search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallakurichi hooch tragedy"

    • கள்ளக்குறிச்சி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அவர் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்.

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அவர் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.
    • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

    முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், எஸ்பி, வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதன்பின், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்த உள்ளார். மேலும் கருணாபுரம் பகுதிக்கும் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.

    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
    • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    சென்னை:

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது.

    * காவல் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறார்கள்.

    * இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

    * சட்டசபையில் தி.மு.க. அரசு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

    * பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் குரல் கொடுக்க முடியவில்லை.

    * காவல் அதிகாரிகளுடன் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும் சாராய விற்பனையை தடுக்க முடியவில்லையா?

    * கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    * கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களை காப்பாற்றும் குறிப்பிட்ட மருந்து அரசு மருத்துவமனையில் இல்லை. போதிய மருந்து இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பச்சை பொய் கூறுகிறார். குறிப்பிட்ட மருந்து இல்லாததால் பல மரணம் நிகழ்ந்துள்ளது.

    * கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடப்பது என்ன? உண்மை மறைக்கப்படுகிறது.

    * கள்ளச்சாராயம் உயிரிழப்புகளை மறைக்க ஆட்சியராக இருந்த ஷ்வரன் குமார் முயன்றார். தி.மு.க. அரசின் நிர்பந்தத்தால் ஷ்வரன்குமார் கள்ளச்சாராய பலி இல்லை என பொய் கூறினார். 3 பேர் உயிரிழந்த போதே கள்ளச்சாராயம் தான் காரணம் என கூறியிருந்தால் பலி அதிகரித்திருக்காது. பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியதற்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் கூறியது தான்.

    * எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் ஆட்சியரை மட்டும் பணியிட மாற்றம் செய்தது ஏன்?

    * திமுகவினர் துணையோடு தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி வீட்டில் திமுக தலைவர்கள் புகைப்படம் உள்ளன.

    * கள்ளச்சாராயத்தால் 50 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

    * கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்கள் குறித்த அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?

    * எத்தனை பேர் சிகிச்சை, எத்தனை பேர் கவலைக்கிடம் என ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது. ஜிப்மர் போல் கள்ளக்குறிச்சி, சேலம் மருத்துவமனைகள் அறிக்கை வெளியிடாதது ஏன்?

    இவ்வாறு அவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.

    • கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 50 பேர் பலியானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    * கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மரில் 96 பேர் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் வந்துள்ளன. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

    * சிகிச்சை பெறும் பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என செய்திகள் வந்துள்ளன.

    * நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு.

    * மக்களின் பிரச்சனை சட்டமன்றத்தில் தான் பேச முடியும். இங்கு நடப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது.

    * கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?

    * சட்டசபை சபாநாயகர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.

    * கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடந்துள்ளது.

    * எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை அலேக்காக தூக்கி கைது செய்ய முயன்றனர்.

    * நிர்வாகத்திறனற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் என்பதால் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.

    இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

    முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
    • வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    கோவை:

    கள்ளக்குறிச்சி மாவட்ம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலாவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிகளவில் சேர்த்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    எனவே இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. வெளி நபர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    • அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை 100-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். அதில் பலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டனர்.

    இதில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாதவசேரியை சேர்ந்த நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ராமு (50), கருணாபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (60) ஆகியோர் இறந்தனர். நேற்று கோட்டமேட்டை சேர்ந்த ஆனந்தன் (50), துர்க்கம் ரோடு பகுதியை சேர்ந்த ரவி (60), கருணாபுரம் விஜயன் ( 59), பி. ராஜேந்திரன் (55), சேஷ சமுத்திரத்தை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மற்றொரு ஆனந்தன் (55), கோட்ட மேட்டை சேர்ந்த மனோஜ்குமார் (33), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (65), கருணாபுரத்தை சேர்ந்த நாகபிள்ளை (39) ஆகிய 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    மேலும் இன்று அதிகாலை கோட்டைமேடு பாலு (50), மற்றொரு ராஜேந்திரன் (60), மாதவன் சேரியை சேர்ந்த வீரமுத்து (33) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதில் 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது. அவர்களது உடல்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு முன்பும், பிணவறை முன்பும் உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

    மேலும் கண்ணபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), கள்ளக்குறிச்சி கோட்டை மேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), பார்த்திபன் (27), கருணாபுரம் மதன் (46), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணிவண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிகண்டன் (60), கார்த்திக்கேயன் (36) உள்பட 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 15 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 32 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

    இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கருப்பு உடை அணிந்து வந்தார்.

    இதையடுத்து, சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் உரையாற்றுவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இன்று கூடும் சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் கைதான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவட்ட நீதிமன்றம் கருணாபுரம் பகுதியில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களால் கைதானவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோருக்கு ஜூலை 5-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    இதனிடையே, மெத்தனால் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருதால் . சின்னதுரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளக்குறிச்சி, ஜிப்மர், சேலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக 165 பேர் சேர்ந்தனர். இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    * சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * 29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    * அரசு அறிவித்த நிவாரணம் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் இன்று நிவாரணம் வழங்கப்படும்.

    * பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * பார்வை குறைபாட்டுடன் வந்த 99 சதவீத நோயாளிகள் குணமடைந்து விட்டனர்.

    * கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    * கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும். சாராயம் அருந்திவிட்டோமோ என்ற சந்தேகம் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.

    • கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அதன்படி, சம்பவ இடத்தில் கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    • ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.

    நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×