search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GOLDEN AGE"

    • ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.
    • கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

    அதில், பேசிய அனில் பலுனி கறியதாவது:-

    கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் காலகட்டம் ரெயில்வே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.

    ரெயில்களை மட்டுமே கனவு காணக்கூடிய பல பகுதிகளுக்கும் இப்போது ரயில்வே பாதை உள்ளது.

    ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி.
    • பரமக்குடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

     பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம பரமக்குடி காந்தி சிலை முன்பு தெற்கு நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவரும், தெற்கு தி.மு.க. நகர செயலாளருமான சேது கருணாநிதி வரவேற்றார்.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும், மக்க ளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வில் இருந்து மக்களை பாதுகாத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களுக்கு அட்டவணையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாதவைகளையும் மக்களுக்காக செய்து வருகிறோம்.

    குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.3 லட்சம் கோடியில் புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. அதன் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அரசியல் சட்டத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருப் பவர்கள் கவர்னர் மாளி கைக்கு தன்னை வைத்துக் கொண்டு திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என கவர்னர் கூறுகிறார். அப்படி என்றால் நாங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களும் காலாவதி ஆகிவிட்டதா?.

    தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியாகும். எத்தனையோ திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், வக்கீல் பூமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் குணசேகரன், ஜெயக்குமார், சக்தி, வக்கீல் கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, வாசு தேவன், அண்ணாமலை, போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர் கல்வியில் தி.மு.க.ஆட்சி பொற்காலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    • சமத்துவ கல்லூரியாக திகழ்கிறது

    திருச்சி:

    ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிடத் திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது

    ஐந்தாறு நாட்களாக சிறிது காய்ச்சல் இருந்தால் மருத்துவர்கள் அறிவுரையின் படி வெளியில் வரமுடியாத நிலையில் இருக்கிறேன். அதனால் திருச்சியில் ஜமால் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஜமால் முகமது கல்லூரி திருச்சியின் அடையாளம் ஆகும்.

    தீரர்களின் கோட்டம் திருச்சி அதில் தலைசிறந்த கல்வி கோட்ட மாக ஜமால் கல்லூரி இருக்கிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் கல்வி பயிலக் கூடிய சமத்துவ கல்லூரியாக ஜமால் முகமது கல்லூரி திகழ்கிறது.

    தந்தை பெரியாரோடு தொடர்புடைய ஜமால் இந்த கல்லூரிக்கான இடத்தை வழங்கினார். ஏழைகளுக்கு உயர் கல்வி கொடுப்பதற்காக தான் ஜமால் முஹம்மது கல்லூரி தொடங்கப்பட்டது. அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். இந்தியாவில் உள்ள நூறு கல்லூரிகளில் ஜமால் முகமது கல்லூரி ஒன்றாக இருக்கிறது.

    இந்த கல்லூரி மாணவர்கள் இயல், இசை நாடகம், தேசிய மாணவர் படை ,நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த கல்லூரி மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கடந்த 16 வருடமாக கல்லூரியின் தேசிய மாணவர்படை அணிவகுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

    மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் அதிக ஈடுபாட்டுடன் இந்த கல்லூரி விளங்குகிறது.

    என் பிறந்த நாளான மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் என் கனவு திட்டமாகும். தமிழக மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத்திறமை முதன்மையாக திகழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி காலம் உயர்கல்வியில் ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கோடு தமிழக அரசு செயல்படுகிறது.

    இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

    முன்னாள் மாணவர்கள் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்வது பாராட்டுகுரியது. விரைவில் உங்கள் கல்லூரிக்கு கட்டாயமாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    ×