சாக்குகள் ஒரு சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு திட்டமிட்டபடி புறப்பட்டது. ஆனால் ரெயில் வந்துசேர வேண்டிய நேரத்தில் வரவில்லை. ராம்சந்திர குப்தாவின் பல புகார்களுக்குப் பிறகு, ரெயில் வரும் பாதையிலேயே மாயமானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த ரெயில் வழிதவறிச் சென்றது பின்னர் தெரியவந்தது. ரெயில் உள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் உள்ள ஒரு பெட்டி [bogie] பயணத்திற்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்டதால், ரெயில் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருக்கிறது.

கோப்புப் படம்
கடைசியாக ஜூலை 25, 2018 அன்றுதான் ரயில் பஸ்தி நிலையத்தை வந்தடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சும்மா இருந்ததால் உரம் முற்றிலும் பாழானது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன.
- பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
கிருஷ்ணகிரி:
ஓசூர் வழியாக சேலத்திற்கு செல்ல இருந்த சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் இருந்து சேலத்திற்கு நேற்று மாலை 52 காலி டேங்கர்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையம் அருகில் தளி ஜங்ஷன் பக்கமாக நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
சுமார் 300 மீட்டர் தூரம் சென்று ரெயில் நின்ற பிறகு டிரைவர் வந்து பார்த்தார். அப்போது 18-வது டேங்கரின் முன்புறமாக இருந்த சக்கரங்கள் தடம்புரண்டு இருந்தது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் ஓசூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து 18-வது டேங்கருக்கு பின்னால் இருந்த 34 டேங்கர்களும் மாற்று என்ஜின் மூலமாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரெயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 18-வது டேங்கரில் இருந்த சக்கரங்கள் சரி செய்யப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.
இதனால் அந்த பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பெங்களூரு பனஸ்வாடியில் இருந்து சேலத்திற்கு இந்த சரக்கு ரெயில் சென்றுள்ளது. இந்த ரெயில் சேலம் ஐ.ஓ.சி.யில் இரந்து பெட்ரோல் நிரப்பி வருவதற்காக 52 காலி டேங்கர்களுடன் சென்றுள்ளது.
அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும் போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற பழுதான நிலையில் இருந்த 4 சக்கரங்கள் திடீரென்று தடம் புரண்டன.
தற்போது மீட்பு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் சீராக செல்கின்றன என்றார்.
இதனால் ஓசூர்-பெங்களூரு ரெயில்வே பாதையில் சென்ற பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ரெயில் வலது புறமாக தடம்புரண்டது. இடது புறமாக தடம் புரண்டு இருந்தால், பெரும் விபத்தை இது ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், இருப்புப் பாதை அருகே, இடது புறத்தில், ஏராளமான வணிக நிறுவனங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்ட டிரைவர், தடம் புரண்டு சுமார் 150 மீட்டர் அளவில், ரெயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தியுள்ளார். அவர், சரியான நேரத்தில், சரியான முடிவை, விரைவாக எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.