என் மலர்
நீங்கள் தேடியது "Government officials"
- திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை தொடங்குகிறது.
- ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
திருவையாறு:
திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை 6-ந்தேதி மாலை தொடங்குகிறது.
தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு அரசு சார்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் ஏராளமா னோர் வருகையை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக திருவையாறு கடைத்தெருவில் சாலை யோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சம்பந்தப்பட்ட அரசுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தியாகராஜர் சுவாமிகளின் இசை விழா நடக்கும் தியாகராஜர் காலனி மற்றும் தியாகராஜர் சமாதிக்கு மெயின் சாலையில் இருந்து 3 வழியாகவும் ராமப்பா அக்ரஹாரம் காவிரிக் கரை சிமெண்ட் ரோடு வழியாகவும் என 4 வழிகளிலும் பொதுப்பாதை உள்ளது.
ஆனால், ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்த முடியாததோடு, இப்பாதையின் உட்புறம் உள்ள முகாசா கல்யாணபுரம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீரை குழாயிலிருந்து திறக்கவும் அடைக்கவும் பராமரிக்கவும் டேங்க் ஊழியர் பொதுப்பாதையிலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தனியார் வீட்டின் வழியாகவே சென்று வர வேண்டியிருக்கிறது.
இதனால் திருமஞ்சன வீதி, முத்து நாயக்கன் தெரு, செவ்வாய்க்கிழமை தெரு மற்றும் ராமப்பா அக்ரஹாரம் ஆகிய 4 தெருக்களிலிருந்து சுமார் 100 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.
எனவே ராமப்பா அக்ரஹாரம் வழியாக தியாகராஜர் சமாதிக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொது மக்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டிரைவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
- கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பட்டி மணிகாரம்பாளை யத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. இதற்கான உரிமையை புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து வாகன டிரைவரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது டிரைவர் அதிகாரி களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அதிகா ரிகள் கொடுத்த புகாரின் அடி ப்படை யில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் நிர்மலா விசார ணை மேற்கொ ண்டா ர்.
அப்போ து கல் குவா ரிக்கு முறை யான ஆவணம் இல்லை என வும், டிரை வர் சரியா ன பதில் அளிக்க வில்லை.
அதைத்தொ ட ர்ந்து போலீ சார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்,
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கலந்து கொண்டு தலா ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 162 மதிப்பில் மொத்தம் ரூ. 73 லட்சத்து 81 ஆயிரத்து 944 மதிப்பீட்டிலான 12 டிராக்டர்களின் சாவியை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாபரன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வி.ஏ.ஓ.கொலையை கண்டித்து வீ.கே.புதூர் தாசில்தார்அலுவலகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியின் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து
வீ.கே.புதூர் தாசில்தார்அலுவலகத்தின் முன்பு தாசில்தார் தெய்வ சுந்தரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மணல் மாபியா கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்க வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் துணை தாசில்தார், அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
- அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
- கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
- அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் குமார், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கோபால், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், நடராஜ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் உள்ளிட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பொங்கலூர் ஊராட்சியில் செல்வக்குமார் என்பவர் வீட்டின் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்வக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணை தலைவர் மீது அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுதுறை அதிகாரிகள் மீது எந்தவித விசாரணையும் இன்றி வழக்குப்பதிவு செய்ததை கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
- பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
- ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர்.
சென்னை:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி மற்றும் சாந்தி. இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.
இந்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சீனிவாச ராவ் ஆஜராகி பட்டா கேட்டு மனுதாரர்கள் மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் பரிசீலிக்க வில்லை. எந்த பதிலும் சொல்வதில்லை. அதனால் இந்த வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு மனுதாரர் தள்ளப்பட்டு உள்ளார் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடுத்த மனுவை அதிகாரிகள் சட்டப்படி பரிசீளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை 2 மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் செய்து முடிக்க வேண்டும். பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் பட்டா கேட்டும், பட்டா மாற்றத்திற்கும், நிலத்தை அளப்பதற்கும், மறு அளவீடு செய்வதற்கும், எல்லையை வரையறை செய்வதற்கும் பொதுமக்கள் ஐகோர்ட்டை நாட வேண்டியதுள்ளது. அதாவது, சிறு சிறு கோரிக்கைகளுக்காக பொது மக்கள், ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சிறு உத்தரவை பெற வழக்கு தொடர வேண்டியதுள்ளது.
அரசு அதிகாரிகள் படைபலம், பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்களே தவிர சாதாரண குடிமக்களுக்கு வேலை செய்வது இல்லை என்று இந்த வழக்கு மூலம் தெளிவாகிறது.
சில நேரங்களில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அரசு பிறப்பிக்கும் சுற்றறிக்கையை, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்கிறார்களா, பின்பற்றுகிறார்களா? என்பது கூட தெரியவில்லை. அதிகாரிகள் பணி செய்யாமல் இருப்பதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே இந்த உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும். அந்த உத்தரவை தலைமைச் செயலாளரும் பிற துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் இது போன்ற கோரிக்கை மனுக்களை காரணம் இல்லாமல் பரிசீலிக்காமல், நிலுவையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பாவார்கள். வழக்கை முடித்து வைக்கிறேன்
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்
- சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
- பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம்.
மகாராஷ்டிரா மாநிலம் lபுனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, "சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
அரசு அதிகாரிகள் பற்றி நிதின் கட்கரி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
- பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை உருவாக்கியுள்ளார்
அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
- அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
- சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.
அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.
அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.
அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.
இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம்.
- ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை வருகிற 7-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.30. மணிக்கு கலெக்டர் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலக கூடுதல் இயக்குநர்(நிர்வாகம்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை 3 நகல்களில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு வருகிற 7-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே குறை களைவு அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்.
எனவே ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை வருகிற 7-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.